Monday, February 07, 2011

நீங்கள் எந்த வழி ?

ல்லவனுக்கும் ல்லவனுக்கும் மூன்று வழி.

ல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இரண்டு வழி.

கெட்டவனுக்கும் கெட்டவனுக்கும் ஒரே வழி.

இது ஒரு விடுகதைபோல இருந்தாலும் இதற்கு அர்த்தமுள்ள நாடோடிக் கதை ஒன்று சொல்கிறேன்.

ஒரு ஒற்றையடிப்பாதையில் நல்லவனும் நல்லவனும் எதிர் எதிராக வருகிறார்கள்.அவன் செல்லட்டும் என்று ஒருவன் பாதையை விட்டு இடப்புறம் இறங்குகிறான்.அதே எண்ணத்துடன் மற்றவனும் பாதையை விட்டு வலப்புறம் இறங்கி விட்டுக்கொடுக்கிறான்.இங்கே மூன்று வழி தெரிகிறது.இதைத்தான் நல்லவனுக்கும் நல்லவனுக்கும் மூன்று வழி என்றார்கள்.

அதே ஒற்றையடிப் பாதையில் ஒரு நல்லவனும் கெட்டவனும் எதிர் எதிராக வருகிறார்கள்.கெட்டவனோ நான் ஏன் வழி விட்டுக் கொடுக்கவேண்டும் என்று பாதையை விட்டு இறங்காமல் நடக்கத் தொடங்க நல்லவனோ பாதையை விட்டு இறங்கி வழிவிட்டு இறங்கிப் போகிறான்.எனவே இதைத்தான் நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இரண்டு வழி என்றார்கள்.

அதே ஒற்றையடிப் பாதையில் கெட்டவனும் கெட்டவனும் எதிர் எதிராக வருகிறார்கள்.இருவருமே விட்டுக்கொடுக்காமல் நீயா நானா என்று மோதிக்கொள்கிறார்கள்.இதைத்தான் கெட்டவனுக்கும் கெட்டவனுக்கும் ஒரே வழி என்றார்கள்.

எனவே விட்டுக்கொடுத்தால் எல்லோருக்குமே வழி உண்டு!!!

ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP