Thursday, May 31, 2012

கலர் கலர் கலா...கலர்!

நம் எல்லாருக்கும் ஒரு பிறவிக் கலர்{நிறம்} உண்டென்பது உங்களுக்குத் தெரியுமா?

நாம் அனைவரும் பிறக்கும்பொழுதே நமக்கென்று ஒரு கலர்களோடுதான் பிறக்கின்றோம் அது என்ன என்பதைத் தெரிந்துகொண்டு உங்கள் நிறத்தின் ஸ்பெஷாலிட்டியை,குணநலங்களை அறிந்துகொள்ளலாமே!

எப்பிடி யெண்டா....காக்கா கருவாச்சி கருப்புக் கலர்,நேசன் ப்ரௌண் கலர்,மணியம் கஃபே ஓனர் சிவப்புக் கலர்,கலா நல்ல வெள்ளை,யோகா அப்பா என்ர கலர்,அதிரான்ர பூஸார் கருப்பு(சரியோ மணி?),அதிரா பௌர்ணமிக் கலர்,சத்ரியன்....முழுக்கருப்பு......இப்பிடி.இவை எல்லாரும்தான் உதாரணம் காட்ட எனக்குச் சுலபமாக் சிக்கிச்சினம்.

விச்சுவும் பொது நிறம்போல.(பொது நிறமெண்டா எப்பிடியெண்டு கேக்கப்படாது.பிறகு வாழைப்பழ ரொட்டி சுட்டுக் காட்டேலாது.அப்பிடியே பாக்கத்தான் வேணுமெண்டா தயவு செய்து ஓடிப்போய் அதிரான்ர பதிவில பாருங்கோ.).ஃப்ரெண்ட் கணேஸ் கண்ணாடி போட்டிருக்கிறதால சரியாத் தெரியேல்ல......(இண்டைக்கு இருக்குடி உனக்கு.ஹேமா ஓடிப்போயிடு வேலைக்கு.)

சரி...இவையள் எல்லாரும் கலருகளோட இருக்க .... தங்கட பிகர் எப்பிடிக் கலர்ல இருக்கவேணுமெண்டு தேடுவினம்.தாங்கள் கருப்புக் கண்ணனா இருந்துகொண்டு கல்யாணம் செய்யமட்டும் வெள்ளைப் பொம்பிளை சிவப்புப் பொம்பிளை வேணுமாம்.சத்ரியன் அதுதான் சிங்கப்பூரில கன்னியில்லாத் தீவில ஒற்றைக்காலில விரதம் இருக்கிறதா ஒலி விமலான்ர வானொலியின் இண்டைக்குச் சொன்ன ஃபேமஸ் நியூஸ் !

Friday, May 25, 2012

தமிழர் வாழ்ந்தமைக்கு ஆதாரமான Old Tamil Scriptions/ Inscriptions!

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது.அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு.....!

’தாமிரபரணி' ஆற்றின் கரையில் 'ஆதிச்சநல்லூர்' என்ற ஊர் உள்ளது.இது ஓர் இடுகாடு.இறந்தவர்களைப் புதைத்த இடம்.இதன் பரப்பளவு 114 ஏக்கர்.இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர்.தாழி என்றால் பானை என்பது பொருள்.இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை 'முதுமக்கள் தாழி' என்றும் ’ஈமத்தாழி’ என்றும் கூறுவர்.

Sunday, May 20, 2012

காலம் கடந்தபின் !

வெந்து வெடித்துக்கொண்டிருந்தான் அகிலன்.

ச்ச....எவ்வளவு பெரிய அவமானம்.அசிங்கம்.நினைக்க நினைக்க அழுகை ஆத்திரம் .... தன்னில் ஒரு அருவருப்பும் கூட அவனுக்கு.

அப்படி...என்னதான் கேட்டுவிட்டேன்.மனதில் உள்ளதை அப்படியே கேட்டேன்.உலகத்தில் யாரும் கேட்கக்கூடாத ஏதாவதா கேட்டேன்.

Wednesday, May 09, 2012

கிராமத்துக் காக்கா காட்டின பாசம் !


அன்பான இனிய பேச்சால் உலகையே கைக்குள் அடக்கலாம் என்பது உலக வழக்கு. ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை.எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லோரிடத்தும் இது சரிவரும் என்றும் சொல்ல முடியாது.ஆகக்குறைந்தது கடுஞ்சொற்களையாவது தவிர்க்கலாம்.ஏனெனில் நல்ல பெயர் எடுக்கப் பல காலம் பிடிக்கும்.ஆனால் இடம் காலம் அறியாத கடுஞ்சொற்களால் ஆயுள் முழுவதுற்குமான கெட்ட பெயர் சுலபமாக வந்து ஒட்டிக்கொள்கிறது.மனமும் குற்றத்தால் இளைத்துக்கொண்டே இருக்கும்.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP