Tuesday, August 09, 2011

மாய உலகம் தேடவிட்ட மூன்றுக்கள்.

சின்னச் சின்னக் கேள்விகளானாலும் நம் மனதை வெளிப்படுத்தும் கேள்விகள்.வலைத்தளத்திற்குப் புதியவர் மாய உலகம்.அவரின் அன்பு அழைப்பை ஏற்று இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.

எனக்கொரு குணம்.எனக்கு அப்பாவென்றால் உயிருக்குள் உயிர்போல.அதனால என்னோடும் பழகும் - பார்க்கும் எவரிடமும் அப்பாவைத் தேடுவேன்.ஒரு ஆள் இன்னொருத்தராக இருக்காது என்று அறிந்தாலும் தேடிக்கொண்டேயிருக்கிறேன்.

அதுபோல எம்மிடமும் சிலர் தம் உறவுகளைத் தேடலாம்.அவர்கள் நினைவில் அல்லது கனவில் அடிக்கடி வரும் ஒரு முகமாகவோ அல்லது குணம் ஒத்துப்போகிறமாதிரியோ நாம் இருந்தால் அதுகூட ஒரு சந்தோஷம்தான்.ஒருவரது தேடலின் பங்கில் நாமும் இருப்பது மனதிற்கு நிறைவாகவே இருக்கும் !

இயற்கை எப்போதும் வெற்றிடங்களை விடுவதில்லை.தேடல் என்றும் வீண்போகாது. நம்பிக்கையுடன் தேடினால் தேடியது கிடைக்கும்.

தேடுதல் கூடக்கூட வேகம்,சுறுசுறுப்பு தானாகவே கூடும்.தேடுவதை அடையும்வரை உடலும் உயிரும் சிந்தாது சிதறாது.இயங்கிக் கொண்டேயிருக்கும்.வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்தி என்றும் இளமையாக மனிதனை வாழவைப்பது தேடல்தான்.

1) எனக்குப் பிடித்த முதல் மூன்று...!
எனக்குப் பிடித்தது எதுவும் நீண்ட காலங்கள் என்னோடு நிலைப்பதில்லை.அதனால் பிடிக்கிறது என்று ஆசையோடு எனக்கே எனக்கென்று உறுதிப்படுத்திக்கொள்வதில்லை.

# அப்பா !
# தொலைத்துவிட்ட ஆனால் என்னோடு கலந்துவிட்ட ஒரு நட்பான காதல் !
# தனிமையில் மெல்லிய இசை !

2 ) விரும்பாத மூன்று !
# பிச்சையெடுப்பவர்களையும் பசியோடு இருப்பவர்களையும் காண்பது !
# நீண்ட நேரக் குழந்தையின் அழுகை !
# தமிழர்கள் தமிழ் ஊடகங்களில்(சினிமா,அரசியல் போன்றவை)
ஆங்கிலத்தில் பேட்டி கொடுப்பது !

3) என் பார்வையில் மூன்று...!
# ஒழுக்கமான நேர்மையான வாழ்க்கை !
# உண்மையான பேச்சு !
# அளவான உணவு !

4) பிடித்த உணர்வுகள் மூன்று...!
# அன்பு !
# கருணை !
# இரக்கம் !

5) பிடிக்காத மூன்று உணர்வுகள்...!
# பயம் !
# பொய் !
# இரட்டைவேடம் !

6) முணுமுணுக்கும் குளியலறைப் பாடல் மூன்று...!
# வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...
# மாலையில் யாரோ மனதோடு பேச....
# அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...

7) பிடித்த தமிழ்ப்படம் மூன்று...!
# சிப்பிக்குள் முத்து!
# காதல் கதை!
# ஊமை விழிகள் !

8) அன்புத் தேவைகள் மூன்று...!
# அப்பாவின் குரல் !
# நிலாக்குட்டியின் பிரெஞ்சுப் பாட்டு !
# இன்னுமொன்று சொல்லமுடியாதது !

9) வலிமையை அழிப்பன மூன்று...!
# அன்பு !
# கோபம் !
# தாழ்வு மனம் !

10) குட்டித்தத்துவம் மூன்று...!
# தேவைகள் இல்லாதபோது துயரங்களும் இருப்பதில்லை !
# அச்சம் இதயத்தின் சிறை !
# அன்பாய் இருந்தாற்கூட அதிகமாக யாரும் எதையும் கொடுத்தால் ஏற்காதே!

11) பயமுறுத்தும் பயம் மூன்று...!
# அடுத்தவர் மனம் நோகாமல் பேசுகிறேனா என்று பயம் !
# இழந்துவிடுவேனோ என்று ஏற்றுக்கொள்ளப் பயம் !
# மறதிநிலை வந்துவிடுமோ என்று பயம்

12) என்றும் நிலைக்க விரும்பும் ஏக்கம் மூன்று...!
# என் சுயநினைவு !
# என் உடற்சுகம் !
# என் குணம் !

13) கற்றுக்கொள்ள விரும்பும் விஷயம் மூன்று...!
# வேற்றுமொழி கலக்காத தமிழ்ப்பேச்சு !
# கொஞ்சம் சமூக சேவை !
# நினப்பதை எல்லாம் எழுத்தில் பதிப்பது !

14) வெற்றிபெற வேண்டிய மூன்று...!
# இறப்பாவது என் மண்ணில் கிடைத்தால்...அதுவும் மூப்பு வரமுன் !
# இழந்துவிட்ட அன்பு மீண்டும் கிடைத்தால்...அதுவும் அதே அன்போடு !
# மூன்று வேளையும் ஒழுங்காகச் சாப்பிட்டு...நேரத்தோடு என்னைமறந்த தூக்கம் !

15) சோர்வு நீக்க வழி மூன்று...!
# இசைகேட்டால்....
# உடற்பயிற்சி செய்தால்...(நான் செய்வதில்லை)
# நேரத்தோடு நித்திரை விட்டெழுந்தால்...

16) எப்போதும் தயாரா இருக்கவேண்டிய மூன்று...!
# துணிந்த மனமும் உடல்நிலையும் !
# தேவைக்கேற்ற பணம் !
# கூப்பிட்டால் ஓடி வரும் ஒரு உண்மையான நல்ல உதவி !

17) வாழ்வின் முன்னேற்றத்திற்கான மூன்று...!
# ஒற்றுமை !
# சோர்வில்லா முயற்சி !
# முடியாது என்கிற சொல்லை மறத்தல் !

18) வாழ்வின் அவசியங்கள் மூன்று...!
# பெற்றவர்கள் - பெரியவர்களின் ஆசீர்வாதம் !
# நிதானம் !
# அறிவு !

19) மனதில் பதிந்திருக்கும் தத்துவங்கள் மூன்று...!
# இதுவும் கடந்து போகும் !
# உரிமைகள் நாமாக எடுத்துக்கொள்வதே தவிர கேட்டு எவரும் தரப்போவதில்லை !
# குழந்தை கேட்கும் ‘ஏன்?’ தான் தத்துவத்தின் சாவி.

20) புரிந்தும் குழம்பும் குழப்பங்கள் மூன்று...!
# நீ...!
# நான்...!
# நாம்...!

21) வாழ்வில் புரியாதது...!
# கடவுள் !
# மனிதன் !
# மரணம் !

22) எரிச்சல்படுத்தும் நபர்கள் சம்பவங்கள் மூன்று...!
# பெருமிதமாகப் பொய் சொல்பவர்கள் !
# குழந்தைகளுக்கு அர்த்தமில்லாத பெயர்கள் வைக்கும் பெற்றோர்கள் !
# தாய் நாட்டைப் பழித்துப் பேசுபவர்கள் !

23) பிடித்த பாடகர்கள் மூவர்...!
# பி.பி.ஸ்ரீனிவாஸ் - சந்திரபாபு
# S.P.பாலசுப்ரமணியம் - K.J.ஜேசுதாஸ்
# சுசீலாம்மா - ஜானகியம்மா

24) இனிமை மூன்று...!
# குழந்தையின் சிரிப்பும் சிணுங்கிச் செல்ல அழுகையும் !
# எதிர்பாராத நேரத்தில் காதலனின் இனிமையான முத்தம் !
# அப்பா கூப்பிடும் குட்டியா !

25) சாதித்தவர்கள் சந்தித்த இடைஞ்சல்கள் மூன்று...!
# வறுமை !
# கிண்டல் பேச்சுக்கள் !
# குடும்பச் சிக்கல்கள் அதாவது நிச்சயம் பிரிவு !

26) பிடித்த பழமொழிகள் மூன்று...!
# எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம்.இன்னொன்று மெளனம் !

# எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.
ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது !

# வயிற்றைப் பற்றியே நினைப்பவன் தலையைப் பட்டினி போடுகிறான் !

ஓடிப்போகாதேங்கோ.ஒரு கதை சொல்லி முடிக்கிறன்.ஒரு வெள்ளைக்காரர் ஆப்பிரிக்காவில ஆதிவாசிகளின்ர கிராமங்களுக்கு நடுவால நடந்துகொண்டிருந்தாராம்.அவருக்கு ஏதாவது புதுசு புதுசா செய்யிறது எண்டா நிறையப் பிடிக்குமாம்.அவருக்கு நல்லா நீச்சல் தெரியுமாம்.போற வழியில ஒரு பெரிய ஏரியைக் கண்டாராம். அந்த ஏரியைக் கடந்தால் அடுத்த பக்கக் கிராமத்துக்குப் போய்டலாமாம்.அப்ப அவருக்கு நீந்தியே மற்றப்பக்கம் போகவேணுமெண்டு ஆசை வந்திட்டுதாம்.உடனேயே உடுப்புகளையெல்லாம் கழட்டி வச்சிட்டு நீந்தவும் தொடங்கிட்டாராம்.

அப்ப....பாதித்தூரம் போய்க்கொண்டிருக்கேக்க ஆதிவாசிகள் கை தட்டிச் சத்தம்போட்டு ஏதோ எதோ சொல்லிக் கத்திக்கொண்டு இருந்திச்சினமாம்.அவருக்கு இன்னும் குஷி கூடிப்போச்சு இப்ப.அவர் குத்துக்கரணம்(குட்டிக்கரணம்) போட்டுத் தலைகீழா எல்லாம் நீந்திக் காட்டினாராம்.அப்பிடியே கொஞ்ச நேரத்தில கரைக்கு வந்தாராம்.ஆதிவாசிகள் முதுகில தட்டி உற்சாக பாணம் எல்லாம் கொடுத்துப் பாராட்டிச்சினமாம்."நல்லா நீந்தி விளையாட்டுக் காட்டுறியள்.உங்களுக்குப் பயமேயில்லை....."எண்டு திரும்பத் திரும்பச் சொல்லிச்சினமாம்.

"அட இதென்ன....நான் இன்னும் நிறைய வித்தைகள் தண்ணிக்குள்ள காட்டுவன்.கை கால் அடிக்காம மிதந்துகொண்டுகூடப் போவன்"...எண்டு சொன்னாராம்.

"அட...வெள்ளைக்காரரே எங்களுக்கும் இதெல்லாம் அத்துப்படி.ஆனால் இந்த ஏரிக்குள்ளமட்டும் நீந்தமாட்டம்.நீந்தினதுக்காக உங்களைப் பாராட்டேல்ல.இந்த ஏரிக்குள்ள நிறைய முதலைகள் இருக்கினம்.பயமில்லாம நீந்தி வந்தீங்களே.அதுக்காகத்தான் உங்களைப் பாராட்டினம்"....எண்டு சொல்லிச்சினமாம்.வெள்ளைக்காரருக்கு மூச்சு ஒருக்கா நிண்டு வந்திச்சாம்.பாவம்.எண்டாலும் தலை தப்பிச்ச சந்தோஷமெல்லோ !

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP