நான் நினைக்கிறன் 1974 ம் ஆண்டுப் பகுதியெண்டு.அந்த நேரம் ஸ்ரீமா அம்மாவின்ர (ஸ்ரீமாவோ பண்டாரநாயக)ஆட்சிக்காலம்.காசு கையில இருந்தாலும் சாப்பாட்டுச் சாமான்கள் ஏதும் வாங்கேலாது.பஞ்சம்...பஞ்சம் பசி...பசி.நாங்கள் வீட்ல 5 பேர்.அப்பா கோயில் சேவகம் செய்ற சாதாரண தவில்காரர்.அப்பப்ப கையில கிடைக்கிற காசைக் கள்ளமில்லாம அம்மாட்ட கொண்டு வந்து குடுத்திடுவார்.வெத்திலை போடுறது மட்டும்தான் அவருக்குப் பிடிச்ச கெட்ட பழக்கம்.வெறும் தேத்தண்ணியும் வெத்திலைத்தட்டமும் இருந்தா அவருக்குப் பசிக்காது என்கிறாப்போல.அம்மா பாவம்.அப்பா கொண்டு வந்து குடுக்கிறதைப் பக்குவமா செலவழிப்பா.எங்களை எப்பவும் பட்டினியா விட்டதில்லை.மாதத் தொடக்கத்திலயே அரிசியும்,மாவும் மூட்டையா வாங்கிடுவா.சீனியும் கொஞ்சம்.
ஆனா கையில நக்கிக்கொண்டுதான் தேத்தண்ணி குடிக்கவேணும்.கையில ரேகை அழிஞ்சுபோச்செண்டு கதைச்சுக்கொள்ளுவம்.வீட்ல ஆடு இருந்தபடியா பால்தேத்தண்ணி குடிப்பம்.வீட்ல சின்னதா மரக்கறித் தோட்டமும் அம்மாவும் அப்பாவும் செய்வினம்.அதைவிட வாழை,தென்னை,மாமரம் இருந்தது.அதனால பஞ்சம்தான் எண்டாலும் பசி இல்லாம ஏதோ சாப்பிட்டுக்கொள்ளுவம்.அம்மம்மாவும் தாத்தா கொண்டுவாற கோயில் சாப்பாட்டுச் சாமான்கள் கொண்டு வந்து தருவா.
இப்பிடி இருக்கிற நேரத்திலதான் அந்தப் பஞ்சகாலம்.பஞ்சம் தானா வரேல்ல.நாட்டில கஸ்டத்தாலயும் இல்ல.ஸ்ரீமா அம்மா தமிழருக்கெண்டே தந்தது.தோட்டம் செய்யாதவையெல்லாம் ஒரு மரவள்ளிக்கிழங்கு மரமெண்டாலும் வச்சுத் தண்ணி ஊத்துவினம்.ஏனெண்டா காசு இருந்தாலும் மா,அரிசி,பாண் எல்லாம் வாங்கேலாது.எங்கட புண்ணியம் எங்கட வீட்டுக்குப் பின்னால தங்கமணி அக்காவின்ர ஒன்றுவிட்ட அண்ணா மரவேலை செய்பவர்.அவருக்குப் பலரையும் பழக்கம் இருக்கிறதால சங்கக்கடை சாமியண்ணையை நல்ல பழக்கம்.மா,பாண் அவர்தான் சாமியண்ணட்ட களவா வாங்கித் தாறவர்(தருவார்).
அப்ப மா,பாண் எல்லாம் கூப்பன் (வெட்டிச் சீட்டு,அல்லது சலுகைச் சீட்டு எனப்படுவது.ஒரு பொருளை வாங்கும் போது நுகர்வோருக்கும் தரப்படும் கழிவுக்கான சீட்டு) காட்டுக்குத்தான் தருவினம்.சொல்லப்போனா மரக்கறி தவிர எல்லாச் சாமான்களுமே கூப்பன் காட்லதான் சங்கக்கடையில தான் வாங்கேலும்.
தோட்டத்தில விளையிற செத்தல் மிளகாய்கூடக் கூப்பன்தான்.கூப்பன் இல்லாம இலவசமாக் கிடைக்கிறது பசி...பசி...பசி.வயித்தில அகோர நெருப்பு.கோவமும் கூட.எத்தைனை பேருக்குக் குடுக்காம அவையளின்ர வயித்தில அடிச்சுக் கூடின காசுக்குச் சாமான்களை விப்பினம்.நாங்களும் என்ன செய்றது.ஒரு வீட்டுக்கு குறிப்பிட்ட அளவு மா,பாண் தான் தருவினம்.களவா வாங்கினாத்தான் சமாளிக்கலாம்.காசு இல்லாத ஆ(ட்)க்கள் பாவம்தான்.
எங்கட வீட்லயும் மரவள்ளிக்கிழங்குத் தோட்டம் இருந்தது.காலமைச் சாப்பாடு மரவள்ளிக்கிழங்கா இருக்கும் ஒரு நாளைக்கு.அடுத்த நாளைக்கு இரவுச் சாப்பாடா மாறியிருக்கும்.மத்தியானம் மட்டும் சோறு சமைப்பா அம்மா.மாதத் தொடக்கத்திலதான் மீன்,றால் கிழமையில இரண்டு நாளைக்கு இருக்கும்.ஆட்டிறைச்சியெண்டா மாசத்துக்கு ஒருக்காத்தான்.சிலநேரம் இல்லை.வீட்ல கோழிகள் இருந்தபடியா முட்டை,இறைச்சியும் சாப்பிடுவம்.ஆனாலும் அவைக்கும் சாப்பாடு போடவேணுமே.சிலநேரம் அவைக்கு வருத்தமும் வந்திடும்.மரக்கறிச் சாப்பாடுதான் கூடுதலா சாப்பிடுவம்.நாங்கள் நடுத்தர வர்க்கம் எண்டு அப்பா அடிக்கடி சொல்லுவார்.
ஒருக்கா இப்பிடித்தான் மாசக்கடைசி.அவிச்ச மா கொஞ்சம்தான் இருந்திருக்குப்போல.அம்மா நல்லாச் சமைப்பா.அதுவும் சின்னமீன் மாங்காய் போட்டுக் குழம்பு(புளி இருக்காது)வச்சாவெண்டா அடிச்சுப் பிடிச்சுச் சாப்பிடுவம்.அதுவும் ஆளுக்கொரு மீன்துண்டுதான்.எண்ணித்தான் வாங்கிச் சமைப்பா.அம்மா ருசியாச் சமைக்கவேண்டாம் எண்டு நான் எப்பவும் நினைப்பன்.ஏனெண்டா இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம்போல இருக்கும் சிலநேரம்.
அப்ப ஒரு நாள் அரிசிமாப் புட்டு அம்மா அவிச்சவ.புட்டுக்கும் மீன்குழம்புக்கும் நல்ல சோக்காய்த்தான் (சுவையாய்)இருக்கும்.அதோட அம்மம்மா கொண்டுவந்த மாம்பழம்.இப்ப நினைச்சாலும் வாயூறுது.என்ர கடைசித் தங்கச்சி ரசனையோட சாப்பிட்டுவிட்டு அம்மா இன்னும் கொஞ்சம் புட்டு வேணும் எண்டு கேக்க,அம்மாவின்ர முகம் மாறினதும் தங்கச்சி வீட்டு நிலைமை தெரியாம அழுததும் இப்பவும் ஞாபகம் இருக்கு.
முக்கியமா நான் சொல்ல நினைச்சது விடியக்காலேல(அதிகாலை) 4-5 மணிக்கு பனிக்குளிர்ல சாமியண்ணைன்ர சங்கக்கடை வாசலில பாம்புபோல வளைஞ்சு நெளிஞ்சு சங்கக்கடை தொடக்கம் மாலா வீடு வரைக்கும் நிக்கிற மனிச வரிசையில இடிச்சு நெரிச்சுக்கொண்டு பாணுக்குக் கியூவில நிக்கிறது.கிழமையில இரண்டுதரம் இந்த மாதிரி நிக்கவேணும்.இதுக்குக் காலேல எங்களை எழுப்பி வெளிக்கிடுத்தி தேத்தண்ணியும் தந்து அனுப்புறது அம்மாவுக்கு பெரிய கஸ்டம்.
நான் இல்லாட்டி தம்பி போகவேணும்.ஒரு வீட்டுக்கு ஒரு பாண் தான்.அதுவும் 5 மணியில போய் கியூவில நிண்டா 6-7 மணிக்கிடையிலதான் பாண் வரும் தருவினம்(தருவார்கள்).சிலநேரம் பிந்தின கியூவில நிண்டா கிடைக்காமலும் போய்டும்.ஏனெண்டா அளவா ஒரு குறிப்பிட்ட அளவுதானாம் ஒவ்வொரு கடைக்கும் எண்டு சாமியண்ணை கத்துவார்.ஆனா களவா சின்னராசண்ணைக்குக் குடுப்பார்.அப்ப இதிலயிருக்கிற அநியாயம் எனக்குத் தெரியேல்ல.சிலநேரம் பாண் கிடைக்காத காலமும் இருக்கு.அப்ப உடன ஒரு மரவள்ளிக்கிழங்குதான்.அதைப் பிடுங்கி அவிச்சுச் சாப்பிட்டுப் பள்ளிக்கூடம் போகப் பிந்தியும்போகும்.பஞ்சப்பட்ட காலங்கள் கண்ணை இப்பவும் கலங்க வைக்குது.எங்கட அரசியல் ஒரு மாதிரியாக்கும்.அதாலதான் அப்பிடியெண்டு இப்ப விளங்குது.
பாண்கியூ எண்டு கதைக்கேக்க எல்லாம் ஒரு உருவம் கண்ணுக்க வந்து மறையும்.ஒரு மெலிஞ்சு வயிறு ஒட்டினபடி 45-50 வயசுக்காரர் ஒருத்தர் எனக்கு முன்னால இல்லாட்டி பின்னால நிப்பார் எப்பவும்.அவரின்ர வீடும் நான் போற வாற வழியிலதான் இருக்கு.அவரின்ர அம்மாவோ இல்லாட்டி அக்காவோ ஒரு ஆள் இருக்கிறா அங்க. அவரோட.அது ஒரு கொட்டில் வீடு.பஞ்சம் வயசைக்கூடக் கூட்டித்தான் காட்டினது எங்கட நாட்டில.ஒற்றை வேட்டியோடதான் எப்பவும் நிப்பார்.வெயில் காலமெண்டா சேட்டுப் போடமாட்டார்.வயிறே எரியுது பிறகெதுக்குச் சேட் எண்டு நினைப்பாரோ என்னவோ.வயிறு எக்கி முகத்தில பசி வாடித் தெரியும்.கொஞ்சம் கூனலா இருப்பார்.வெத்தில வாசமடிக்கும் எப்பவும்.பிறகு கொஞ்சக் காலத்துக்குப் பிறகுதான் தெரிய வந்தது அவர் ஒரு எழுத்தாளர் எண்டு.ஆரையும் விட்டு வைக்கேல்ல ஸ்ரீமா அம்மா காலத்துப் பஞ்சம்.
இப்பிடித்தான் ஒருக்கா எங்களுக்கு முந்தி கியூவில நிண்ட ஒரு வயசுபோன அம்மா ஒரு ஆள் பாண் வாங்கிக்கொண்டு போக போற போக்கில ஒரு ஆள் எத்திப் பறிச்சுக்கொண்டு ஓடினது இப்பவும் ஞாபகம் இருக்கு.அவ றோட்டின்ர கரையில கிடக்கிற மண்ணை அள்ளிப்போட்டு நாசமாப்போனவன் எண்டு திட்டிச் சத்தம்போட்டு அழுதா.பிறகு டக் எண்டு எழும்பி நடக்கத்தொடங்கிட்டா.ஒருவேளை பசி வந்திருக்கும்.இண்டைக்கு முழுக்க என்ன சாப்பாடு பட்டினிதான் எண்டு யோசிச்சுக்கொண்டு போனாவோ என்னவோ.
அவ அழுததை ஆராச்சும் (எவரேனும்)ஓவியர் பார்த்திருந்தா பசி எண்டு தலைப்புப் போட்டுக் கீறியிருக்கலாம்.காலமை வெயிலுக்கும் அவவின்ர கிளிஞ்ச றவுக்கை தெரியாமல் மூடின கந்தல் சீலையும்,கலைஞ்சு பறந்த தலைமுடியும்,பசி நித்திரை தாங்கின கண்ணும்,அவவின்ர வயசும் அப்பிடித்தான் எனக்குத் தெரிஞ்சது ஓவியமான அந்த அம்மா.
நிச்சயம் எனக்கு முன்னால நிண்டவர் எங்காச்சும் ஒரு குறிப்பிலயாச்சும் எழுதியிருப்பார் என்னைப்போல.எனக்கும் இவ்வளவு நாளும் எழுத்தில எழுதச் சொல்லவேணும் எண்டு நினைக்கேல்ல.இவள் பெடிச்சி எப்பாச்சும் என்னைக் கிளறிக் கிண்டி என் நினைவுகளைக் கொண்டு வந்திடுவாள்.எனக்கு அரசியல் கதைக்க விருப்பம் எண்டாலும் வேணாம் எண்டு எப்பவும் பேசாம இருக்கிறனான்.ஏனெண்டா கதைச்சுப் பி்ரயோசனமில்லை.அதோட நான் நாட்டுக்காக என்னத்தைச் செய்து கிழிச்சுப்போட்டன்.செய்யவெண்டு வந்த பெடியளை,எங்கட செல்லக் குஞ்சுகளை நாசமாப்போன உலக நாடுகள் எல்லாமாச் சேர்ந்து அழிச்சுப்போட்டாங்கள்.
இப்ப ஐ.நா அறிக்கை ஒண்டை வெளில கொண்டு வந்திருக்கு.இத்தனை ஆதாரங்களைக் காட்டினபிறகும் அது தாங்கள் செய்யேல்லையெண்டு இலங்கை அரசாங்கம் கோட்டுச் சூட்டுப் போட்டுக்கொண்டு ஐ.நா சபையில வெக்கமில்லாமச் சொல்லுது.இதில சனல் 4 பிரித்தானியாத் தொலைக்காட்சிக்கு நாங்கள் காலில தொட்டு நன்றி சொல்லவேணும்.குற்றம் செய்தவை தப்பக்கூடாது எண்டு 14.06.2011 அன்றுகூட ஒருமணித்தியால ஈழ அவலத்தின்ர விவரணக் காணொளியொண்டு இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில வெளியிட்டது.
இனி என்ன நடக்குதெண்டு எங்கட எதிர்காலம்தான் சொல்லவேணும்.இனி நாட்டில இருக்கிறவையால எதுவும் செய்ய முடியாது.வெளில இருக்கிற உலகத் தமிழர் புலம் பெயர்ந்த தமிழர்களாலதான் ஏதேனும் நல்லது நடக்கவேணும்.ஆனால் என்ன எங்கட சனங்களுக்கு அறிவு இருக்கிற அளவுக்கு மனசில ஒற்றுமை இல்லை.போட்டியும் பொறாமையும் நான் நீ என்கிற பேதமும் கிடக்கு.இது நான் அறிஞ்சவரைக்கும் காலகாலமாய் தமிழ்ச் சரித்திரக் கதைகளிலகூட நடந்திருக்கு.அப்ப இது பரம்பரை வியாதிபோல ஒரு வியாதி.மாறாது...திருத்தக் கஸ்டம் !
எப்பிடியோ பாதைதான் மாறியிருக்கே தவிர எங்கட நினைப்புகளும் தேவைகளும் அவலங்களும் பிரச்சனைகளும் மாறேல்ல.சிலநேரம் இன்னும்...இன்னும்...இன்னும்...இன்னும் கனகாலமாகலாம்.ஆனால் நல்லதே நடக்குமெண்டு என்ர நம்பிக்கை.ஆனால் அதைப் பாக்கவோ அதை அனுபவிக்க நான் இருக்கமாட்டன்.அந்த ஏக்கத்தோடதான் என்ர உயிர் இந்த மண்ணில போகும்.சரி பிறந்த மண்ணில சாகிற கொடுப்பினையாலும் எனக்கிருக்கே.கனபேருக்கு அதுவும் இல்லை !
சொல்லக் கேட்டுக் கனகாலம்.இப்போ குளிர்காலத்தில் ஞாபகம் வந்து எழுதவைத்தது.நினைவழியாமல் மீட்டு வைக்கிறேன்.
சில தவங்கள் வரங்களாக இப்போதும் எப்போதும் தவங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன !
ஆனா கையில நக்கிக்கொண்டுதான் தேத்தண்ணி குடிக்கவேணும்.கையில ரேகை அழிஞ்சுபோச்செண்டு கதைச்சுக்கொள்ளுவம்.வீட்ல ஆடு இருந்தபடியா பால்தேத்தண்ணி குடிப்பம்.வீட்ல சின்னதா மரக்கறித் தோட்டமும் அம்மாவும் அப்பாவும் செய்வினம்.அதைவிட வாழை,தென்னை,மாமரம் இருந்தது.அதனால பஞ்சம்தான் எண்டாலும் பசி இல்லாம ஏதோ சாப்பிட்டுக்கொள்ளுவம்.அம்மம்மாவும் தாத்தா கொண்டுவாற கோயில் சாப்பாட்டுச் சாமான்கள் கொண்டு வந்து தருவா.
இப்பிடி இருக்கிற நேரத்திலதான் அந்தப் பஞ்சகாலம்.பஞ்சம் தானா வரேல்ல.நாட்டில கஸ்டத்தாலயும் இல்ல.ஸ்ரீமா அம்மா தமிழருக்கெண்டே தந்தது.தோட்டம் செய்யாதவையெல்லாம் ஒரு மரவள்ளிக்கிழங்கு மரமெண்டாலும் வச்சுத் தண்ணி ஊத்துவினம்.ஏனெண்டா காசு இருந்தாலும் மா,அரிசி,பாண் எல்லாம் வாங்கேலாது.எங்கட புண்ணியம் எங்கட வீட்டுக்குப் பின்னால தங்கமணி அக்காவின்ர ஒன்றுவிட்ட அண்ணா மரவேலை செய்பவர்.அவருக்குப் பலரையும் பழக்கம் இருக்கிறதால சங்கக்கடை சாமியண்ணையை நல்ல பழக்கம்.மா,பாண் அவர்தான் சாமியண்ணட்ட களவா வாங்கித் தாறவர்(தருவார்).
அப்ப மா,பாண் எல்லாம் கூப்பன் (வெட்டிச் சீட்டு,அல்லது சலுகைச் சீட்டு எனப்படுவது.ஒரு பொருளை வாங்கும் போது நுகர்வோருக்கும் தரப்படும் கழிவுக்கான சீட்டு) காட்டுக்குத்தான் தருவினம்.சொல்லப்போனா மரக்கறி தவிர எல்லாச் சாமான்களுமே கூப்பன் காட்லதான் சங்கக்கடையில தான் வாங்கேலும்.
தோட்டத்தில விளையிற செத்தல் மிளகாய்கூடக் கூப்பன்தான்.கூப்பன் இல்லாம இலவசமாக் கிடைக்கிறது பசி...பசி...பசி.வயித்தில அகோர நெருப்பு.கோவமும் கூட.எத்தைனை பேருக்குக் குடுக்காம அவையளின்ர வயித்தில அடிச்சுக் கூடின காசுக்குச் சாமான்களை விப்பினம்.நாங்களும் என்ன செய்றது.ஒரு வீட்டுக்கு குறிப்பிட்ட அளவு மா,பாண் தான் தருவினம்.களவா வாங்கினாத்தான் சமாளிக்கலாம்.காசு இல்லாத ஆ(ட்)க்கள் பாவம்தான்.
எங்கட வீட்லயும் மரவள்ளிக்கிழங்குத் தோட்டம் இருந்தது.காலமைச் சாப்பாடு மரவள்ளிக்கிழங்கா இருக்கும் ஒரு நாளைக்கு.அடுத்த நாளைக்கு இரவுச் சாப்பாடா மாறியிருக்கும்.மத்தியானம் மட்டும் சோறு சமைப்பா அம்மா.மாதத் தொடக்கத்திலதான் மீன்,றால் கிழமையில இரண்டு நாளைக்கு இருக்கும்.ஆட்டிறைச்சியெண்டா மாசத்துக்கு ஒருக்காத்தான்.சிலநேரம் இல்லை.வீட்ல கோழிகள் இருந்தபடியா முட்டை,இறைச்சியும் சாப்பிடுவம்.ஆனாலும் அவைக்கும் சாப்பாடு போடவேணுமே.சிலநேரம் அவைக்கு வருத்தமும் வந்திடும்.மரக்கறிச் சாப்பாடுதான் கூடுதலா சாப்பிடுவம்.நாங்கள் நடுத்தர வர்க்கம் எண்டு அப்பா அடிக்கடி சொல்லுவார்.
ஒருக்கா இப்பிடித்தான் மாசக்கடைசி.அவிச்ச மா கொஞ்சம்தான் இருந்திருக்குப்போல.அம்மா நல்லாச் சமைப்பா.அதுவும் சின்னமீன் மாங்காய் போட்டுக் குழம்பு(புளி இருக்காது)வச்சாவெண்டா அடிச்சுப் பிடிச்சுச் சாப்பிடுவம்.அதுவும் ஆளுக்கொரு மீன்துண்டுதான்.எண்ணித்தான் வாங்கிச் சமைப்பா.அம்மா ருசியாச் சமைக்கவேண்டாம் எண்டு நான் எப்பவும் நினைப்பன்.ஏனெண்டா இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம்போல இருக்கும் சிலநேரம்.
அப்ப ஒரு நாள் அரிசிமாப் புட்டு அம்மா அவிச்சவ.புட்டுக்கும் மீன்குழம்புக்கும் நல்ல சோக்காய்த்தான் (சுவையாய்)இருக்கும்.அதோட அம்மம்மா கொண்டுவந்த மாம்பழம்.இப்ப நினைச்சாலும் வாயூறுது.என்ர கடைசித் தங்கச்சி ரசனையோட சாப்பிட்டுவிட்டு அம்மா இன்னும் கொஞ்சம் புட்டு வேணும் எண்டு கேக்க,அம்மாவின்ர முகம் மாறினதும் தங்கச்சி வீட்டு நிலைமை தெரியாம அழுததும் இப்பவும் ஞாபகம் இருக்கு.
முக்கியமா நான் சொல்ல நினைச்சது விடியக்காலேல(அதிகாலை) 4-5 மணிக்கு பனிக்குளிர்ல சாமியண்ணைன்ர சங்கக்கடை வாசலில பாம்புபோல வளைஞ்சு நெளிஞ்சு சங்கக்கடை தொடக்கம் மாலா வீடு வரைக்கும் நிக்கிற மனிச வரிசையில இடிச்சு நெரிச்சுக்கொண்டு பாணுக்குக் கியூவில நிக்கிறது.கிழமையில இரண்டுதரம் இந்த மாதிரி நிக்கவேணும்.இதுக்குக் காலேல எங்களை எழுப்பி வெளிக்கிடுத்தி தேத்தண்ணியும் தந்து அனுப்புறது அம்மாவுக்கு பெரிய கஸ்டம்.
நான் இல்லாட்டி தம்பி போகவேணும்.ஒரு வீட்டுக்கு ஒரு பாண் தான்.அதுவும் 5 மணியில போய் கியூவில நிண்டா 6-7 மணிக்கிடையிலதான் பாண் வரும் தருவினம்(தருவார்கள்).சிலநேரம் பிந்தின கியூவில நிண்டா கிடைக்காமலும் போய்டும்.ஏனெண்டா அளவா ஒரு குறிப்பிட்ட அளவுதானாம் ஒவ்வொரு கடைக்கும் எண்டு சாமியண்ணை கத்துவார்.ஆனா களவா சின்னராசண்ணைக்குக் குடுப்பார்.அப்ப இதிலயிருக்கிற அநியாயம் எனக்குத் தெரியேல்ல.சிலநேரம் பாண் கிடைக்காத காலமும் இருக்கு.அப்ப உடன ஒரு மரவள்ளிக்கிழங்குதான்.அதைப் பிடுங்கி அவிச்சுச் சாப்பிட்டுப் பள்ளிக்கூடம் போகப் பிந்தியும்போகும்.பஞ்சப்பட்ட காலங்கள் கண்ணை இப்பவும் கலங்க வைக்குது.எங்கட அரசியல் ஒரு மாதிரியாக்கும்.அதாலதான் அப்பிடியெண்டு இப்ப விளங்குது.
பாண்கியூ எண்டு கதைக்கேக்க எல்லாம் ஒரு உருவம் கண்ணுக்க வந்து மறையும்.ஒரு மெலிஞ்சு வயிறு ஒட்டினபடி 45-50 வயசுக்காரர் ஒருத்தர் எனக்கு முன்னால இல்லாட்டி பின்னால நிப்பார் எப்பவும்.அவரின்ர வீடும் நான் போற வாற வழியிலதான் இருக்கு.அவரின்ர அம்மாவோ இல்லாட்டி அக்காவோ ஒரு ஆள் இருக்கிறா அங்க. அவரோட.அது ஒரு கொட்டில் வீடு.பஞ்சம் வயசைக்கூடக் கூட்டித்தான் காட்டினது எங்கட நாட்டில.ஒற்றை வேட்டியோடதான் எப்பவும் நிப்பார்.வெயில் காலமெண்டா சேட்டுப் போடமாட்டார்.வயிறே எரியுது பிறகெதுக்குச் சேட் எண்டு நினைப்பாரோ என்னவோ.வயிறு எக்கி முகத்தில பசி வாடித் தெரியும்.கொஞ்சம் கூனலா இருப்பார்.வெத்தில வாசமடிக்கும் எப்பவும்.பிறகு கொஞ்சக் காலத்துக்குப் பிறகுதான் தெரிய வந்தது அவர் ஒரு எழுத்தாளர் எண்டு.ஆரையும் விட்டு வைக்கேல்ல ஸ்ரீமா அம்மா காலத்துப் பஞ்சம்.
இப்பிடித்தான் ஒருக்கா எங்களுக்கு முந்தி கியூவில நிண்ட ஒரு வயசுபோன அம்மா ஒரு ஆள் பாண் வாங்கிக்கொண்டு போக போற போக்கில ஒரு ஆள் எத்திப் பறிச்சுக்கொண்டு ஓடினது இப்பவும் ஞாபகம் இருக்கு.அவ றோட்டின்ர கரையில கிடக்கிற மண்ணை அள்ளிப்போட்டு நாசமாப்போனவன் எண்டு திட்டிச் சத்தம்போட்டு அழுதா.பிறகு டக் எண்டு எழும்பி நடக்கத்தொடங்கிட்டா.ஒருவேளை பசி வந்திருக்கும்.இண்டைக்கு முழுக்க என்ன சாப்பாடு பட்டினிதான் எண்டு யோசிச்சுக்கொண்டு போனாவோ என்னவோ.
அவ அழுததை ஆராச்சும் (எவரேனும்)ஓவியர் பார்த்திருந்தா பசி எண்டு தலைப்புப் போட்டுக் கீறியிருக்கலாம்.காலமை வெயிலுக்கும் அவவின்ர கிளிஞ்ச றவுக்கை தெரியாமல் மூடின கந்தல் சீலையும்,கலைஞ்சு பறந்த தலைமுடியும்,பசி நித்திரை தாங்கின கண்ணும்,அவவின்ர வயசும் அப்பிடித்தான் எனக்குத் தெரிஞ்சது ஓவியமான அந்த அம்மா.
நிச்சயம் எனக்கு முன்னால நிண்டவர் எங்காச்சும் ஒரு குறிப்பிலயாச்சும் எழுதியிருப்பார் என்னைப்போல.எனக்கும் இவ்வளவு நாளும் எழுத்தில எழுதச் சொல்லவேணும் எண்டு நினைக்கேல்ல.இவள் பெடிச்சி எப்பாச்சும் என்னைக் கிளறிக் கிண்டி என் நினைவுகளைக் கொண்டு வந்திடுவாள்.எனக்கு அரசியல் கதைக்க விருப்பம் எண்டாலும் வேணாம் எண்டு எப்பவும் பேசாம இருக்கிறனான்.ஏனெண்டா கதைச்சுப் பி்ரயோசனமில்லை.அதோட நான் நாட்டுக்காக என்னத்தைச் செய்து கிழிச்சுப்போட்டன்.செய்யவெண்டு வந்த பெடியளை,எங்கட செல்லக் குஞ்சுகளை நாசமாப்போன உலக நாடுகள் எல்லாமாச் சேர்ந்து அழிச்சுப்போட்டாங்கள்.
இப்ப ஐ.நா அறிக்கை ஒண்டை வெளில கொண்டு வந்திருக்கு.இத்தனை ஆதாரங்களைக் காட்டினபிறகும் அது தாங்கள் செய்யேல்லையெண்டு இலங்கை அரசாங்கம் கோட்டுச் சூட்டுப் போட்டுக்கொண்டு ஐ.நா சபையில வெக்கமில்லாமச் சொல்லுது.இதில சனல் 4 பிரித்தானியாத் தொலைக்காட்சிக்கு நாங்கள் காலில தொட்டு நன்றி சொல்லவேணும்.குற்றம் செய்தவை தப்பக்கூடாது எண்டு 14.06.2011 அன்றுகூட ஒருமணித்தியால ஈழ அவலத்தின்ர விவரணக் காணொளியொண்டு இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில வெளியிட்டது.
இனி என்ன நடக்குதெண்டு எங்கட எதிர்காலம்தான் சொல்லவேணும்.இனி நாட்டில இருக்கிறவையால எதுவும் செய்ய முடியாது.வெளில இருக்கிற உலகத் தமிழர் புலம் பெயர்ந்த தமிழர்களாலதான் ஏதேனும் நல்லது நடக்கவேணும்.ஆனால் என்ன எங்கட சனங்களுக்கு அறிவு இருக்கிற அளவுக்கு மனசில ஒற்றுமை இல்லை.போட்டியும் பொறாமையும் நான் நீ என்கிற பேதமும் கிடக்கு.இது நான் அறிஞ்சவரைக்கும் காலகாலமாய் தமிழ்ச் சரித்திரக் கதைகளிலகூட நடந்திருக்கு.அப்ப இது பரம்பரை வியாதிபோல ஒரு வியாதி.மாறாது...திருத்தக் கஸ்டம் !
எப்பிடியோ பாதைதான் மாறியிருக்கே தவிர எங்கட நினைப்புகளும் தேவைகளும் அவலங்களும் பிரச்சனைகளும் மாறேல்ல.சிலநேரம் இன்னும்...இன்னும்...இன்னும்...இன்னும் கனகாலமாகலாம்.ஆனால் நல்லதே நடக்குமெண்டு என்ர நம்பிக்கை.ஆனால் அதைப் பாக்கவோ அதை அனுபவிக்க நான் இருக்கமாட்டன்.அந்த ஏக்கத்தோடதான் என்ர உயிர் இந்த மண்ணில போகும்.சரி பிறந்த மண்ணில சாகிற கொடுப்பினையாலும் எனக்கிருக்கே.கனபேருக்கு அதுவும் இல்லை !
சொல்லக் கேட்டுக் கனகாலம்.இப்போ குளிர்காலத்தில் ஞாபகம் வந்து எழுதவைத்தது.நினைவழியாமல் மீட்டு வைக்கிறேன்.
சில தவங்கள் வரங்களாக இப்போதும் எப்போதும் தவங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன !