Thursday, October 29, 2009

இப்படியாவது பிறந்திருக்கலாம்.

கொடுத்துவைத்த பிறவிகள்.

போட்டி பொறாமை போன்ற குணங்களால் மனிதனே மனிதன் மீது அன்பு காட்ட சிரமப்படுகிறான்.ஒரு பிராணி மீது அன்பு காட்ட கற்றுக்கொண்டால் மனித நேயம் தானாக வந்துவிடும்.

சிறு வயதில் பிராணிகள் மீது அன்பு கொள்ளும் குழந்தைகள் பிற்காலத்தில் தங்கள் பெற்றோர் மீதும் பாசம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

பிராணிகள் செய்யும் தவறுகளை சகித்துக் கொள்ள கற்றுக்கொண்டால் எந்த சூழ்நிலையிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியும்.

பிராணிகள் செய்யும் குறும்புகளை இரசிக்க கற்றுக்கொள்ளுங்கள் உங்கள் மன அழுத்தம் தானாக குறைந்து விடும்.



வளர்ப்பு பிராணிகள் மீது அன்பு காட்ட தெரியாத சமுதாயம் பண்பட்ட சமுதாயமாக இருக்க முடியாது.அதனால் தான் இன்றய சமுதாயத்தில் மனித நேயம் குறைந்து வன்முறை பெருகி வருகிறது. இதை பன்னாட்டு சமுதாயம் உணரவேண்டும்.

இன்றிலிருந்து இனி யாரையும் நாயே என்று திட்டுவதை நிப்பாட்டுங்கள்.


ஹேமா(சுவிஸ்)

Sunday, October 25, 2009

பகலொளி சேமிப்பு நேரம்.


██ பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிக்கப்படும் பகுதிகள்.

██ பகலொளி சேமிப்பு நேரம் முன்னர் கடைப்பிடிக்கப் பட்ட நிலப்பகுதிகள்.

██ பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிக்கப்படாத நிலப்பகுதிகள்.

கலொளி சேமிப்பு நேரம் அல்லது கோடை நேரம் என்பது பரவலாக பயன்பாட்டில் இருக்கும் சீர் நேரத்தை கோடை மாதங்களில் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும்.இது பொதுவாக ஒரு மணி நேரமாகும்.இது கோடை மாதங்களின் பகல் நேரத்தையும் வேலை மற்றும் பாடசாலை நேரங்களையும் ஒருமுகப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படுகிறது."சேமிக்கப்பட்ட" பகலொளி மாலையில் உல்லாச நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இம்முறை பின்பற்றப்படாவிட்டால் காலையில் சூரிய ஒளி தூக்கத்தில் வீணடிக்கப்படும்.

பகலொளி சேமிப்பு நேரம் பொதுவில் குளிர்வலய நாடுகளில் பருவ மாற்றங்களோடு காணப்படும் பெரும் பகல்-இரவு நேர வேறுபாடுகள் காரணமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

பகலொளி சேமிப்பு நேரம் துவங்கும் பொழுது கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும்.

அரசுகள் சூரிய ஒளியின் பயன்பாடு அதிகரிப்பதால் இதனை பொதுவில் ஆற்றல் சேமிப்பு நடவடிக்கையாக விளக்குகின்றன.ஆனாலும் இம்முறை மூலம் மின்னாற்றல் சேமிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஐரோப்பாவில் இது கோடை நேரம் என்றே அழைக்கப்படுகிறது.இங்கு "கோடை" எனும் போது இளவேனில் இலையுதிர் என்ற பருவங்களின் சில வாரங்களையும் உள்ளடக்குகிறது (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை).மிகுதி மழைக் காலமாக கணிக்கப்படுகிறது (நவம்பர் முதல் மார்ச் வரை).இந்நடைமுறை நேர வலயங்களுக்கு ஏற்பவும் மாறுபடக்கூடியது.

வரலாறு

பாரிஸ் இதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் பகலொளி சேமிப்பு நேரம் பற்றி பெஞ்சமின் பிராங்க்லின் தெரிவித்துள்ளார்.இருப்பினும் இக்கட்டுரையில் காணப்படும் நகைச்சுவைத் தொனி காரணமாக இதை அவர் உண்மையாகவே பிரெஞ்சு அரசுக்கு முன்மொழிந்தாரா அல்லது மக்கள் முன்னெழுந்து முன் உறங்கச் செல்ல வேண்டும் என கருதினாரா என்பது தெரியவில்லை.

பகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஒரு திட்டமாக வில்லியம் வில்லெட் என்பவரால் 1907 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது.
பெருமளவிலான கையூட்டுகளைக் கொடுத்த போதிலும் பிரித்தானிய அரசு இதனை ஏற்கவில்லை.

பகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஜெர்மன் அரசால் முதலாவது உலக போரின் போது 1916 இன் ஏப்ரல் 30 க்கும் அக்டோபர் 1க்கும் இடையில் பயன்படுத்தப்பட்டது.உடனே ஐக்கிய இராச்சியமும் 1916 மே 21க்கும் அக்டோபர் 1 க்கும் இடையில் பயன்படுத்தியது.

[இன்று நேரம் மாற்றப்படுகிறது.அக்டோபர் மாதக் கடைசி வாரத்திலும் ஏப்ரம் மாதக் கடைசி வாரத்திலும் மாற்றப்படும்.]

நன்றி இணையம்.

Wednesday, October 21, 2009

மிருகங்களுக்கும் சர்க்கரை நோய்.

மிருகங்களுக்கும் சர்க்கரை வியாதி வரலாம்.நாய்களுக்கு வரும் சர்க்கரை வியாதி மனிதார்களிடமிருந்து வேறுபட்டது.மனிதர்களில் இன்சுலின் சுரக்கும் கலங்கள் படிப்படியாகத்தான் குறையும்.மனிதர்கள் அதற்காக மாத்திரைகளை எடுத்தால் இன்சுலின் சுரக்கும் கலங்களின் தொழிற்பாட்டை அதிகரிக்கச் செய்யலாம்.

ஆனால் நாய்களைப் பொறுத்தமட்டில் இன்சுலின் சுரக்கும் கலங்கள் மொத்தமாகவே அழிந்தபின்புதான் இந்த நோய் தோன்றுகிறது.இதனால் இன்சுலின் ஊசிமூலம் கொடுப்பதே சிறந்த பரிகாரம்.தினமும் இந்த ஊசி ஏற்றவேண்டும்.சிலசமயங்களில் இரண்டுவேளைகளில் செலுத்தவும் நேரலாம்.ஆரம்பத்தில் இரத்தத்தில் குளுக்கோசின் அளவை சரியான நிலைக்கு கொண்டுவர சிலநாட்கள் செல்லலாம்.சிலநாட்களுக்கு கிளினிக்கில் வைத்திருக்க வேக்ண்டும்.விசேட உணவு வழங்க வேண்டும்.

நாய் பூனைகளுக்கு சர்க்கரை நோய் இருப்பதைக் கண்டு பிடித்தவுடன் சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு அவற்றின் எஜமானர்களின் குடும்பவிபரத்தைக் கேட்டறிவது நல்லது.நோயினால் பாதிப்புற்ற பிராணிகளை நேரம் எடுத்துப் பராமரிக்க வேண்டும். 'பிஸி 'யாக இருப்பவர்களினால் இது முடியாத காரியம்.

இன்சுலினை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த தாமதித்தால் பிராணிகள் மயங்கும்.உணவு பிந்தினால் சோர்வுடன் முடங்கும்.இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நாய்களைப் பராமரிப்பதில் பெண்கள் மிகுந்த சிரத்தை அடைவர்கள் என்பது உண்மை.

தெரிந்த பெண் ஒருவர் இந்த நோயினால் பீடிக்கப்பட்ட நாயொன்றைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக நன்கு பராமரிக்கிறார்.இது மானுட வயதில் ஐம்பத்தைந்து வருடத்துக்கு சமனாகும்.அடிக்கடி ஊசிபோடுவதற்கு நாய்க்கும் பொறுமை வேண்டும்.நோய் வந்த நாய்கள்-கருணைக்கொலை மூலம் பரலோகம் அனுப்பப்படுவதுமுண்டு.இது சோகம்தான்.ஆனால் தவிர்க்க முடியாதது.

நீரிழிவு என இலங்கையிலும் சர்க்கரை வியாதி என தமிழகத்திலும் சொல்லப்படும் இந்த நோய் நாய் பூனைகளை மட்டும் அல்ல மனிதர்களைப் படுத்தும் பாடு.

ஒரு சுவாரஸ்யமான கதையும் ஒன்று இதனோடு.

ஒரு அம்மா இந்த உபாதையால் பலஆண்டுகள் வருந்தினார்.நாற்பது வயதில் வந்த இந்தநோய் - சுமார் 15வருடங்கள் அவர்கள் மறையும் வரையில் உடலோடு ஒட்டி உறவாடியது.அவரது மகன் இன்சுலின் ஏற்றும் பழக்கத்தைத் தொடக்கிவிட்டிருந்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினையால் அம்மாவின் பிள்ளைகள் அம்மாவை விட்டுப் பிரிந்து பூமிப்பந்தில் சிதறி புலம்பெயர்ந்த போதும் - அம்மாவைப் பிரியாதிருந்தது இந்த நோய்.அம்மாவின் உடலைத் தீண்டிய இன்சுலின் ஊசியின் தடயங்கள்-கரும்புள்ளிகளாக அந்த வெள்ளைத்தோலை அலங்கரித்தது.கணவரது குத்தல் நக்கல் மொழிகளையும் அவர் பொறுத்துக் கொண்டதற்கு இந்த ஊசிகுத்தலினால் கிடைத்த சகிப்புத்தன்மையும் காரணமாக இருக்கலாம்.

அவர் வாழ்ந்த காலம் சுவாரஸ்யமானது.

வீட்டுக்கு வருபவர்களெல்லாம் வைத்தியர்களாகிவிடுவார்கள்.ஆயுர்வேதம் சித்தவைத்தியம் யுனானி எனக் கூறிக்கொண்டு இலை குழை தண்டு வேர் பூ - என தாவரவியலையும் அம்மா கரைத்துக் குடித்ததுக் கொள்வார்.அரைத்துக் குடித்த பாகற்காய்களுக்குக் கணக்கேயில்லை.

உலகத்தில் தோன்றிய பெரிய தெய்வங்கள் சிறிய தெய்வங்கள் பிறசமயத் தெய்வங்கள் என மத நல்லிணக்கணத்துடன் அம்மா விரதம் இருந்தும் இந்த உபாதையை போக்க முயன்றார்.நாற்பது நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்து அதிகாலையில் குளித்துவிட்டு தெய்வதரிசனத்துக்குச் சென்றதால் கிணற்றில்தான் நீர் வற்றியதே தவிர நீரிழிவு வற்றவில்லை.

பூசாரிகள் மந்திரவாதிகள் சூனியம் எடுப்பவர்கள் எனச் சொல்லிக்கொண்டும் சிலர் வந்து போனார்கள்.கேரளாப் பக்கமிருந்து வந்த மலையாள மாந்திரீகார் ஒருவர் வந்து அம்மாவிடம் 'உங்களுக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் சூனியம் செய்திருப்பதாகச் சொல்லி உறவுக்குள் பகை நெருப்பை மூட்டிச் சென்றார்.இவர்கள் எல்லோரையும் விட அம்மாவின் உயிரை பிடித்து வைத்திருந்தது இன்சுலின் ஊசி மருந்துதான்.

முன்பு மாட்டிலிருந்தும் பன்றியிலிருந்தும் தயாரிக்கப்பட்ட இன்சுலின் இப்பொழுது சைவமுறைப்படி பக்டாரியாவுக்குள் இன்சுலின் ஜீனைச் செலுத்தி பிராமணர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஏற்றவாறு தயாரிக்கப்படுகிறதாம்.

[ஒரு அனுபவஸ்தர் சொல்ல நான் கேட்டுக்கொண்டது.]
ஹேமா(சுவிஸ்)

Friday, October 16, 2009

சுவிஸ் ன் அழகு.


என் இனிய நண்பர்கள் அனைவருக்கும்
மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
இனியாவது ஈழத்தமிழன் வாழ்வில்
ஒளி பிறக்கப் பிரார்த்திக்கொள்வோம்.

சுவிஸ்(ஹேமா)

Thursday, October 08, 2009

"மேவீ" க்கு அனுப்பின ரொட்டி

என் இணைய நண்பர் மேவீ தனிச்சமையல் பண்றார் இப்போ.பாவம் சமைக்கவே தெரில.சுடுதண்ணி வைப்பேன் என்றார்.என்ன செய்யலாம்.
என்னால முடிஞ்சது சொல்லிக் குடுத்தேன்.இனி அவர் சமைச்சாரா சாப்பிட்டாரா ,ஏன் தனிய சமைக்கிறார்ன்னு அவர்கிட்டயே கேட்டுக்கோங்க.ரொட்டி நல்லாயிருந்தா மட்டும் என்கிட்ட சொல்லுங்க.

காய்கறி ரொட்டி
*******************

கோதுமை மா(மைதாமா) - 500 கிராம்

உப்பு - தேவையானளவு

பால் - 2 மேசைக்கரண்டி

பட்டர் - 2 மேசைக்கரண்டி

சூடான நீர் - (1- 2)கப்[கைக்கு இதமான சூடு போதும்]

எண்ணைய் - தேவையானளவு

பெரியவெங்காயம் [சிறிது சிறிதாக வெட்டினது] - 1

பச்சைமிளகாய்[சிறிய வட்டமாக வெட்டினது] - 3 - 6[உறைப்புக்கு மாதிரி]

கருவப்பிலை [சிறிது சிறிதாக வெட்டினது]- சிறிதளவு

லீக்ஸ் [சிறிய மெல்லிய வட்டமாக வெட்டினது]- ஒரு லீக்ஸ் ல் பாதி(25கிராம்)

கரட் (துருவியது) - 1(25கிராம்)

பீன்ஸ் [மெல்லிய வட்டமாக வெட்டினது]- 10 (25 கிராம் )

முட்டைகோஸ்[சிறிது சிறிதாக]- சிறிய துண்டு (15கிராம்)

உருளைகிழங்கு [துருவியது] - 1

[நீர்த்தன்மை இல்லாத காய்கறிகள் எதுவுமே போடலாம்.விரும்பினா காய்கறிகளை ஒரு நொடி மட்டும் வதக்கியும் போடலாம்.]

எப்பிடிச் செய்யிறது
***********************

1)கோதுமை மா [மைதாமா],உப்பு,பால்,பட்டர்,வெங்காயம்,பச்சைமிளகாய்,
கருவப்பிலை, லீக்ஸ்,கரட்,பீன்ஸ்,முட்டைகோஸ்,உருளைகிழங்கு
எல்லாத்தையும் போட்டு கலந்து எடுங்க. விரும்பினா தேங்காப்பூவும் கொஞ்சம் சேர்த்துக்கலாம்.[ஒரு பிடியளவு]

2)அதுக்குப் பிறகு மெல்லிய சூடான தண்ணீர் விட்டு நல்லா பிசைஞ்சு எடுங்க.நல்லா இறுக்கமாவோ இல்லாட்டித் தளர்வாகவோ பிசைய வேணாம்.தண்ணியை கொஞ்சம் கொஞ்சமா விட்டுப் பிசைஞ்சு எடுங்க.அப்ப சரியா வரும்.

(3)அதுக்குப் பிறகு குழைத்த மாவை சிறு உருண்டைகளா உருட்டி எடுத்து வட்டமாக தட்டி எடுங்க.

(4)அதுக்குப் பிறகு அடுப்பில் தோசைக்கல் வைத்து அது சூடானதும் அதில் கொஞ்சமாக எண்ணைய் தடவி ரொட்டியைப் போட்டு வேகவிடுங்க.அடுப்பை மெல்லிய சூட்டில வச்சிருங்க.அப்பதான் இரண்டு பக்கமும் உள்ளுக்கும் சரியா வெந்து வரும்.

காய்கறி ரொட்டி ரெடி.கண்டிப்பா செய்து பாருங்க.நல்லாயிருக்கும்.
சீக்கிரமாய்ச் செய்யக்கூடியதும் ஆரோகியமானதுமான சாப்பாடு.

பி.கு - கடைசில தோசைக்கல் இல்லன்னு சொல்லிட்டார்.அப்புறம் வாங்கிச் சுட்டேன்னும் சொன்னார்.

ஹேமா(சுவிஸ்)

Monday, October 05, 2009

சாமக்கோழி.

சாமக்கோழி கூவுகிறது " " நடுச்சாமத்தில் வந்தார் " என்று சொல்லும் போது சாமம் என்றால் இரவு என்றே பொருள் கொள்ளப்படுகிறது.ஆனால் அவ்விதம் பொருள் கொள்வது அறியமையாகும்.

காரணம்,சாமம் என்பது ஒரு கால அளவீடு.அது இரவு நேரத்திற்கு மட்டும் உரியது அன்று.
சாமம் என்பது பகலிலும் உண்டு.இரவிலும் உண்டு.

60 நொடி = 1 வினாடி
60 வினாடி = 1 நாழிகை ( 1 நாழிகை = 24 நிமிடம் )
71/2 நாழிகை = 1 சாமம் .
8 சாமம் = 1 நாள் .
7 நாள் = 1 வாரம் .
15 நாள் = 1 பக்கம் .
2 பக்கம் = 1 மாதம் .
6 மாதம் = 1 அயனம் .
2 அயனம் = 1 ஆண்டு .
இதுவே நம் மக்களின் கால அளவீடு ( கணக்கீடு ).

இதில் 8 சாமங்கள் கொண்டது 1 நாள்.அதாவது பகலில் 4 சாமம் , இரவில் 4 சாமம். அதாவது ஒரு சாமம் என்பது 3 மணி நேரம்.எனவே,சாமம் என்பது வேளையைக் குறிப்பது என்பது தவறு.

ஒரு நாளைக்கு 60 நாழிகைகள் என்பது கணக்கு.60 நாழிகைகளை 8 ஆல் வகுத்தால் 7 1/2 கிடைக்கும்.7 1/2 நாழிகை ஒரு சாமம்.நான்கு சாமம் சேர்ந்தது ஒரு பகல்.அதேபோல் நான்கு சாமம் சேர்ந்தது ஓர் இரவு.எனவே சாமம் என்பது இரவு அல்ல.

ஹேமா(சுவிஸ்) [இன்று மெயிலில் கிடைத்தது.]

Saturday, October 03, 2009

தந்தியோ தந்தி.

ன்றைய காலத்தில் இல்லாத ஒன்றாகப் போய்விட்டது தந்தி என்கிற அந்தச் சொல் கூட.இன்று SMS ,Mail போல் அன்றைய காலகட்டங்களில் தபால் கந்தோர்களில் மட்டும் அவசர செய்திகளைப் பரிமாறிக்கொள்ள இந்தத் தந்தி உதவிக்கொண்டிருந்தது என்கிறார்கள்.படித்துச் சுவைத்த ஒரு தந்தி தருகிறேன்.உங்களின் அனுபவங்களையோ கேட்ட அனுபவங்களையோ தாங்களேன் கொஞ்சம் சிரிக்க.

தபால் கந்தோரில் தந்திப் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவருக்கு வேலை போய்விட்டதாம்.பின்ன...தந்தியைக் கீழ்க்கண்டபடி ஒருவரின் தந்தியை இன்னொருவருக்கு மாற்றி மாற்றி அடித்து அனுப்பினால் எப்படி...?நீங்களே தந்தியைச் சரி செய்து கொள்ளுங்கள்.

1) தந்தி - செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.இனிக் கடவுள்தான் உங்களைக் காப்பாற்றவேண்டும்.

பெற்றுக்கொள்பவர் - புதுமணத்தம்பதிகள்.

2) தந்தி - பணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.

பெற்றுக்கொள்பவர் - கல்லூரி மாணவன்.

3) தந்தி - பிரயாணத்தை ரத்துச் செய்யவும்.

பெற்றுக்கொள்பவர் - சாகக் கிடக்கும் ஒருவரைக் காப்பாற்றச் செல்லும் ஒரு வைத்தியர்.

4) தந்தி - வாழ்த்துக்கள்.இன்றுபோல் என்றும் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பெற்றுக்கொள்பவர் - வியாபாரத்தில் நொடித்துக்கொண்டிருக்கும் ஒருவர்.

5) தந்தி - இனி எந்தவித ஒரு சதம் கூட என்னிடமிருந்து கிடைக்காது.உடனே கிளம்பி ஊருக்கு வரவும்.

பெற்றுக்கொள்பவர் - நடிகையை ஒப்பந்தம் செய்யப் போயிருக்கும் பிரபல பட இயக்குனரின் காரியதரிசி.


ன்னொரு செய்தியையும் இதோடு இணக்கிறேன்.அதுவும் படித்துச் சுவைத்தது.அந்தக் காலத்தில் பட்டிணத்தடிகள் தஞ்சை ஜில்லா ,திருவாரூரில் ஒரு இளைஞனுக்குத் திருமணம் நடந்தபோது தந்தி மூலமாக வாழ்த்துரை வழங்கியதைப் பாருங்கள்.

"நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடி
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலவனெல் கலகலவெனப் புதல்வர்களைப் பெறுவீர்.
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மறத்துணையிற் கால் நுழைத்துக்கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கினைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீர் நீரே !"

பட்டிணத்தாருடைய வாழ்த்து எவ்வளவு பொருள் சுவையும் நகைச்சுவையும் அடங்கியிருக்கிறது.பாருங்களேன்.

ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP