ரெவரி என் அன்புச் சகோதரன் புத்தாண்டுத் தீர்மானங்கள்ன்னு ஒரு தொடர் பதிவு எழுதக் கேட்டிருந்தார்.எனக்கு புத்தாண்டுக்குன்னு தீர்மானம் ஏதுமில்லை.எப்பவும் சந்தர்ப்பம் வரப்போ எல்லாம் நல்லது செய்யணும்.ஆனா இங்க பொதுவான சந்தோஷங்களை கொஞ்சம் கிண்டலா எழுதிப் பார்க்கலாமேன்னு தோணிச்சு.பொருத்தமா இருக்கோ இல்லையோ தெரில.ரெவரிக்கு மதிப்புக் கொடுக்கணும் அவ்ளோதான் இந்தப் பதிவு !
1) உடம்பைப் பார்த்துக்கோங்க..சுவர் இருந்தாத்தான் சித்திரம்.சித்திரம் வரையிறதாச் சொல்லிட்டு கேலிச்சித்திரம் கீறிட்டா என்ன பண்றதாம் !2) உடனடிச் சந்தோஷத்துக்காக ஆசைப்படாம அதன் பின் விளைவுகளை யோசிச்சு மனசைக் கட்டுப்படுத்திக்கணும் !ஒரு பியர் போத்தல் கண்முன்னால இருக்கு.குடிச்சாத்தான் சந்தோஷம்ன்னு மனசு சொல்லிட்டே இருக்கு.வீட்ல போய் உலக்கையால அடி வாங்கிறதப் பத்தி அந்த நேரம் நினைக்க வருமாக்கும் !3)உங்களைச் சுத்தி இருக்கிற எல்லாருக்கும் நம்பிக்கையா விசுவாசமாய் இருங்கள் !சரி...உண்மைதான்.நாங்க விசுவாசமா இருக்கிறோம்.ஆனா கண்ணு முழிச்சிட்டு இருக்கிறப்பவே இளிச்சவாய்ன்னு நெத்தியில முத்திரை குத்துறாங்கப்பா.அப்புறம் விசுவாசம்...!4) உங்கள் குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள் !இது ரொம்பவே சந்தோஷம்.ஆனா இவங்ககூடவும் ரொம்ப கவனமா இருக்கணும்பா.இடக்குமுடக்கா கேள்வியெல்லாம் கேக்குறாங்க.அவங்க முன்னால நாங்கதான் பொடிப்பசங்க!5) பெற்றோரை மதியுங்கள்.அவர்கள் தேவைகளைக் கவனியுங்கள் !இந்த விஷயத்தில கண்ணும் கருத்துமா இருக்கணும்.நம்ம பிள்ளைங்க பாத்திட்டே இருக்காங்க.தாத்தாக்குக் குடுத்த சாப்பாட்டுத் தட்டைக்கூட தாத்தா ஞாபகம்ன்னு எடுத்து வச்சிட்டு அப்புறமா பெத்தவங்களுக்கே தராங்களாம் !6)அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருப்பேன் என்று உறுதி சொல்லிக்கொள்ளுங்கள் !எந்த விஷயத்தில முன்னுதாரணம்ன்னும் சொல்லியிருக்கலாம் !7) உண்மை கசப்பாய்த்தான் இருக்கும்.பரவாயில்லை.ஏத்துக்கணும் !அப்பிடியே அரிச்சந்திரன்(சந்திரி)ன்னு பட்டம் தந்திடுவாங்களாக்கும் !8) என்ன லாபம் வந்தாலும் சரி.சட்டவிரோதமா எதையும் செய்யக்கூடாது !சட்டவிரோதம்ன்னு எதைச் சொல்றாங்க.அப்பிடின்னு ஒண்ணு இருக்கா.நம்ம பிறந்த நாட்டில எப்பவும் எல்லாரும் எல்லாமே பண்ணலாம்.பண்றாங்க !9) சமூகத்தில ஏத்த இறக்கம் இல்லாம எல்லாரும் சமமா இருக்க என்னால் என்ன செய்ய முடியும்ன்னு யோசிக்கணும் !இது பெரிய விஷயமா.கலப்புத் திருமணம் செய்திட்டாப் போச்சு.இல்லன்னா கள்ளுக்கடையில எல்லாரும் சமமாயிடலாம்ன்னு எங்க தாத்தா சொல்லுவார் !10) ஒருத்தர் நல்லது செய்யப்போக எதையாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுக்கக்கூடாது !அப்பா...இது பெரிய விஷயம்.நல்லது செய்றவங்களைவிடக் கூட இருக்கிறவங்கதான் தூங்காம யோசிச்சிட்டு இருப்பாங்க.எப்பிடிடா கவுத்துப்போட்டு ஏறி நிக்கலாம்ன்னு.காதைச் சுத்தி மப்ளர் போட்டுக்கோங்க.யார் என்ன சொன்னாலும் ஆமா போடுங்க.உங்களுக்கு என்ன சரின்னு இருக்கோ அதுவழி போங்கப்பா !11) நம்ம சுற்றுச் சூழலை பாதுகாப்போட வச்சிருக்கணும் !இவ்ளோ நாட்டுப் பற்று இருந்தா நம்ம வீட்டு அடுப்பில பூனைதான் படுத்திருக்கும்."எரியாத அடுப்பிங்கே பசிக்கிங்கே உணவில்லைன்னு" அதுகூட ஓடிப்போய்டும் !12) களவெடுக்கக்கூடாது !ஆனா அம்மா அடுப்படி சீரக டப்பாவுக்குள்ள வச்சிருக்கிற சில்லரை எடுக்கலாமாம் !13) சொன்ன சொல் மாறக்கூடாது !யாரும் மாத்தமாட்டாங்கப்பா."அ" வை "ஆ" வன்னான்னு யாராச்சும் சொல்லுவாங்களா !14) சும்மா இருக்கிறது சுகம்ன்னு யாராச்சும் சொன்னா கேட்டுக்கக்கூடாது !வடிவேலு சும்மா இருக்கிறதே கஸ்டம்ன்னு சொல்லியிருக்கார்.எல்லாரும் கேட்டிருப்பீங்க !15)கல்விக்கு எல்லையே இல்லை.எப்பவும் படிச்சுக்கிட்டே மாணவனாய் வாழணும் !கடைசி வரைக்கும் மாணவனா இருந்தா நாங்க ஆசிரியராகிற இலட்சியம்...!16) அடுத்த மதத்தை மதிக்கப் பழகிக்கணும் !எங்க வீட்ல எல்லாச் சாமியும் ஆசாமியும் இருக்கு.நம்புங்க !17)மத்தவங்க எங்களுக்கு என்னல்லாம் செய்யக்கூடாதுன்னு நினைக்கிறோமோ அதை நாங்க மத்தவங்களுக்க்குச் செய்யக்கூடாது !நினைக்கலாமே தவிர செய்யாமல்லாம் இருக்கமுடியாது.இது ரொம்ப ரொம்பக் கஸ்டம் !18) அதேபோலவே அவங்க எப்பிடியெல்லாம் மதிக்கணும்ன்னு நினைக்கிறோமோ அதேபோலவே நாங்களும் மத்தவங்களை (உணர்வுக்கும்) மதிக்கணும் !பொய்யாய்ச் சிரிச்சு பசப்பிப் பேசி அதெல்லாம் மதிப்புத் தரோம்ன்னு கலக்கிடலாம் !19) உலகின் வளங்களை அள்ளியெடுத்துக்கொண்டு வாழ்வோடு முன்னேறுங்கள் !அதுசரி...இருந்தாத்தானே அள்ள.எந்த இயற்கையை விஞ்ஞானம்ங்கிற பேரில விட்டு வச்சிருக்காங்க.மரங்கள் அழிப்பு.வானத்தில பூமியில....ஏன் கடலுக்கு நடுவிலகூட ஓட்டை.முன்னேறி மூச்சடைச்சு முக்கால் வயசிலயே போய்ச்சேர்ந்திடவேண்டியதுதான் !20) யாரையும் கொல்லாதீங்க.வார்த்தைகளால்கூட !வார்த்தைகளால் அடிச்சவங்க மறந்திடுவாங்க.அடிவாங்கினவங்களுக்குத்தான் காயம் வலிச்சிட்டே இருக்கும்.அப்புறம் அது வடுவா சாகிற வரைக்கும் மறையாது.இதைவிடக் கொல்றது நல்லதுன்னே நான் சொல்றேன் !என் மூளையைக் கசக்கிப் பிழிஞ்சு வயிறு குலுங்கச் சிரிக்க இல்லாட்டியும் கொஞ்சம் புன்சிரிப்போடயாவது வாசிக்க வச்சிருக்கேனா.பதிவுக்கேத்தமாதிரி பாத்துக் கீத்துப் போடுங்கோ !
இதோடு அன்பான விருது ஒன்றும் ஆன்மீகத் தோழி இராஜராஜேஸ்வரி
jaghamani.blogspot.com தந்திருக்கிறார்.குழந்தைநிலாவுக்குத்தான் அந்த விருது.ஆனால் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.இப்போ விருதுகள் காலம்.இடைவிட்டு இப்போ விருதுகள் உலாவருகின்றன்.அதுவும் நல்லதுதான் புது இணைய எழுத்தாளர்களுக்கு.தங்கள் அங்கீகாரத்தை ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் எழுதவைக்கும் ஒரு ஊட்டச்சத்துதான் இந்த விருதுகள் !
எனக்குப் பிடித்த விஷயங்கள் 7 சொல்லி இந்த விருதைப் பகிரவேணுமாம் !
எனக்கு என்ன பிடிக்கும்......யோசிக்கிறேன் !
தனிமை பிடிக்கும் !
உலக அதிசயங்கள் கலாசாரங்கள்,இயற்கை மிருகங்களின் வாழ்வியல் பார்க்கப் பிடிக்கும் !
இசை இசை இசை கேட்டுக்கொண்டே........யிருக்கப் பிடிக்கும் !
பகிர்ந்துகொடுக்க மூவர் மட்டுமே !
தனிமரம் http://www.thanimaram.org/
தனசேகரன் http://sekar-thamil.blogspot.com/
துரைடானியல் http://duraidaniel.blogspot.com/
அன்போடு ஏற்றுக்கொண்டு இன்னும் நிறைவாக எழுதக் கேட்டு வாழ்த்திக்கொள்கிறேன் !
உண்மையில் இந்தப் பதிவைப் போட்டுவிட்டு தனிமரம் நேசனிடம் சொல்லலாம் என்று போனேன்.அங்கு எனக்கு விருது காத்திருக்கிறது.எங்கள் மன உணர்வினைக் கண்டு அதிசயித்து அந்த விருதை மிக மிக சந்தோஷத்தோடு இணைத்துக்கொள்கிறேன்.உங்கள் அன்பிற்கு நன்றி நேசன் !