Monday, June 13, 2011

முயற்சியின் உயர்ச்சி.

முயற்சி என்கிற கிரியா ஊக்கியைப் பற்றி அறிந்திருக்கிறோமா?எல்லா நல்ல குணங்களும் சிறந்த கொள்கைகளும் முறையான படிப்பறிவு நல்ல சூழல் எல்லாம் அமைந்திருந்தாலும் முயற்சி இல்லாவிட்டால் வாழ்வில் பயன் ஏதுமே இல்லை.

கொஞ்சம் முயற்சி செய்யும் குணத்தை வளர்த்துக் கொண்டால் நல்லது.இழந்தவைகள் இனிக் கிடைக்கப்போவதில்லை.நினைக்கும்போது வேதனையாக இருந்தாலும் புலம்பிக்கொண்டிருக்காமல் (என்னைப்போல) அடுத்த வழி தெரியும் திசையில் நடக்க வேண்டிய ஆயத்தங்களில் ஈடுபடுவதே பெருமையையும் வெற்றியையும் தரும்.

எங்களின் மன உறுதியும் முயற்சியின் அளவைப் பொறுத்தே எம் வாழ்வின் வளர்ச்சியும்.

முயற்சி தேவைதான்.அதே சமயத்தில் தன் பலம் மற்றும் அடுத்தவர் பலம் உணர்ந்தே செயற்படுதல் அவசியமாயிருக்கிறது.எங்களின் சக்திக்கு மீறிய செயற்பாடுகள் தரையில் தன் பலத்தை முயற்சித்துப் பார்க்கும் முதலையைப் போன்றது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

முயற்சியின் முழுப்பலனையும் பெறவிரும்பினால் சோம்பலை அறவே ஒழித்துக் கட்டுதல் முக்க்கியம்.(இந்த இடத்தில 3,4 பேர் என்னைக் கலாய்க்க ஓடி வருவினம்.)

முழு முயற்சியுடன் செயல்படும் வழக்கத்தைப் பழகிக்கொண்டால் சோர்வு,ஞாபகமறதி எம்மை விட்டுத் தூரவே போய்விடும்.

சரியான பயிற்சியுடனான முழுமையான முயற்சிக்கு மற்றவர்களின் எந்தச் சூழ்ச்சியும் தடை ஏற்படுத்தமுடியாது.

விதி,நேரகாலம்,அதிக்ஷ்டம்,பயம் என்று புலம்புவதில்லை என்று மனதில் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.இப்பிடித்தான் நான்.மனத்தளர்ச்சி இல்லாத முயற்சி விதியையே மாற்றியமைக்கும்ன் சக்தி கொண்டது.சில காலங்கள் தாமதமாகலாமே தவிர நல்லதே நடக்கும்.சத்தியமா நான் சொன்னதெல்லாம் உண்மை.

துயரங்கள் சோர்ந்து போகவேண்டாம்.விடையில்லாத வினாவோ தீர்வேயில்லாத பிரச்ச்னையோ இல்லை.விடைக்கான தீர்வுக்கான முயற்சியை அதிகப்படுத்த துயரங்கள் கைகாட்டி மறைந்துகொண்டேயிருக்கும்.

ஒரு காரியத்திற்காக முயற்சி செய்யும்போது இடையூறுகளால் மனம் தளர்வடையாமல் உறுதி கொண்ட மனம் கொண்டவராய் இருத்தல் அவசியம்.

அனுபவ அறிவு இல்லாத செயல்களில் ஈடுபடும்போது அதைப்பற்றித் தெரிந்தவர்களிடம் கலந்து ஆலோசித்து செயல்படுவது மிக மிக முக்கியம்.(இதில் நான் நிறையவே அடிபட்டிருக்கிறேன்.)அப்போதான் நிலையான வெற்றி கிடைக்கும்.

ஒரே நேரத்தில் பல காரியங்களில் கை வைக்காமல் ஒரு செயலில் மாத்திரமே முழுமையாக முயற்சிப்பதால் காலம் தாழ்த்தாமல் வெற்றி கிடைக்கும்.

எத்தனை காலம் சிறப்பாகத் திட்டம் போட்டாலும் அதற்கான செயற்பாட்டின்போது தளராத முயற்சியே சிறப்படைய வைக்கும்.

தளராத முயற்சி எனும் அஸ்திவாரத்தின் மேல் தொடங்கும் நமது வாழ்க்கை பாறை மேல கட்டிய வீட்டைப்போல உறுதியாய் அழகாய் மிளிரும்.(கல்லுப் பாறைக்கு மேல வீடெல்லாம் கட்டேலுமோ எண்டு கேக்கப்படாது...சொல்லிப்போட்டன் )

முயற்சிதான் வாழ்வதின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. தன்னைத் தானே உணர்ந்து கொள்வதற்கு வழி செய்கிறது. நாம் செய்யும் எல்லா முயற்சிகளிலும் நம்மை நாமே புரிந்து கொள்வது மகத்தானது.நம்மை நாம் புரிந்து கொள்ளாதவரையில் நமக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்திகளினால் பயன் எதுவும் ஏற்படாது. பிறப்பு இயற்கையானது போலவே முயற்சியும் நம்முடனேயே இருந்து கொண்டிருக்கிறது.

என் அனுபவம் இவைகள்.எத்தனையோ இடங்களில் மனம் தளர்ந்திருந்தாலும் என் முயற்சியே என்னை ஓரளவு பாதுகாத்து உயர்த்தி வைத்திருக்கிறது.எனக்கு நானே எத்தனயோ தரம் தட்டிக் கொடுத்துச் சந்தோஷப்பட்டிருக்கிறேன்.
எனக்கு....என் துணிச்சலுக்கு நன்றி....!

ஒரு ஊர்ல (சத்தியமா பாட்டிக் கதை இல்லை.)ஒரு பழ வியாபாரி இருந்தாராம்.அவர் வாழ்க்கையில முன்னேற எத்தனையோ முயற்சிகள் எடுத்தாலும் கஸ்டமாவே இருந்திச்சாம்.அவரோட மனைவி திட்டிக்கொண்டே இருந்தாவம்.மூன்று பிள்ளைகளும் இருந்திச்சினமாம்.அப்போ ஒரு நாள் தன்ர மூத்த மகனோட தன்ர கவலையை சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தாராம்.அப்ப அவரின்ர மகனுக்கு விளங்கிச்சாம்.

அப்பா பாவம்.அவர் சோர்ந்துபோகேல்ல.எவ்வளவு முயற்சி செய்றார்.ஆனாலும் எங்கட கஸ்டம் கஸ்டமாவே இருக்கு.அதற்காக அவரைச் சோரவிடக்கூடாது எண்டு நினைச்சு அவர்கூடையில இருந்து ஒரு பழத்தைப் பிச்சுக்காட்டி "அப்பா...பாருங்கோ இந்தப் பழத்துக்குள்ள இவ்வளவு விதைகள் இருக்கு.ஆனால் முளைக்கப் போட்டால் எல்லாம் முளைக்குமோ இல்லைத்தானே அதுபோல நாம் முயற்சிக்கிற எல்லாமே வெற்றியாகும் எண்டு நினைக்கிறது சரில்ல.நங்கள் விதைச்சுக்கொண்டேயிருப்போம்.ஏதோ ஒருநாள் நிச்சயமா ஒரு விதை முளைச்சு விருட்சமா ஆகும்.அப்பா கவலைப் படாதேங்கோ.இனி முயற்சிக்கு நானும் கூட உழைப்பேன்"எண்டு சொல்லிச் சமாதானம் சொல்லி ஊக்கப்படுத்தினானாம்.

கதையும் முடிஞ்சுது.காக்காவும் நித்திரையாப் போய்ட்டுது.....!

22 comments:

கவி அழகன் said...

அருமையாய் கதை வந்துள்ளது சுய ஊக்குவிப்பு பிரமிப்பாய் உள்ளது

தமிழ் உதயம் said...

முயற்சி தரும் வளர்ச்சி, தருவது என்றென்றும் மகிழ்ச்சி. கருத்து சொன்ன கதை நன்றாக இருந்தது.

அப்பாதுரை said...

கட்டுரையும் நன்று; கதையும்.

Anonymous said...

///அடுத்த வழி தெரியும் திசையில் நடக்க வேண்டிய ஆயத்தங்களில் ஈடுபடுவதே பெருமையையும் வெற்றியையும் தரும்.///தற்சமயம் வேண்டியதும் கூட ...

அந்த குட்டி கதை நல்லாய் இருக்கு..

நிரூபன் said...

முயற்சி பற்றி அனுபவங்களினை அடிப்படையாகக் கொண்டு ஒரு தத்துவப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

ஆமா அந்த 3,4 பேர் யாரு?
ஹி...ஹி...

Admin said...

முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை...

அருமையாக சொல்லி இருக்கிங்க..

கலா said...

முயற்சியின் முழுப்பலனையும் பெறவிரும்பினால்
சோம்பலை அறவே ஒழித்துக் கட்டுதல்
முக்க்கியம்.(இந்த இடத்தில 3,4 பேர்
என்னைக் கலாய்க்க ஓடி வருவினம்.)\\\\\\

அம்மாகண்ணு ........
இது..இது...நீங்க..நீங்க....எழுதியதாடா.....செல்லம்!
மக்களே! சோம்பல் என்றால் என்னென்று
தெரியாம வளர்ந்தவ என்பொண்ணு ஹேமாகுட்டி
தப்பாக எண்ணவேண்டாம் அவ்வளவும் நிஐமான
.................................. நீங்களே நிரப்புங்கள்.

ராமலக்ஷ்மி said...

//நாம் முயற்சிக்கிற எல்லாமே வெற்றியாகும் எண்டு நினைக்கிறது சரில்ல.நங்கள் விதைச்சுக்கொண்டேயிருப்போம்.ஏதோ ஒருநாள் நிச்சயமா ஒரு விதை முளைச்சு விருட்சமா ஆகும்.//

அருமையாய் சொல்லியிருக்கான் பையன்.

நல்ல பதிவு ஹேமா.

கீதமஞ்சரி said...

விடாமுயற்சிக்கும் ஒரு வினையூக்கி தேவை, உங்களின் இந்தக் கட்டுரை போல்.... அப்பாவுக்கு ஊக்கம் அளித்த மகனைப்போல்...! நல்ல பதிவு ஹேமா.

சத்ரியன் said...

//முயற்சியின் முழுப்பலனையும் பெறவிரும்பினால் சோம்பலை அறவே ஒழித்துக் கட்டுதல் முக்க்கியம்.//

(இந்த இடத்தில 3,4 பேர்
என்னைக் கலாய்க்க ஓடி வருவினம்.)\

ஹேமா,

“முக்க்கியம்” - இதுக்கெதுக்கு இத்தன-”க்”- வருவினம்.

(அந்த 3, 4 பேர்ல நான் இல்லீங்க.)

ம்ம்ம்!. நல்ல அனுபவ அறிவுரை. இன்னும் நிறைய எழுதுங்கோ. என்னைய மாதிரி சோம்பேரிங்க திருந்துவாங்களா -ன்னு பாப்பம்.

ஸ்ரீராம். said...

//"இந்த இடத்தில 3,4 பேர் என்னைக் கலாய்க்கஓடி வருவினம்"//
சென்னைத் தமிழும், இலங்கைத் தமிழும் கலந்த வரிகள்...!

//"ஒரு காரியத்திற்காக முயற்சி செய்யும்போது இடையூறுகளால் மனம்தளர்வடையாமல் உறுதி கொண்ட மனம் கொண்டவராய் இருத்தல்அவசியம்."//

பாரதியாரின் உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா பாடல் நினைவுக்கு வருகிறது.

குட்டிக் கதையின் தத்துவம் அருமை.

நிலாமகள் said...

இந்த‌ப் ப‌திவை எங்க‌ள் க‌ணினியில் சேமித்துக் கொண்டேன் ஹேமா... திற‌க்கும் போதெல்லாம் ப‌டித்தேனும் திருந்துகிறேனா பார்ப்ப‌ம் எண்டுதான்.சுவையாத்தானிருக்கு உங்க‌ட‌ பேச்சுவாட்ட‌ம்.

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க ஹேமா..நம்பிக்கையும் முயற்சியும் இன்னும் உயிர்பித்து கொண்டே இருக்கிறது.

முயற்சிகள் தொடருவேன்.

இராஜராஜேஸ்வரி said...

சரியான பயிற்சியுடனான முழுமையான முயற்சிக்கு மற்றவர்களின் எந்தச் சூழ்ச்சியும் தடை ஏற்படுத்தமுடியாது.

Very Nice Words.

மோகன்ஜி said...

சிந்திக்க வைக்கும் பதிவு ஹேமா.. சோர்ந்து போகாமல் இருந்தால் தூர்ந்து போகாமல் இருப்போம்.. மேலே.. மேலே.. மேலே.. நட.. நட.. நடந்து கொண்டே இரு... பாதை விரியுது பார்.

உன் கதையை மனசின் ஓரத்தில் விதைத்து வைத்திருக்கிறேன்.. என்றோ ஒரு நாள் பேரப்பிள்ளைகள் வரும் போது அதை சொல்ல வேண்டாமா அன்பு ஹேமா?

ஹேமா said...

யாதவன்...முதல் வணக்கம் !

தமிழ்...!

அப்பாஜி...!

கந்தசாமி...!

நிரூ...!

சந்ரு...நிறைய நாளாச்சு.சுகம்தானே !

கலா...கலாய்காதீங்க.நான் 2 புளொக்கர் வச்சு எழுதிக்கொண்டு, வேலைக்கும் போய் வந்து,வீட்டு வேலையும் செய்றேனாக்கும் !

ராமலஷ்மி அக்கா...!

கீதா...!

சத்ரியா...சோம்பேறி...சோம்பேறி !

ஸ்ரீராம்...உண்மையாவே எனக்கு இப்போ யாழ் தமிழும் தமிழ்நாட்டுத் தமிழும் கலந்துதான் போச்சு.
அப்பாகூட ஏன்னு விசாரிச்சார் !

நிலாமகள்...அத்தனை சோம்பேறியா நீங்க நிலா.அப்போ நான் பரவால்ல !

தவறு...!

இராஜேஸ்வரி...!

மோகண்ணா...என் இந்தப் பதிவு உங்க பேரப்பிள்ளைகளுக்கா.அப்போ என் பேரப்பிள்ளைகள்.நல்ல விஷயம் !

சோம்பல் இல்லாம முயற்சியோட உற்சாகமா வந்து என்னை உயர்த்தின உங்கள் அத்தனை பேருக்கும் என் அன்பு நன்றிகள் !

முனைவர் இரா.குணசீலன் said...

சோம்பல் நம்மைச்சுற்றி நாமே கட்டிக்கொள்ளும் கல்லறை
!

லெமூரியன்... said...

எப்படி இருக்கிறீர்கள் ஹேமா???
மன்னிக்கவும் வலைப் பக்கம் வந்து நாட்கள் ஆகி விட்டது...
பதிவை படித்தேன்....
சற்று சோர்ந்து போகும் பொழுது எனக்கு மனதில் தோன்றும் நினைவுகளை நீங்கள் எழுத்துக்கள் ஆக்கியிருக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள்....
நலம்தானே ஹேமா??
:) :)

ஜெயா said...

முயற்சியின் உயர்ச்சி மனசுக்கு உற்சாகம் தரும் அழகான பதிவு ஹேமா.

ரிஷபன் said...

எத்தனையோ இடங்களில் மனம் தளர்ந்திருந்தாலும் என் முயற்சியே என்னை ஓரளவு பாதுகாத்து உயர்த்தி வைத்திருக்கிறது.எனக்கு நானே எத்தனயோ தரம் தட்டிக் கொடுத்துச் சந்தோஷப்பட்டிருக்கிறேன்.
எனக்கு....என் துணிச்சலுக்கு நன்றி....!

நூற்றுக்கு நூறு உண்மை!
நாமே நமக்கு உற்சாகத் திறவுகோலைக் கண்டுபிடித்துக் கொண்டால் லட்சியக் கதவுகள் தானே திறக்கும்

Unknown said...

முயற்சி தான் திருவினை யாக்கும்
என்பதின் முழு விளக்கம்
தங்கள் பதிவு.
நலமா சகோதரி!
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

சுந்தரா said...

//நாம் முயற்சிக்கிற எல்லாமே வெற்றியாகும் எண்டு நினைக்கிறது சரில்ல.நங்கள் விதைச்சுக்கொண்டேயிருப்போம்.ஏதோ ஒருநாள் நிச்சயமா ஒரு விதை முளைச்சு விருட்சமா ஆகும்//

சத்தியமான வார்த்தைகள் ஹேமா.எடுத்துச்சொல்லியிருக்கிறவிதமும் அருமை.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP