Monday, January 23, 2012

பாணும் பஞ்சமும் ஸ்ரீமா அம்மாவும்.

நான் நினைக்கிறன் 1974 ம் ஆண்டுப் பகுதியெண்டு.அந்த நேரம் ஸ்ரீமா அம்மாவின்ர (ஸ்ரீமாவோ பண்டாரநாயக)ஆட்சிக்காலம்.காசு கையில இருந்தாலும் சாப்பாட்டுச் சாமான்கள் ஏதும் வாங்கேலாது.பஞ்சம்...பஞ்சம் பசி...பசி.நாங்கள் வீட்ல 5 பேர்.அப்பா கோயில் சேவகம் செய்ற சாதாரண தவில்காரர்.அப்பப்ப கையில கிடைக்கிற காசைக் கள்ளமில்லாம அம்மாட்ட கொண்டு வந்து குடுத்திடுவார்.வெத்திலை போடுறது மட்டும்தான் அவருக்குப் பிடிச்ச கெட்ட பழக்கம்.வெறும் தேத்தண்ணியும் வெத்திலைத்தட்டமும் இருந்தா அவருக்குப் பசிக்காது என்கிறாப்போல.அம்மா பாவம்.அப்பா கொண்டு வந்து குடுக்கிறதைப் பக்குவமா செலவழிப்பா.எங்களை எப்பவும் பட்டினியா விட்டதில்லை.மாதத் தொடக்கத்திலயே அரிசியும்,மாவும் மூட்டையா வாங்கிடுவா.சீனியும் கொஞ்சம்.

ஆனா கையில நக்கிக்கொண்டுதான் தேத்தண்ணி குடிக்கவேணும்.கையில ரேகை அழிஞ்சுபோச்செண்டு கதைச்சுக்கொள்ளுவம்.வீட்ல ஆடு இருந்தபடியா பால்தேத்தண்ணி குடிப்பம்.வீட்ல சின்னதா மரக்கறித் தோட்டமும் அம்மாவும் அப்பாவும் செய்வினம்.அதைவிட வாழை,தென்னை,மாமரம் இருந்தது.அதனால பஞ்சம்தான் எண்டாலும் பசி இல்லாம ஏதோ சாப்பிட்டுக்கொள்ளுவம்.அம்மம்மாவும் தாத்தா கொண்டுவாற கோயில் சாப்பாட்டுச் சாமான்கள் கொண்டு வந்து தருவா.

இப்பிடி இருக்கிற நேரத்திலதான் அந்தப் பஞ்சகாலம்.பஞ்சம் தானா வரேல்ல.நாட்டில கஸ்டத்தாலயும் இல்ல.ஸ்ரீமா அம்மா தமிழருக்கெண்டே தந்தது.தோட்டம் செய்யாதவையெல்லாம் ஒரு மரவள்ளிக்கிழங்கு மரமெண்டாலும் வச்சுத் தண்ணி ஊத்துவினம்.ஏனெண்டா காசு இருந்தாலும் மா,அரிசி,பாண் எல்லாம் வாங்கேலாது.எங்கட புண்ணியம் எங்கட வீட்டுக்குப் பின்னால தங்கமணி அக்காவின்ர ஒன்றுவிட்ட அண்ணா மரவேலை செய்பவர்.அவருக்குப் பலரையும் பழக்கம் இருக்கிறதால சங்கக்கடை சாமியண்ணையை நல்ல பழக்கம்.மா,பாண் அவர்தான் சாமியண்ணட்ட களவா வாங்கித் தாறவர்(தருவார்).

அப்ப மா,பாண் எல்லாம் கூப்பன் (வெட்டிச் சீட்டு,அல்லது சலுகைச் சீட்டு எனப்படுவது.ஒரு பொருளை வாங்கும் போது நுகர்வோருக்கும் தரப்படும் கழிவுக்கான சீட்டு) காட்டுக்குத்தான் தருவினம்.சொல்லப்போனா மரக்கறி தவிர எல்லாச் சாமான்களுமே கூப்பன் காட்லதான் சங்கக்கடையில தான் வாங்கேலும்.

தோட்டத்தில விளையிற செத்தல் மிளகாய்கூடக் கூப்பன்தான்.கூப்பன் இல்லாம இலவசமாக் கிடைக்கிறது பசி...பசி...பசி.வயித்தில அகோர நெருப்பு.கோவமும் கூட.எத்தைனை பேருக்குக் குடுக்காம அவையளின்ர வயித்தில அடிச்சுக் கூடின காசுக்குச் சாமான்களை விப்பினம்.நாங்களும் என்ன செய்றது.ஒரு வீட்டுக்கு குறிப்பிட்ட அளவு மா,பாண் தான் தருவினம்.களவா வாங்கினாத்தான் சமாளிக்கலாம்.காசு இல்லாத ஆ(ட்)க்கள் பாவம்தான்.

எங்கட வீட்லயும் மரவள்ளிக்கிழங்குத் தோட்டம் இருந்தது.காலமைச் சாப்பாடு மரவள்ளிக்கிழங்கா இருக்கும் ஒரு நாளைக்கு.அடுத்த நாளைக்கு இரவுச் சாப்பாடா மாறியிருக்கும்.மத்தியானம் மட்டும் சோறு சமைப்பா அம்மா.மாதத் தொடக்கத்திலதான் மீன்,றால் கிழமையில இரண்டு நாளைக்கு இருக்கும்.ஆட்டிறைச்சியெண்டா மாசத்துக்கு ஒருக்காத்தான்.சிலநேரம் இல்லை.வீட்ல கோழிகள் இருந்தபடியா முட்டை,இறைச்சியும் சாப்பிடுவம்.ஆனாலும் அவைக்கும் சாப்பாடு போடவேணுமே.சிலநேரம் அவைக்கு வருத்தமும் வந்திடும்.மரக்கறிச் சாப்பாடுதான் கூடுதலா சாப்பிடுவம்.நாங்கள் நடுத்தர வர்க்கம் எண்டு அப்பா அடிக்கடி சொல்லுவார்.

ஒருக்கா இப்பிடித்தான் மாசக்கடைசி.அவிச்ச மா கொஞ்சம்தான் இருந்திருக்குப்போல.அம்மா நல்லாச் சமைப்பா.அதுவும் சின்னமீன் மாங்காய் போட்டுக் குழம்பு(புளி இருக்காது)வச்சாவெண்டா அடிச்சுப் பிடிச்சுச் சாப்பிடுவம்.அதுவும் ஆளுக்கொரு மீன்துண்டுதான்.எண்ணித்தான் வாங்கிச் சமைப்பா.அம்மா ருசியாச் சமைக்கவேண்டாம் எண்டு நான் எப்பவும் நினைப்பன்.ஏனெண்டா இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம்போல இருக்கும் சிலநேரம்.

அப்ப ஒரு நாள் அரிசிமாப் புட்டு அம்மா அவிச்சவ.புட்டுக்கும் மீன்குழம்புக்கும் நல்ல சோக்காய்த்தான் (சுவையாய்)இருக்கும்.அதோட அம்மம்மா கொண்டுவந்த மாம்பழம்.இப்ப நினைச்சாலும் வாயூறுது.என்ர கடைசித் தங்கச்சி ரசனையோட சாப்பிட்டுவிட்டு அம்மா இன்னும் கொஞ்சம் புட்டு வேணும் எண்டு கேக்க,அம்மாவின்ர முகம் மாறினதும் தங்கச்சி வீட்டு நிலைமை தெரியாம அழுததும் இப்பவும் ஞாபகம் இருக்கு.

முக்கியமா நான் சொல்ல நினைச்சது விடியக்காலேல(அதிகாலை) 4-5 மணிக்கு பனிக்குளிர்ல சாமியண்ணைன்ர சங்கக்கடை வாசலில பாம்புபோல வளைஞ்சு நெளிஞ்சு சங்கக்கடை தொடக்கம் மாலா வீடு வரைக்கும் நிக்கிற மனிச வரிசையில இடிச்சு நெரிச்சுக்கொண்டு பாணுக்குக் கியூவில நிக்கிறது.கிழமையில இரண்டுதரம் இந்த மாதிரி நிக்கவேணும்.இதுக்குக் காலேல எங்களை எழுப்பி வெளிக்கிடுத்தி தேத்தண்ணியும் தந்து அனுப்புறது அம்மாவுக்கு பெரிய கஸ்டம்.

நான் இல்லாட்டி தம்பி போகவேணும்.ஒரு வீட்டுக்கு ஒரு பாண் தான்.அதுவும் 5 மணியில போய் கியூவில நிண்டா 6-7 மணிக்கிடையிலதான் பாண் வரும் தருவினம்(தருவார்கள்).சிலநேரம் பிந்தின கியூவில நிண்டா கிடைக்காமலும் போய்டும்.ஏனெண்டா அளவா ஒரு குறிப்பிட்ட அளவுதானாம் ஒவ்வொரு கடைக்கும் எண்டு சாமியண்ணை கத்துவார்.ஆனா களவா சின்னராசண்ணைக்குக் குடுப்பார்.அப்ப இதிலயிருக்கிற அநியாயம் எனக்குத் தெரியேல்ல.சிலநேரம் பாண் கிடைக்காத காலமும் இருக்கு.அப்ப உடன ஒரு மரவள்ளிக்கிழங்குதான்.அதைப் பிடுங்கி அவிச்சுச் சாப்பிட்டுப் பள்ளிக்கூடம் போகப் பிந்தியும்போகும்.பஞ்சப்பட்ட காலங்கள் கண்ணை இப்பவும் கலங்க வைக்குது.எங்கட அரசியல் ஒரு மாதிரியாக்கும்.அதாலதான் அப்பிடியெண்டு இப்ப விளங்குது.

பாண்கியூ எண்டு கதைக்கேக்க எல்லாம் ஒரு உருவம் கண்ணுக்க வந்து மறையும்.ஒரு மெலிஞ்சு வயிறு ஒட்டினபடி 45-50 வயசுக்காரர் ஒருத்தர் எனக்கு முன்னால இல்லாட்டி பின்னால நிப்பார் எப்பவும்.அவரின்ர வீடும் நான் போற வாற வழியிலதான் இருக்கு.அவரின்ர அம்மாவோ இல்லாட்டி அக்காவோ ஒரு ஆள் இருக்கிறா அங்க. அவரோட.அது ஒரு கொட்டில் வீடு.பஞ்சம் வயசைக்கூடக் கூட்டித்தான் காட்டினது எங்கட நாட்டில.ஒற்றை வேட்டியோடதான் எப்பவும் நிப்பார்.வெயில் காலமெண்டா சேட்டுப் போடமாட்டார்.வயிறே எரியுது பிறகெதுக்குச் சேட் எண்டு நினைப்பாரோ என்னவோ.வயிறு எக்கி முகத்தில பசி வாடித் தெரியும்.கொஞ்சம் கூனலா இருப்பார்.வெத்தில வாசமடிக்கும் எப்பவும்.பிறகு கொஞ்சக் காலத்துக்குப் பிறகுதான் தெரிய வந்தது அவர் ஒரு எழுத்தாளர் எண்டு.ஆரையும் விட்டு வைக்கேல்ல ஸ்ரீமா அம்மா காலத்துப் பஞ்சம்.

இப்பிடித்தான் ஒருக்கா எங்களுக்கு முந்தி கியூவில நிண்ட ஒரு வயசுபோன அம்மா ஒரு ஆள் பாண் வாங்கிக்கொண்டு போக போற போக்கில ஒரு ஆள் எத்திப் பறிச்சுக்கொண்டு ஓடினது இப்பவும் ஞாபகம் இருக்கு.அவ றோட்டின்ர கரையில கிடக்கிற மண்ணை அள்ளிப்போட்டு நாசமாப்போனவன் எண்டு திட்டிச் சத்தம்போட்டு அழுதா.பிறகு டக் எண்டு எழும்பி நடக்கத்தொடங்கிட்டா.ஒருவேளை பசி வந்திருக்கும்.இண்டைக்கு முழுக்க என்ன சாப்பாடு பட்டினிதான் எண்டு யோசிச்சுக்கொண்டு போனாவோ என்னவோ.

அவ அழுததை ஆராச்சும் (எவரேனும்)ஓவியர் பார்த்திருந்தா பசி எண்டு தலைப்புப் போட்டுக் கீறியிருக்கலாம்.காலமை வெயிலுக்கும் அவவின்ர கிளிஞ்ச றவுக்கை தெரியாமல் மூடின கந்தல் சீலையும்,கலைஞ்சு பறந்த தலைமுடியும்,பசி நித்திரை தாங்கின கண்ணும்,அவவின்ர வயசும் அப்பிடித்தான் எனக்குத் தெரிஞ்சது ஓவியமான அந்த அம்மா.

நிச்சயம் எனக்கு முன்னால நிண்டவர் எங்காச்சும் ஒரு குறிப்பிலயாச்சும் எழுதியிருப்பார் என்னைப்போல.எனக்கும் இவ்வளவு நாளும் எழுத்தில எழுதச் சொல்லவேணும் எண்டு நினைக்கேல்ல.இவள் பெடிச்சி எப்பாச்சும் என்னைக் கிளறிக் கிண்டி என் நினைவுகளைக் கொண்டு வந்திடுவாள்.எனக்கு அரசியல் கதைக்க விருப்பம் எண்டாலும் வேணாம் எண்டு எப்பவும் பேசாம இருக்கிறனான்.ஏனெண்டா கதைச்சுப் பி்ரயோசனமில்லை.அதோட நான் நாட்டுக்காக என்னத்தைச் செய்து கிழிச்சுப்போட்டன்.செய்யவெண்டு வந்த பெடியளை,எங்கட செல்லக் குஞ்சுகளை நாசமாப்போன உலக நாடுகள் எல்லாமாச் சேர்ந்து அழிச்சுப்போட்டாங்கள்.

இப்ப ஐ.நா அறிக்கை ஒண்டை வெளில கொண்டு வந்திருக்கு.இத்தனை ஆதாரங்களைக் காட்டினபிறகும் அது தாங்கள் செய்யேல்லையெண்டு இலங்கை அரசாங்கம் கோட்டுச் சூட்டுப் போட்டுக்கொண்டு ஐ.நா சபையில வெக்கமில்லாமச் சொல்லுது.இதில சனல் 4 பிரித்தானியாத் தொலைக்காட்சிக்கு நாங்கள் காலில தொட்டு நன்றி சொல்லவேணும்.குற்றம் செய்தவை தப்பக்கூடாது எண்டு 14.06.2011 அன்றுகூட ஒருமணித்தியால ஈழ அவலத்தின்ர விவரணக் காணொளியொண்டு இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில வெளியிட்டது.

இனி என்ன நடக்குதெண்டு எங்கட எதிர்காலம்தான் சொல்லவேணும்.இனி நாட்டில இருக்கிறவையால எதுவும் செய்ய முடியாது.வெளில இருக்கிற உலகத் தமிழர் புலம் பெயர்ந்த தமிழர்களாலதான் ஏதேனும் நல்லது நடக்கவேணும்.ஆனால் என்ன எங்கட சனங்களுக்கு அறிவு இருக்கிற அளவுக்கு மனசில ஒற்றுமை இல்லை.போட்டியும் பொறாமையும் நான் நீ என்கிற பேதமும் கிடக்கு.இது நான் அறிஞ்சவரைக்கும் காலகாலமாய் தமிழ்ச் சரித்திரக் கதைகளிலகூட நடந்திருக்கு.அப்ப இது பரம்பரை வியாதிபோல ஒரு வியாதி.மாறாது...திருத்தக் கஸ்டம் !

எப்பிடியோ பாதைதான் மாறியிருக்கே தவிர எங்கட நினைப்புகளும் தேவைகளும் அவலங்களும் பிரச்சனைகளும் மாறேல்ல.சிலநேரம் இன்னும்...இன்னும்...இன்னும்...இன்னும் கனகாலமாகலாம்.ஆனால் நல்லதே நடக்குமெண்டு என்ர நம்பிக்கை.ஆனால் அதைப் பாக்கவோ அதை அனுபவிக்க நான் இருக்கமாட்டன்.அந்த ஏக்கத்தோடதான் என்ர உயிர் இந்த மண்ணில போகும்.சரி பிறந்த மண்ணில சாகிற கொடுப்பினையாலும் எனக்கிருக்கே.கனபேருக்கு அதுவும் இல்லை !

சொல்லக் கேட்டுக் கனகாலம்.இப்போ குளிர்காலத்தில் ஞாபகம் வந்து எழுதவைத்தது.நினைவழியாமல் மீட்டு வைக்கிறேன்.

சில தவங்கள் வரங்களாக இப்போதும் எப்போதும் தவங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன !

Friday, January 13, 2012

திரும்பிப் பார்க்கிறேன் 2011.

சிரிப்போட ரொம்பக்காலமாகவே எனக்குப் பிடிச்ச வில்லுப்பாட்டோட தொடங்குவம்.

எல்லாரும் சுகம்தானே...எப்படி இருக்கீங்க.புதுவருஷம் பிறந்தாச்சு.நான் நல்ல சந்தோஷமா சுகமா சுதந்திரமா இருக்கேன்.சில விஷயங்களை மறக்காம இருக்கணும்ன்னு மட்டும் சாமிகிட்ட கேட்டுகிட்டு இருக்கேன்.முடிஞ்ச அளவுக்கு எல்லார்கிட்டயும் அன்பா இருக்கணும்.ஆனா கொஞ்சம் ஏமாந்ததனத்தைக் குறைக்கணும்.அனந்து முடிஞ்ச வருஷத்தை திரும்பிப் பார்க்கச் சொல்லியிருந்தார்.ஊருல மழை வெயில் எல்லாம் எப்பிடி.இங்க இப்ப குளிகாலம்.குளிர் இருக்கிற அளவுக்கு ஐஸ் இல்ல.உயரமான இடங்களிலயும் மலைகளிலயும் ஐஸ் கொட்டோ கொட்டுன்னு கொட்டி விளையாடுதாம்.ஐஸ் நிரம்பியிருக்கிறதும் ஒரு அழகுதான் !

இப்ப அம்மா அப்பா விளையாடின கிட்டிப்புள்,கில்லி,பாண்டி,நொண்டி இது மாதிரி விளையாட்டெல்லாம் போற போக்கில் பழங்கதையாப்போச்சு.
இன்னும் கொஞ்சக் காலத்தில பண்டைகால(?)சிறுவர் விளையாட்டுகள்னு பதிவுகள் எழுதவேண்டி வரும்.அதோட இப்ப பிள்ளைங்களுக்கு நம்ம விளையாட்டுக்களைச் சொன்னா நகைச்சுவையா சிரிப்பா இருக்கு.நாங்கள்லாம் மழையில நனைஞ்சு விளையாடினம்.காலில புண் வந்திச்சுன்னா அருவருப்பா இருக்கு அவங்களுக்கு.பொன்வண்டு,தும்பி,
வண்ணாத்திப்பூச்சி,தட்டாம்பூச்சின்னு கையில பிடிச்சு விளையாடுவோம்.
இப்ப பூச்சின்னா கட்டில் கதிரையில ஏறி நின்னு குய்யோ முறையோன்னு பயந்து அலறுறாங்க.காலத்தின் மாற்றங்களுக்கு வளைந்து கொடுக்கவேண்டியிருக்கோ!

சிறுவர்களுக்குப் பரிசுகள் கொடுக்கும்போது கூடியளவு புத்தகங்களைப் பரிசாகக் கொடுக்கப் பழகுவோம்.வாசிப்புப் பழக்கம் தொடரணும்.நம்மைப் பொறுத்தவரை வாசிப்புப் பழக்கம் குறைஞ்சிட்டே வருது.இங்க பாத்தா நடந்திட்டேகூட வசிச்சிட்டு நடக்கிறாங்க!

யப்பா.......

ஒரு கவிதையை எழுதி அழகாக்கி அது உங்களுக்கு விளங்குதோ விளங்கலியோ அதை ரசிச்சு மனசுக்கு திருப்தியா பதிவாக்கிடலாம்.இந்தக் கட்டுரை எழுதறது இருக்கே.கடவுளே ரதி அடிக்கடி எப்பிடித்தான் எழுதறாங்களோ.

சரி...எப்பவும்போல ஒரு குட்டிக் கதை....

ஒரு முறை ஒரு அரசனும் மந்திரியும் பணியாட்களுடன் வேட்டையாடப்
போனாங்களாம்.மந்திரிக்கு ஒரே சாமிபக்தியாம்.எது நடந்தாலும் அவர் எல்லாமே நல்லதுக்குன்னுதானாம் நினைப்பார்.காட்டில வேட்டையாடிட்டிருக்கிறப்போ அரசனுக்கு எதிர்பாராமல் ஒரு விரல் வெட்டுப்பட்டுப்போச்சாம்.அப்போது மந்திரி எது நடந்தாலும் நன்மைக்கேன்னு சொன்னாராம். அரசனுக்குக் கோபமா வந்திச்சாம்.மந்திரியை மண்ணுக்குள்ள தலை தெரியப் புதைக்கச் சொல்லியாச்சாம்.அதன்படியே செய்துட்டு எல்லோரும் புறப்பட்டுக் கொஞ்ச தூரம் போயிருப்பாங்களாம் திடீர்னு மலைவாசிகள் வந்து அரசனைப் பிடிச்சுட்டுப் போயிட்டாங்களாம்

சர்வ லட்சணம் பொருந்தியவர் அரசர் என்கிறதால அவரை அவங்களோட தெய்வத்துக்குப் பலி கொடுக்கக் கொண்டு போறாங்களாம்.அரசனுக்கு என்ன செய்றதுன்னு தெரியலையாம். மந்திரி இருந்திருந்தா ஏதாவது புத்திசாலித்தனமா செய்திருப்பாரேன்னு வருத்தப்பட்டிட்டாராம்.
இதோ குருசாமி வந்துட்டார்.பலி கொடுக்கிறதுக்கு முன்னாடி மன்னரைத் தயார்ப்படுத்த எல்லாம் செய்யறாங்க.அப்பத்தான் தெரியுது அவர் விரல் துண்டானது.காலங்காலமா இருந்து வர்ற நம்பிக்கையின் படி அங்கத்தில குறை இருக்கிறவங்களை சாமிக்குப் பலி கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி மன்னரை விடச்சொல்லிடுறாங்க.மன்னர் தப்பினோம் பிழைச்சோம்னு ஓடி வந்துட்டாராம்.மந்திரி சொன்ன மாதிரி தன் விரல் துண்டானது கூட நன்மையா மாறி தன் உயிரைக் காப்பாத்தினதை புரிஞ்சுகிட்டாராம்.மந்திரியோடு சந்தோஷமா நாட்டுக்குத் திரும்பினாராம்.

இது போலவே சாதாரணமா குட்டிக் குட்டிக் கஷ்டங்களும் பெரிசாத் தெரியுது
எங்களுக்கு.ஆனா அது ஏதோ ஒரு பெரிய விஷயத்தில இருந்து எங்களைக் காப்பாத்தறதுக்காக வந்த துன்பமாக் கூட இருக்கலாம்.அதனால"இதுவும் கடந்து போகும்"னு துன்பம் வரும்போது நினைச்சுக்குவோம்.எல்லாமே நல்லதா மாறும்....நடக்கும்.
நம்பிக்கையோடு வாழ்வோம்.எதிர்பார்ப்புக்களைக் குறைத்தால் மனதில் நின்மதியும் சந்தோஷமும் கூடுமோ என்னமோ !

அப்புறம்...

எனக்கு இப்பல்லாம் இணையம் தவிர வாசிப்புப் பழக்கம் குறைஞ்சுபோச்சு.வாசிக்க ஆசையிருந்தாலும் நேரம் மிக மிகக் குறைவு.ஆனால் ஒவ்வொருநாளும் சூப்பர் சிங்கர்,
குற்றம் நடந்தது என்ன,ஞாயிற்றுக்கிழமைகளில் நீயா நானாவும்,ஒரு வார்த்தை ஒரு இலட்சமும் பார்க்கத் தவறமாட்டேன்.

இதைவிட இணையங்களில் பலமொழிப்படங்களையும் விமர்சிக்கிறார்கள்.யூடியூப்ல தேடிக் கிடைத்தால் எந்த மொழிப்படமானாலும் தமிழ்ப்படங்களைவிட விரும்பிப் பார்க்கிறேன்.
மலையாளம்,ஹிந்தி,கொரியா,ஸ்பானிஷ்,ஆபிரிக்கா,சிங்களம்,ஆங்கிலம்,யப்பான்னு எல்லாப் படமும்தான்.கிட்டடியில "மகதீரா"என்கிற படம் பார்த்தேன்.புனர்ஜென்மக் கதை. பிடிச்சிருந்திச்சு.விளங்குதான்னு சின்னப்பிள்ளைத்தனமா கேள்வியெல்லாம் கேப்பீங்க.
நடிப்பு,முக அசைவுகள்,நிகழ்ச்சிகளை வச்சே கதையை புரிஞ்சுக்குவேன்.நான் கெட்டிக்காரியென்று சின்னப்பிள்ளையிலேயே அப்பா சொல்லியிருக்கிறார்.

தமிழ்ப்படம்ன்னா ஏழாம் அறிவு,எங்கேயும் எப்போதும்,வர்ணம் கொஞ்சம் ரசிச்சுப் பாத்தேன்.சிரிக்கிற படம்...தெரில.பாக்கல.பிடிச்ச பாட்டுன்னா ஏழாம் அறிவில முன் அந்திச் சாரல் நீ....அடிக்கடி முணுமுணுக்க வைக்குது.கொலைவெறின்னா உங்களுக்குக் கொலைவெறி வந்திடும்.நானும் சொல்லமாட்டேன்.அந்தப் பாட்டுக்கு அடிச்ச அதிஷ்டம்
எந்த இலக்கியத்துக்கோ,கம்பனுக்கோ,பாரதிக்கோ,கண்ணதாசனுக்கோ கிடைக்கல !

அப்புறம்...

இந்த வருஷம் மடிக்கணணியில இருந்து மேசைக்கணணி வாங்கினேன்.நான் ஒரு மணிக்கூட்டுப் பைத்தியம்.20-25 வச்சிருக்கேன்.அதெல்லாம்ஒரு நாளைக்குப் படமா எடுத்துப் பதிவில போடணும்ன்னு இருக்கேன்.இந்த வருஷம் கொஞ்சம் விலைகூடின றொலக்ஸ்(ROLEX)வாங்கிட்டேன்.

அப்புறம் பாரிஸ்,கனடா/மொன்றியல் போனேன்.அங்கே ஒரு மாதாகோவில்,பழைய மொன்றியல் எனக்கு நல்லாப் பிடிச்ச இடமா இருந்திச்சு.அங்க நிறையக் காலத்துக்குப்பிறகு தியேட்டரில மங்காத்தா படமும் பாத்தேன்.

இதனால என் சம்பளத்துக்கு என்மேல சரியான கோவம்.தன்னை நான் சரியா ஒழுங்காக் கவனிக்காம இருக்கேனாம்.சரி...சரி.இனி பத்திரமா வச்சிருக்கப் பழகிக்றேன்னு சொல்லி வைக்கிறேன்.ஆனாலும் கஸ்டம்.சரி நல்ல விஷயங்களும் செய்றேன்தானே.வாழத்தான் பணம் தேவையே தவிர பணமே வாழ்க்கையில்லை.போதும் போதும்.

நல்ல விஷயம்ன்னு சொல்லத்தான் நான் இப்பல்லாம் 3 மாசத்துக்கு ஒருமுறை இரத்தம் கொடுக்கிறது ஞாபகம் வருது.இதுவரைக்கும் மூணுதரம் கொடுத்திட்டேன்.கொடுத்தப்போ நான் சொன்னேன்."நிறையக்காலம் இந்த விருப்பம் இருந்திச்சு.ஆனா என் நாட்டில நிறையப்பேர் போரினால நோயில தவிச்சிட்டு இருக்காங்க.சுவிஸ் பணக்கார நாடுதானே.நான் கொடுக்கிற இரத்தம் என்போன்ற நாடுகளுக்குப் போகுமான்னு தெரில.அதனால அக்கறைப்படாம இருந்திட்டேன்னு."அதுக்கு அவங்க..."இல்ல தப்பு அப்பிடி நினைக்கக்கூடாது.ஒரு விபத்து நடக்குதுன்னா.அப்போ பணக்கார நாடு ஏழை நாடுன்னு இல்ல.அந்தசமயத்தில உயிர்தான்.
அந்த உயிருக்கு இரத்தம் உடனடியாகத் தேவைப்படும்.இதுதான் இதில முக்கியம்ன்னு சொன்னாங்க."...எனக்கும் சரின்னு படுது.சரிதானே.

அப்புறம் நான் செத்தால் என் முழு உடம்பையுமே வைத்தியக்கல்வி படிக்கிற வைத்தியசாலைக்கு எழுதிக் கொடுத்திட்டேன்.அதைப் பதிவிலயும் வச்சிட்டேன்.அவங்களுக்கு நிறைய சந்தோஷம்.எனக்கு மிகப் பிடித்த விஷயம் செய்த என்னை எனக்கே பிடிச்சிருக்கு.இனி யாருக்கும் என்னைப் பிடிக்கலன்னா கவலைப்படமாட்டேன்.!

அப்புறம்...

மிகப்பெரிய சந்தோஷம்ன்னு எதைச் சொல்ல.வருத்தம்ன்னு எதைச் சொல்ல.எல்லாமே வருது போகுது.கால்ல அடிபட்டாலும் வருத்தம்ன்னுதான் சொல்றோம்.மனசில அடிச்சாலும் அதேதான் வலி.கடைசியில வடுக்களும் அதே அளவுதான்.பிரயாணங்கள்,சாப்பாடுகள் வந்த சொந்தங்கள்,தொங்கிநிற்கும் உறவுகள்ன்னு எல்லாமே சந்தோஷம்தான்.ஆனால் நான் தொலையிற வரைக்கும் எதையும் தொலைக்கமாட்டேன்.இது உறுதி.அப்பா அடிக்கடி சுகமில்லன்னு சோர்ந்துபோய் படுத்துக்கிறார்.இது கொஞ்சம் கவலை.இதுதான் வாழ்க்கைன்னு மனம் பக்குவப்பட்டாலும் பாசம்தான் ஜெயிக்குது.அப்பாபோல ஒரு உறவை உருவாக்கி வச்சிருக்கேன் கனவில.... மனசில.!

சாதனைன்னு எதுவும் பண்ணினதா இல்ல.அதற்கான சந்தர்ப்பம் இந்த நாட்டில குறைவு.பார்க்கலாம்.நிறையக் கவிதைகள் எனக்குத் திருப்தியா எழுதறேன்.திண்ணை,உயிரோசை,அதீதம் போன்ற தளங்களில்வாற
அளவுக்குச் சந்தோஷம்.உப்புமடச் சந்தியும் நல்லாவே இருக்கு.ஆனா என்
முன்னோர்களைத்தான் சிலர் எதிர்க்கிறார்கள்.கண்டிப்பா அவங்களை விட்டிட்டு இருக்கமாட்டேன்.

இதில ஒண்ணு கண்டிப்பா சொல்லி வைக்கணும்.நான் பதிவுகள் போடத்தொடங்கிய ஒரு வருட காலத்தின் பின்னர் ப்ரியமுடன் வசந்த் அப்பப்போ என் கவிதைப் பக்கங்களுக்கு வந்துபோவார்.அவர்தான் முதன் முதலாக,இளமைவிகடனுக்கு அனுப்பச்சொல்லி ஊக்கம் தந்தார்.அதன்பிறகுதான் நான் வேறுதளங்களுக்கு என் கவிதைகளை அனுப்பத் தொடங்கினேன்.வசந்துக்கு என் மனம் நிறைந்த நன்றி இந்தப் பதிவின்மூலம் சொல்லிக்கொள்கிறேன் !

இதோடு இன்னுமொன்றும்.டி.வி.ஆர் என்று எல்லோராலும் செல்லமாய் அழைக்கப்படும் T.V.ராதாகிருஷ்ணன் ஐயா என்னிடம் மெயில் ஐடி கேட்டிருந்தார்.ஏன் என்று தெரியாமல் அவர்மீதுள்ள மதிப்பால் ஏன் என்றே யோசிக்காமல் மின்னஞ்சல் போட்டிருந்தேன்.திரும்பி வந்த மின்னஞ்சல் நெகிழ்வான அதிசயம் எனக்கு.என் அப்பாவிடமிருந்துகூட அப்படி ஒரு வாழ்த்துக் கிடைக்கவில்லை.என் ஏக்கம் தீரவைத்ததுபோல ஐயாவிடமிருந்து என் எழுத்துக்குண்டான அங்கீகாரத்தோடு நிறைவான வாழ்த்துக் கிடைத்திருந்தது.இந்த நிகழ்வையும் மறக்கவே முடியாது !

இன்னுமொன்றும் இருக்கிறது.02.10.2011 ல் சிங்கப்பூரில் வெளிவரும் தமிழ் முரசு என்கிற பத்திரிகையில் நான் தமிழ்மண நட்சத்திரப் பதிவின்போது எழுதிய “கள்ளக்கோழி” என்கிற நகைச்சுவைச் சிறுகதையை அச்சில் வெளியிட்டிருக்கிறார்கள்.எப்படி இந்தக்கதை இவர்கள் கண்ணில் பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை.யாராவது அனுப்பியிருப்பார்களா.இல்லை இவர்களே என் பதிவை வாசித்து எடுத்துக்கொண்டார்களா தெரியவில்லை.பத்திரிகையில் வாசித்த தோழி கலாதான் அதை எனக்குசொல்லி அந்தப் பக்கத்தை அனுப்பியும் வைத்தார்.அந்தப் பத்திரிகைக்கும் என் தோழி கலாவுக்கும் மிக்க நன்றி !

வருத்தமான விஷயங்கள்ன்னா நாட்டுச் செய்தி எனக்கு எப்பவுமே வருத்தம்தான்.ஒரு உறவு கிடைக்கிறது.சில உறவு விலகிப்போகிறது.இதுவும் வாழ்க்கைதான்.ஆனால் மனசில உறையாத இரத்தக் கசிவு !

கடைசியா...

கதையோட கருத்தும் சேர்த்துச் சொல்றது நல்ல விஷயம்.அப்பதான் கொஞ்ச நாளாவது என்னை நினைப்பீங்க.இந்தக் கதையும் அப்படித்தான்..

ஜெர்மன்காரர் ஒருவர் சிற்ப வேலை நடந்து கொண்டிருந்த ஒரு கோயிலுக்குப் போனாராம்அங்க ஒரு சிற்பி கடவுள் சிலை வடிச்சிட்டிருந்தாராம்.அவர் பக்கத்தில் அதே மாதிரி இன்னொரு சிலை இருந்துச்சாம்.அவருக்கு ஒரே ஆச்சரியம் !

"ஏன் ஒரேமாதிரி இரண்டு சிலை?"ன்னு.. சிற்பிகிட்ட கேட்டாராம் !

சிற்பி "இல்லை ஒரு சிலைதான் தேவை ஆனால் முதல்ல செய்ததில கடைசி நேரத்தில ஒரு குறை விழுந்திடிச்சு.அதனாலதான் புதுசா செய்திட்டிருக்கேன்."ன்னு சொன்னார்.

ஜெர்மன்காரர் முதல் சிலையை ஆராய்ஞ்சு பார்த்திட்டு....."
உடைஞ்சதா எதுவும் தெரியலயே என்ன குறைன்னு?"..... கேட்டார்.

சிற்பி "மூக்குப் பகுதியில் ஒரு கீறல்." நிமிர்ந்து கூட பார்க்காம பதில் சொல்லிட்டு தன் வேலையில் மூழ்கிட்டார்.

"சிலை எங்க நிறுவப் போறீங்க"

சிற்பி "இருந்தபடியே உயரத் தூண் ஒன்றைக் காட்டினார்"

"அவ்ளோ உயரத்திலிருந்தா இந்தச் சின்னக் கீறல் யாருக்குத் தெரியப் போகுது?"

சிற்பி நிமிர்ந்து பார்த்துச் சிரிச்சுக்கிட்டே சொன்னார்.... "எனக்குத் தெரியுமே.."

இணையத்தில படிச்சது.இந்தக் கதை சொல்லும் நீதியெனன்னு சொல்லுங்க.உண்மையாவே எனக்கும் தெரில !

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP