Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Monday, March 05, 2012

ஐடியா மணிக்குப் பொன்னாடை போர்த்துறோம்ல !

பாரிசில் வாழும் மாத்தியோசி புளொக்கின் தலைவர் முன்னாடி ஓட்டை வடை நாரயணன்,நிரூபனின் அல்லக்கை,ரஜீவன் என்கிற பெயரில் பின்னாடி இப்போ ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW (பாருங்கோ மக்களே எங்கயெல்லாம் படிச்சு எத்தனை டிப்ளோமா எண்டு) என்கிற பெயரில் கறுப்புக் கண்ணாடியோடு லாச்சப்பலில் ஒளிந்துகொண்டிருக்கும் அவருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்க யோசிச்சிருக்கிறோம்.ஏனென்றால் மிகவும் பயனுள்ள பெண்களுக்கான வீட்டுக்குரிப்புகளை அல்லி வழங்கிருயிருக்கிறார்.

அந்தப் பதிவைப் படிச்ச சந்தோஷத்தில உடம்பு முழுக்க மூளையென்று நினைச்சு தெரியாமல் சொல்லிட்டேன் பொன்னாடை போத்துறன் எண்டு.அதுக்குப்பிறகுதான் தெரியுது அதிராவின் பூனைக்குட்டியாரின்ர 5 பவுண் தங்கச்சங்கிலிக்கு அவர்மேல வழக்கு நடக்குது என்று.ஆனால் அவர்தான் எடுத்தாரென்று ஓரளவு பிடிபட்டும் கிட்டக் கிட்ட வந்தும்.... பிறகு பிடிபடாமல் போறார்.இதில அப்பா யோகா,அம்பலத்தார் ஐயா,காட்டான் மாமா,நிரூ,கந்து,தனிமரம் நேசன் எல்லாரும் சம்பந்தப்பட்டிருபார்கள் என்றே சந்தேகிக்கப்படுகிறார்கள்.அதால அவர்தான் என்று நிரூபிக்க முடியாமல் இணையப் பதிவர் நீதிமன்றம் தடுமாறுகிறது.
இதுதான் அந்தச் சங்கிலியாம்.ஆனா இது 5 பவுணைவிடக் கூடவாயிருக்குமே !

இவர் சங்கிலி எடுத்தவர் என்று நிரூபிச்சிட்டால் நிரூ முள்ளுக்காவடி எடுக்கிறதாய் அதிரா சொல்ல,முள்ளுக் காவடி எடுக்கும் சம நேரத்தில அக்காச்சி அதிராவும் அக்காச்சி ஹேமாவும் அலகு குத்தி பாற் செம்பு எடுப்பீனம் என்று வள்ளி தெய்வானை மேல சத்தியம் செய்து சொல்றேன் என்று நிரூவும் (என்னைக் கேட்காமலேயே ) நேர்திக்கடனை முருகனுக்கு அள்ளிக் குடுக்கிறார்கள்.இப்பிடியெல்லாம் நேர்த்திக்கடன் கடனாக் கிடக்கு.எப்பிடியும் முருகனுக்கு ஆப்புத்தான்.ஏமாந்துதான் போகப்போறார்.அதோட வள்ளிக்கும் தெய்வானைக்கும் சங்கிலி,சேலை என்று பொய்யான லஞ்சம் எல்லாம் ஒருபக்கமும் கிடக்கு.
கருப்புக் கண்ணாடி(கறுப்பு கண்ணாடி சமாதான காலத்தில புதூர் நாகதம்பிரான் கோயில் திருவிழாவில வாங்கின எட்டு வருசம் பழைய கண்ணாடி என்றும்...நப்பி! நீயி...உந்த இடப் பெயர்வுக்கையும் கண்ணாடியை கைவிட மனமில்லாம பொக்கற்றுக்குள் கொண்டு வந்தது எனக்கெல்லோ தெரியும்!என்றும் நிரூ சொல்கிறார்.) இரகசியம் என்னடாவெண்டா காதலிச்சுக் காதலியின் கரைச்சல் தாங்காம ஓடி ஒளிஞ்சு பரிஸ் - லாச்சப்பல் பக்கம் ஒளிஞ்சு இருக்கிறாராம்.இது நான் கேள்விப்பட்டது.ஐடியா http://www.tamilaathi.com/2012/03/blog-post_03.html மணியத்தாரின் இந்தப் பதிவும் சொல்லுது பாருங்கோ.

இனிமே யாருமே காதலிக்காதேங்கோ.காதலிச்சா இதையெல்லாம் மெயிண்டேன் பண்ணவேணும்.இல்லாட்டி காதலி உங்களை மதிக்கமாட்டாளென்று.ஆனா இவரை காதல் செக்சனில இண்டர்போல் போலீஸ் தேடுதாம்.அதுக்குத்தான் கருப்புக்கண்ணாடி.இதெல்லாம் பழைய சிவாஜி,எம்.ஜி.ஆர் படங்களில ஆள் அடையாளம் தெரியாம இருக்க கன்னத்தில ஒரு மச்சம் ஒட்டிவிட்டா ஆள் அடையாளம் மாறும் என்கிறமாதிரித்தான் இந்தக் கருப்புக் கண்ணாடி.

1) ஒட்டுசுட்டாணில ஒண்டிப்புலி சின்ராசு மகள் மேல கை வைச்சு வாங்கி கட்டினது...

2) வட்டக்கச்சி விதானையாரின் பொட்டையை ஏமாத்தினது...

3) கனககுஜலாம்பாள் அப்டீங்கற பொண்ணை லவ் பண்ணும் போது அந்தப் பொண்ணை நிரூ கல்யாணம் பண்ணிக்கிட்டா ஆயிரம் தேங்காய் உடைக்குறதாகூட வேண்டிக்கிட்டது....

4) ஒருவாட்டி குஞ்சுப் பரந்தனுக்கு போயி தேங்காய் கட்டிக் கொண்டு வாடா என்று ரெண்டு சாக்கு கொடுத்து இவனோட அம்மா அனுப்பி வைச்சா.இந்த நரி...தொதல் கிண்ட தேங்காய் வாங்கி வர கொடுத்தனுப்பிய காசில திருவருட் பிள்ளையார் படமாடத்தில போயி கோணாவில் கவிதாவின் போட்டோவை பிரேம் பண்ணிக் கொண்டு வந்ததோட தேங்காய் வாங்க கொடுத்து அனுப்பிய காசையும் செலவளிச்சுப் போட்டு வந்திட்டுது! இந்த லட்சணத்தில நேர்த்தி வைச்சு இவன் தேங்காய் உடைக்கிறதாவது!

இப்பிடி இப்பிடியே இவரது பிரதாபங்களை அடுக்கிக்கொண்டு போகலாம்.பிரான்ஸ் பிகருகள் பற்றி துஷி சொல்றதாச் சொல்லிட்டு நட்புப் பாலத்தை இறுக்கிப் பிடிச்சு வைச்சிருக்கிறதுக்காக்கப் பிறகு சொல்லாம விட்டிட்டார் !

இவற்றோடு....இன்னும் இந்தப் பன்னாடையை பர்சனலா அறிந்தவன் என்ற ரீதியில் சொல்றேன்....என்று நிரூ இவரைப் பற்றிச் சொல்வதாவது.....

இவன் ஒரு வசதியான திருடன்! இவன் லோக்கல் திருடன் இல்லை!
கோப்பை கழுவுறான் என்று நீதிபதிகிட்டயே பொய் சொல்லிட்டானே இந்த நாதாரி !

மக்களே இவன் பிரான்ஸில ஒரு மொழி பெயர்ப்பாளரா ஒரு கூலான அறைக்குள் இருந்து ஒர்க் பண்றான்! இவனுக்கு இங்கிபீசு பிரெஞ்சு அத்துப்படி! அதோட இந்த நாயி ஒரு பகுதி நேர ஆங்கில நா(வா)த்தி & எக்கவுண்டன்!

பிரான்ஸில வசதியா இருந்திட்டு,தன் திருட்டை நியாயப்படுத்தக் கோப்பை கழுவுறதா பொய் சொல்றான்!

இதெல்லாம் இவரது காதல் சாகசங்களும் இன்னும் பிறவும்...(இதெல்லாம் சொன்னவர் நாற்றுப் பதிவளர் நிரூ.ஆட்டோ அனுப்பிறதென்றால் அவர் பக்கம் அனுப்பவும்.)

இவ்வளவு பிராதுகள் இவர் பக்கம் இருந்தாலும்....எதிர்வரும் காலங்களில் வாழும் கலை அமைப்பின் செயற்பாடுகளை இளைஞர்களுக்கான நாளைய அமைப்புடன் இணைத்து முன்னெடுப்பது குறித்தும் இருவரும் கலந்து ஆலோசித்துள்ளாரென்றும் அறியக் கிடைத்துள்ளது.

எனவே இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவரும் இணைய உறுப்பினருமான முன்னாடி ஓட்டைவடை நாரயணன் பின்னாடி ஐடியா மணி அவர்களுக்குச் சிறந்த சமூக சேவைகளை முன்னெடுப்பதாகப் பாராட்டியே அவருக்குப் பொன்னாடை போர்த்துகிறோம்.இந்த இடத்தில் மன்னிப்போடு ஒன்றும் சொல்லிக்கொள்கிறோம்.அவர் இலண்டனிலதான் வச்சுத்தான் பொன்னாடை போர்த்தச் சொல்லிக் கேட்டவர்.(இதிலயும் நிரூ சொன்னதாவது பன்னாடைக்குப் பொன்னாடையோ என்று.)ஆனா அதிரா தேம்ஸ் நதிக்கரையில டெண்ட் அடிச்சுப் பூனையாரோடு காத்திருப்பதாகப் பிந்திய செய்திகள் கிடைச்சிருக்கு.அது அவ தீக்குளிக்கிறதுக்கோ (தீ அணைக்கிற லாரிக்கும் அறிவிச்சிருக்கிறாவம்)இல்லாட்டி மணியத்தாரைப் பிடிச்சுத் தண்ணிக்குள்ள தள்ளவோ எண்டு இன்னும் சரியாக அறியப்படவில்லை.

எது எப்பிடியானாலும் இவரது எல்லாச் சேவைகளையும் பாராட்டி இன்று அண்ணன் சிந்தனை பொறித்த பொன்னாடையை தமிழீழ தமிழகத்து உணர்வாளர்கள் நாங்கள் போர்த்திக் கௌரவிக்கிறோம்.(மணியத்தாருக்கே இப்ப இனித்தான் அறிவிக்கப்போறோம்.)அத்தனை இணையத் தமிழ் உறவுகளின் வாழ்த்தை அவருக்குத் தெரிவிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

நிரூ,ஹேமாவின் ஒருங்கிசைவில் பொ(ப)ன்னாடையோடு காத்திருக்கும் உலக இணையத் தமிழர் ஒருங்கிணைப்புச் சங்கம் !

Thursday, July 22, 2010

கேள்விகளும் அர்த்தங்களும்.

அட கடவுளே ! இப்படியுமா அர்த்தங்கள்
இருக்க முடியும் ?இத்தனை வயசு
வரைக்கும் தெரிஞ்சிக்கமலே பாழ் பண்ணிட்டேனே!
ஹும்!!! இனிமே புலம்பி என்னா பண்ணறது?

“ஆழ்கடல்ல இருக்கிறதைக்கூட கண்டு பிடிச்சுடலாம்.ஆனா ஒரு பெண்ணோட மனசுல இருக்கிறதை கண்டே பிடிக்க முடியாது”ன்னு சொல்லுவாங்க.அது ஓரளவுக்கு உண்மைதாங்க.அவங்க என்ன நினைக்குறாங்களோ அதைச் சூசகமா வார்த்தைகள்'ல வெளிப்படுத்துவாங்க.ஆனா நம்மளாலதான் அதை புரிஞ்சுக்க முடியறது இல்லை. உதாரணத்துக்கு அவங்க சூசகமா சொல்லக்கூடியா வார்த்தைகளையும் அதுக்குப் பின்னணியில இருக்கிற “உண்மையான”அர்த்தத்தையும் இப்போ நாம பார்க்கலாம்.

1)உங்களுக்கு என்ன பிடிக்கும்?

இந்தக் கேள்வியை அவங்க கேட்டாங்கன்னா உடனே நாம வரிஞ்சுகட்டிக்கிட்டு நமக்கு பிடிச்சதை எல்லாம் ஒப்பிப்போம்.ஆனா இந்தக்கேள்விக்குப் பின்னாடி இருக்கிற அர்த்தம் என்ன தெரியுமா?

உனக்கு பிடிக்கிற விஷயத்தை எல்லாம் என்னால ஃபாலோ பண்ண முடியாது !

2)அந்தப் பொண்ணு எவ்ளோ அழகா புடவை கட்டி இருக்கா இல்ல ?

அப்படின்னு எதாவது ஒரு விளம்பரத்தை பார்த்திட்டு சொன்னா உடனே நாம் அந்த பொண்ணோட அழகைப்பத்திதான் யோசிப்போம்.ஆனா அவங்க நம்மகிட்ட சொல்லவர்றது என்னன்னா

அந்த கடைக்கு கூட்டிட்டு போய் அதே மாதிரி புடவையை எனக்கும் வாங்கிக்குடுடா !

3)இண்ணைக்கு என்ன சமையல் பண்ணட்டும் ?

இந்தக் கேள்வியைக் கேட்டுட்டா அடடா நமம பொண்டாட்டி நம்மகிட்ட கேட்டுகிட்டுத்தான் சமையலே செய்யுறாளே அப்படின்னு நீங்க புளங்காகிதம் அடையக்கூடாது.

டேய்! இன்னைக்கு உன்னைக் கேட்டுதான் சமைக்குறேன்.மிச்சமாச்சுன்னா என்னால நாய்'க்கு எல்லாம் துக்கிப்போட முடியாது.எல்லாத்தையும் நீதான் சாப்பிட்டு தொலைக்கணும் !

4 )உங்களுக்கு எத்தனை ஃபிரண்ட்ஸ் இருக்காங்க ?

இந்த கேள்விக்கு அர்த்தம் என்ன தெரியுமா ?

உங்க பிரண்ட்ஸுங்கன்னு சொல்லி ஒருத்தன் கூட வீட்டுக்கு வரக்கூடாது.உனக்கு வடிச்சுக் கொட்டுறதே தண்டம்.இதுல அவனுங்களுக்கு வேற என்னால் வடிச்சு கொட்ட முடியாது !

5)என்னமோ பண்ணுங்கன்னு சொல்லுவாங்க சிலநேரம் !

பரவாயில்லை நம்ம சாய்ஸுக்கு விட்டுட்டாளே ன்னு நீங்க யோசிச்சீங்கன்னா உங்களை விட இளிச்சவாயன் இந்த உலகத்துலேயே இருக்க முடியாது.

நீயெல்லாம் திருந்தவே மாட்டே.எனக்கு இது பிடிக்கலை.இதுக்கு மீறி எதாவது செஞ்சேன்னா மவனே தொலைச்சு கட்டிடுவேன் !

6)எல்லாத்தையும் நான் பொறுப்பா பார்த்துக்குறேன்ன்னு சொன்னா !

இந்த வார்த்தைய சொன்ன உடனே உங்களுக்கு உச்சி குளிர்ந்திடுமே.அப்படியெல்லாம் சின்னப்புள்ளத்தனமா யோசிக்கக்கூடாது.இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

எப்ப பார்த்தாலும் தண்டத்துக்கு ஊர் சுத்திகிட்டு இருக்குறதே உனக்கு பொழப்பா இருக்கு.இதுல குடும்பத்தை எங்கே கவனிச்சுக்க போறே?மொதல்ல சம்பளக்கவரை என் கையில கொடு !

7)நம்ம பையன் ஸ்கூல்'ல பேரண்ட்ஸ் மீட்டிங் இருக்காம் !

அக்கறையா நம்ம கூப்பிடுறாங்கன்னு நீங்க தப்பா திங்க் பண்ண கூடாது.இந்த வார்த்தக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

உன் புள்ளையோட லட்சணத்தை நீயும் தெரிஞ்சுக்க வேணாம்.ஸ்கூல்ல மிஸ்’கிட்ட நான் மட்டும் திட்டு வாங்கினா போதுமா?.நீயும் ஒரு நாள் வந்து வாங்கிப்பாரு.அப்பத் தெரியும்.

8)இந்த ஃபோன்'ல சரியாவே சிக்னலே கிடைக்கமாட்டேங்குது !


இந்த வார்த்தையை சொன்ன உடனே ஏதாவது நெட் வொர்க் பிராப்ளமா இருக்கும்ன்னு நீங்க சொல்லுவீங்க.ஆனா அவங்க என்ன சொல்ல வர்றாங்க தெரியுமா ?

நட்டு கழண்டவனே! நீ மட்டும் ஸ்டைலா ஃபோன் வாங்கி வெச்சிருக்கே.எனக்கு மட்டும் செகண்ட் ஹாண்ட்'ல அதுவும் இத்துப்போன மொபைல் வாங்கிக் கொடுத்திருக்கே.மொதல்ல இதை மாத்திட்டு Iphone வாங்கிக்கொடு !

9)இந்த நகைபோட்டா கழுத்துல ஒரே அரிப்பா இருக்குன்னு சொன்னா !


அப்படின்னா உடனே கழட்டி வெச்சிடுன்னு நீங்க சொல்லக்கூடாது !

கவரிங்'ல வாங்கிக்கொடுத்தா இப்படித்தான் இருக்கும்.நகை வாங்கிக்கொடுத்து எத்தனை வருஷம் ஆச்சு? மொதல்ல ஒரு நகைக்கடைக்கு கூட்டிட்டு போய் 916 ஹால்மார்க் நகையா வாங்கிக்கொடு !

10)எவ்ளோ வேலைதாங்க நீங்க செய்யுவீங்க ?

உடனே நம்ம மேல எவ்ளோ பரிதாபப்படுறாங்க'ன்னு நீங்களா ஒரு செண்டிமெண்ட் உருவாக்கிக்காதீங்க.

அட அறிவுகெட்டவனே...உன் வேலையுண்டு வீடு உண்டுன்னு வந்து சேர வேண்டியதுதானே.கண்டவன் பிரச்சனையில எல்லாம் நீ ஏன் தலையிட்டு ஓவரா சீன் போடுற...அப்படிங்கிறதைத்தான் அவங்க சொல்லாம சொல்றாங்க.

11)ஏங்க! இந்த சத்யம் தியேட்டர் எங்கே இருக்கு?

நீ மட்டும் உன் ஃபிரண்ட்ஸுங்களோட போய் கண்ட படத்தையும் பார்த்திட்டு வந்திடுறே.என்னை எப்பாச்சும் அந்த தியேட்டருக்கு எல்லாம் கூட்டிட்டு போயிருக்கியா...

அப்படின்னு உங்களை கேட்கறதுக்கு பதிலாத்தான் இந்தக் கேள்வியை அவங்க கேட்குறாங்க.

நண்பர்களே... இந்த அர்த்தத்தை எல்லாம் மனப்பாடம் பண்ணி வெச்சுக்குக்குங்க. ஒருவேளை உங்க மனைவியோ இல்லை காதலியோ இந்த மாதிரி கேள்வியை உங்ககிட்ட கேட்டாங்கன்னா அதுக்கு என்ன அர்த்தம் ன்னு தெரியாம நீங்க முழிக்க கூடாது இல்லை.அதுக்குத்தான் சொன்னேன்...!

நான் ஒண்ணுமே சொல்லலங்கோ.உங்க எல்லாருக்கும் சொல்லச் சொல்லி ஒரு நியூஸ் வந்திருக்கு.சொல்லிட்டேன் ஆளை விடுங்க !

எதிர்ப்பதிவு இங்கே...

Monday, June 21, 2010

இந்த நாய் உண்மையில் என்னதான்....நினைக்கிறது !

ம்ம்...இன்னிக்குள்ளே முடிக்க மாட்டான் போல இருக்கே.எனக்கு எவ்ளோ வேலை இருக்கு !


டேய்....கொஞ்சம் மெதுவா நடடா லூசுப் பயலே.உன் பின் பக்கத்தை பாக்க சகிக்கல எனக்கு !


இதை யாரு உங்க அப்பாவா எடுத்துட்டு வருவாரு.ஏன் தான் இப்பிடி வாலாட்டிக்கிட்டு திரியறியோ !


ஐயோ...ய்....யோ அப்படியே கொள்ளைக்காரன் மாதிரியே இருக்கியேடா !


டெய்லி குளின்னு சொன்னா கேக்குறியா என்ன ஒரு கப்பு.உங்கூட சேர்ந்ததாலயோ என்னமோ என்கிட்டயும் ஒரு நாத்தம் !


நீ சைலண்ட்டா நில்லு...நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன் !


ஒழுங்க கட்டுடா எருமை.இப்பிடி நின்னா எனக்கு உச்சா போகணும்போல இருக்கு !


ஏம்மா இப்பிடி விழுந்து எழும்புற.இந்தா மருந்து கொண்டு வந்திருக்கேன்.நீ நினைக்கிற மாதிரி இல்ல அவன்.கண்ட பொண்ணுங்க பின்னாலயும் நாயா அலையிறான் !


இந்த வெத்து சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.இதையெல்லாம் அவன்கிட்டயே வச்சுக்கோ !


என்னதான் தேடித் தொலைக்கிற.சீக்கிரமா....சீக்கிரமா.
தண்ணி அடிக்கணும்ல !


இதெல்லாம் அவங்க கிட்டே சொல்லிடுவீங்க....ப்ளீஸ் ப்ளீஸ்!



எனக்கு மின்னஞ்சலில் வந்த தமிங்கிலீஷ் மடல்.

Wednesday, December 31, 2008

இனிதே வரும்...2009

ன் அன்பு நிறை நண்பர்களுக்கு,
மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ம்ம்ம்....பாரடா மச்சான்,அந்தப் பெட்டையள் இரண்டும் போற போக்கை.எங்களையெல்லாம் திரும்பியும் பாக்கமாட்டினம் போல!
சிலுப்பிக்கொண்டு போகினம்.பெரிய எண்ணம்தான்
அவையளுக்கு.அங்கால...அடுத்த போஸ்ட் மரத்துக்குக் கீழ கோட் சூட் போட்டவங்கள் யாராவது நிப்பாங்கள்.அந்தப் பெடியளோட மட்டும் பேசுவினமாக்கும்!

ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP