Thursday, August 05, 2010

அம்மிணி இழுத்த தொடர் சந்தியில்.

ம்ம்ம்...தொடர் எழுத அவ்வளவு விருப்பமில்லை.ஏனென்றால் அதுவும் ஒரு பதிவு.அதில் ஏதாவது ஒரு விஷயம் இருக்கவேணும்.இந்தப் பதிவில் ஏதும் இருக்கா ?! ....நீங்களே கண்டு பிடிங்க !

என்னை இந்த வம்பில மாட்டிவிட்ட சின்ன அம்மிணிக்கு நன்றி நன்றி மிக்க நன்றி தோழி.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் ?

ஹேமா(சுவிஸ்)

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயர் ஹேமவதி.சுவிஸ் என் பெயரோடு ஒட்டிக்கொள்ளக் காரணம்...முன்பு வானொலியில் பங்குபற்றிக்கொண்டிருந்த நேரத்தில் இன்னொரு ஹேமாவும் இருந்தார். அதனால் சுவிஸிலிருந்து ஹேமா என்று தொடங்கி....ஹேமா(சுவிஸ்) ஆகிவிட்டது.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

ஓ...அந்தக் கதையா.எனக்கு என்னமோ சின்னப்பிள்ளைல இருந்து ஊடகத் துறை மேல நிறைய விருப்பம்.நாள் முழுக்க ரேடியோ அலறினபடியே இருக்கும்.அதில வாற அறிவிப்பாளர் என்ன திறமையோட இருக்கிறார் என்று அறிஞ்சு வியப்பேன்.கடிகாரம் பார்க்காமலே நிகழ்ச்சி கேட்டு நேரத்தைச் சொல்லிவிடுவேன்.அப்படி ஒரு பைத்தியம்.செய்தி வாசிப்பவர்கள் தொடக்கம் இரவில நித்திரைக்குத் தாலாட்டுப் படிக்கிறவர்கள் வரைக்கும் எல்லோருமே என் விசிறிகள்தான்.

அதுபோல கவிதைகள் எழுதி எழுதி அவர்களைப்போல வாசிச்சுப் பார்ப்பேன்.ஆனா அனுப்பினது கிடையாது.வீட்டில யாரும் ஊக்கப்படுத்தேல்ல."என்னடி கண்ட நிண்ட இடமெல்லாம் கிறுக்கி வைக்கிறாய்" என்று மட்டும்தான் கேட்டார்கள்.

அப்பிடி இப்பிடி நாள் ஓடி நானும் சுவிஸ் வந்தேன்.அப்ப இலண்டன்ல இருந்து 2-3 வானொலிகள் ஒலிபரப்புச் சேவையில் இருந்தன.அவைகளுக்கு மெல்ல மெல்ல எழுதத் தொடங்கினேன்.என் கவிதைகள் ஒலிபரப்பாகின.அதன்பிறகும் வானொலிகளுக்கு இடையிலான பிரிவுகள்,அரசியல் பிரிவுகள் என ஒரு வானொலியை இன்னொரு வானொலி திட்டுவதும்,கேட்பவர்களும் சார்ந்து பிரிந்து நிற்பதும் என்னை அவர்களோடு ஒட்டி நிற்கவிடாமல் தனித்தே விடப்பட்டேன்.புலம் பெயர்ந்து ஒட்டுக் குடித்தனம் நடத்தும் வேளையிலும் ஒற்றுமையில்லை.விருப்பமில்லை.கேட்பதோடு மட்டும் நிறுத்திக்கொண்டேன் என்னை.

அதன் பின்னரும் கிறுக்கல்கள் தொடர்ந்தபடிதான் படிக்கும் புத்தக மூலையிலும்,பாடும் கழிவறைக் கடதாசியிலும் கூட.வானொலியில் என் திறமையைக் கண்ட இலங்கைச் சூரியன் வானொலி அறிவிப்பாளர்,என் ஊர்க்காரர்,என் உறவுக்காரர் தீபசுதன் தான் இப்படி ஒரு வழி இருக்கு என்று சொல்லி அவரும் என் தமிழகத்து நண்பருமான அரவிந் ம் சேர்ந்து ஒரு புளொக்கர் செய்து தருகிறோம் என்று இதைச் செய்து தந்தார்கள்.

அவர்கள் செய்ததும் போதும்.நான் அவர்களைப் படுத்தின பாடும் போதும்.அது பெரும் கதை.கருப்புத்தான் வேணும்.அதுவும் மூன்றாகப் பிரிஞ்சிருக்க வேணும்.மேல என் மன அவதிகள் ஓடவேணும்.இப்பிடி இப்பிடி....!

தொடக்கிவிட்டதோட தீபசுதன் சரி.பதிவுகளின் அபிப்பிராயம் மட்டும் எப்போதாவது சொல்வார்.அரவிந் தான் இப்பவும் அவசர உதவியில் இருக்கிறார்.என்றாலும் அவருக்கும் பயம்.எதுக்கோ இந்தக் கொக்கு ஒற்றைக்காலில நிக்கபோகுது என்று போன் பண்ணினாலும் சிலசமயம் போன் "நீங்கள் போன் செய்த நபர் இப்போ தூக்கத்தில்" என்று சொல்லச் சொல்லிடுவார்.

புளொக்கர் செய்ய முதல் அரவிந் ஏதோ ஒரு கவிதைத் தளத்தில் ஒரு கவிதையைப் பதிவிட்டார் படத்தோடு.அதுவே எனக்கு ஆர்வமாய் இருந்தது.இப்போது சந்தோஷப் படுவார்கள் இருவரும்...சும்மா விளையாட்டாகத் தொடங்கித் தந்தோம்.நீங்கள் அதை ஆர்வத்தோடு அழகாகக் கொண்டு போகிறீர்கள் என்று என்னை ஊக்கப்படுத்துவார்கள்.
அவசர உதவியாளர் இருவரும் இலண்டனில்தான் இருக்கிறார்கள்.
உண்மையில் இருவருக்கும் மனம் நிறைந்த நன்றி.

அதன் பின் என்னை இன்றுவரை தொடரும் இணைய நண்பர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.அவர்கள் தரும் பின்னூட்டம் தரும் ஊக்கம்தான் அடுத்த கவிதைக்கான அஸ்திவாரம்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

என் குழந்தைநிலா பிரபல்யம் அடைந்திருக்கிறாளா.அப்படி நீங்கள் சொன்னால் சந்தோஷம்தான்.எனக்கு வந்து என்னை ஊக்கப்படுத்தும் நண்பர்களை நானும் ஊக்கப்படுத்தத் தவறாமல் பின்னூட்டம் தருவேன்.வேறு லங்காஸ்ரீ இணையத்தில் என் தளத்தை இணைத்திருக்கிறார்கள்.மற்றும் தமிழ்மணம்,தமிழிஸ் லும் இணைத்திருக்கிறேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

பாதிக்குப் பாதி ....ஓரளவு பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.யாரிடமும் சொல்லி ஆறமுடியாத மன அவஸ்தை எழுத்துக்குள் அடங்கிப் போகிறது.யாரிடமோ சொல்லிவிட்டதுபோல ஒரு பெரிய பாரம் இறங்கினதுபோல பெருமூச்சு ஒன்று வெளிவரும்.அது சந்தோஷமோ, கவலையோ அல்லது கோபமாய்த் திட்டவேணுமோ,செல்லமாய்க் கொஞ்சவேணுமோ எல்லாமே எழுத்துக்களில் அடக்கிக் கொள்வேன்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ஐயோ....முழுக்க முழுக்கப் பொழுது போக்குத்தான்.எனக்கு லாபம் ன்னா என் மன அழுத்தம் குறைகிறது.அட....இதில சம்பாதிக்கவும் முடியுமா அப்பிடியே இருந்தாலும் வேணாம். நிறையவே சம்பாதிச்சு வச்சிருக்கிறேன்.போதும்!

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இரண்டு.என்ன கேள்வி இது.இரண்டுமே தமிழ்தான்.ஒன்று "வானம் வெளித்த பின்னும்". அடுத்து ஒரு வருடத்தின் பின்னர் கவிதை தவிர்த்து வேறு விஷயங்கள் எழுதவென்று தொடங்கித் தந்தார்கள் "உப்புமடச்சந்தி".கவிதைகள் எப்போதும் கவலையாகவே இருக்கு என்று...நகைச்சுவையாகக் கதைச்சுச் சிரிக்கலாம் என்றுதான் தொடங்கினேன்.இந்த இடத்தில் கடையம் ஆனந்த் க்குத்தான் நன்றி.கவிதைப் பக்கத்தில் வந்து அடிக்கடி சொல்லிக் கொள்வார் .....ஏன் இப்படிச் சோகமான கவிதைகள் என்று !அவரின் அந்தப் பின்னூட்டங்களே சந்தோஷமான பதிவுகளுக்காக இன்னொரு பக்கம் தேவை என ஊக்கம் தந்தது.

என்ன எழுதப்போகிறேன் என்று தெரியாமலே எதையாவது அங்கும் பதிவிட்டபடி இருக்கிறேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை கட்டாயம் வரவேணும் இந்த மன ஆமைக்குள்ளயும்.அப்பத்தான் எழுதவேணும் என்கிற உற்சாகம் வரும்.

நல்லா எழுதுற எல்லார் மேலயும் பொறாமை வரும். பாரா அண்ணா மேல,நேசன் மேல பொறாமை.பிறகு ...ஒருத்தர் பேரும் சொல்லமாட்டேன்.ஆனா நல்லாச் சிறுகதை... கட்டுரை...சமூக விழிப்புச் சங்கதிகள் எழுதுற,பிழை பிழையா எழுதுற,கும்மி அடிக்கிற,நகைச்சுவையா எழுதுற,படம் வரையிற,அரசியல் அனுபவம்ன்னு எழுதுற எல்லார் மேலயும் அன்போட பொறாமை இருக்கு !

திறமையா எழுதுறவங்க பதிவுக்குப் போய் அவங்க என் பக்கமே வராம இருந்தாலும் அவங்க திறமையைப் பாராட்டிவிட்டு வருவேன்.அவங்க என்னை ஒரு லூசுன்னு நினைச்சாலும் பரவாயில்லை.உண்மையில் பலராலும் புகழப்படும் சிலர் என் பக்கம் வருவதேயில்லை. காரணம் தெரியவில்லை.

ஏதாவது என் மீது தப்பிருக்கோ அல்லது தப்பான விஷயங்களை எழுதுகிறேனோ என்று கூட நான் நினைத்துக்கொள்வேன்.அவங்க வரணும் என்னைப் பாராட்டி வாழ்த்தணும்ன்னு எப்பவும் எதிர்பார்க்கிறேன்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி அந்த பாராட்டைப் பற்றி..

உண்மையில் இந்தக் கேள்விக்குக் குழப்பம்தான் பதில்.குழந்தைநிலாதான் என்னோட முதல் தளம்.அதில டெம்லேட் பிடிக்கேல்ல பிடிகேல்ல என்று அடிக்கடி அழித்துவிடுவேன்.4-5 மாதங்களின் பின் தான் இந்த டெம்லேட் சரி என்று தலை ஆட்டினேன்.அதனால் எந்தக் கவிதை முதல் பதிவிட்டேன்....யார் பின்னூட்டம் என்று சொல்லத் தெரியவில்லை.முதல் கவிதை பதிவில் 25.01.2008 என்று இருக்கிறது.

அதோடு ஆரம்ப காலங்களின் ஒரு பின்னூட்டம் காணத் தவமாய்த் தவமிருக்க வேணும். யாருக்கும் என் பக்கம் தெரியவில்லை.எனக்கும் யாரையும் தெரியவில்லை.மற்றவர் தளங்கள் போகவோ பின்னூட்டம் போடவோ தெரியவில்லை.10-15 கவிதைகளின் பின் இரவீ தான் ஒரு கவிதைக்கு அதுவும் 3-4 மாதங்களின் பின் பின்னூட்டம் போட்டிருந்தார்.

comments: Ravee (இரவீ )
//நான் உன் அன்பான
ராட்சதக் காதலிதான்.//

நீங்க ஆரம்பத்தில் இருந்தே அப்படி தானா... சரி சரி.
18 December, 2008 19:47

இந்த நேரங்களில் தமிழ் மணம்,தமிழிஸ்,லங்காஸ்ரீ எதுவும் இணையாத காலங்கள்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

எல்லோரது திறமைகளையும் ஒருவருக்கொருவர் பாரபட்சம் இல்லாமல் ஊக்கம் தாருங்கள் என்று இணையங்களில் இருக்கும் திறமை மிக்க...அனுபவம் நிறைந்த பெரியவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

நிலா அம்மாவின் 31 + 1 கேள்விகள் எனும் என் பழைய தொடரிலும் கொஞ்சம் என்னைப்பற்றிச் சொல்லியிருக்கு.

நான் யாருக்கும் கரைச்சல் குடுக்க மாட்டேன் இதைத் தொடரச் சொல்லி.இந்தத் தொடர் அநேகமாக எல்லோருமே எழுதிட்டாங்க.

நான் குடுத்தா ரவி கிட்டத்தான் குடுக்கணும்.எனக்குத் திட்டு வாங்கப் பிடிக்கேல்ல இப்பல்லாம் !

ஐயோ....இலக்கிய மேதையாம்(அவரே சொல்லிக்கிறார்) மேவீ பண்ற தொல்லை தாங்கமுடியேல்ல.சரி...அவர் இந்தத் தொடரைத் தொடரப்போகிறாராம்.சரி மேவீ எழுதுங்கோ!

ஹேமா(சுவிஸ்)

59 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

உங்களின் மனம்திறந்த வார்த்தைகள் மனதைத்தொடுகிறது
தங்களின் நட்பில் ஆனந்தம்

எல் கே said...

ungalai patri niraya arinthu konden hema

பா.ராஜாராம் said...

//ஏதாவது என் மீது தப்பிருக்கோ அல்லது தப்பான விஷயங்களை எழுதுகிறேனோ என்று கூட நான் நினைத்துக்கொள்வேன்.அவங்க வரணும் என்னைப் பாராட்டி வாழ்த்தணும்ன்னு எப்பவும் எதிர்பார்க்கிறேன்.//

ஏன் இப்படியெல்லாம் எதிர் பார்க்கிற? லூசாப்பா நீ? :-)

எதிர்பார்ப்புகள் அற்று ஆத்ம திருப்திக்கு எழுதுடா. எழுதுவதை எல்லாம் ஃபைல் பண்ணி வைக்க ஒரு இடம் என எடுத்துக்கோ.

உண்மையில், நல்லாவேதான் எழுதுகிறாய். தொடர்ந்து நட...

வால்பையன் said...

//.முழுக்க முழுக்கப் பொழுது போக்குத்தான்.எனக்கு லாபம் ன்னா என் மன அழுத்தம் குறைகிறது.//

எல்லாருக்கும் அதே தான்!

நட்புடன் ஜமால் said...

நிறைய சம்பாதித்து வச்சிருக்கீங்களா

a/c நம்பர் அனுப்பட்டுமா :P

Riyas said...

எல்லாம் அமைதியான ஆழமான கருத்துள்ள பதில்கள்.. உங்களைப்பற்றி தெரிவித்தமைக்கு நன்றி ஹேமா அக்கா..

தமிழ் உதயம் said...

உங்களைப்பற்றி நல்லா அழகா எழுதி இருக்கீங்க.

Katz said...

//உண்மையில் பலராலும் புகழப்படும் சிலர் என் பக்கம் வருவதேயில்லை. காரணம் தெரியவில்லை.//

மன்னிக்கவும், இனி கண்டிப்பா உங்க தளத்துக்கு வந்து பாராட்டி கருத்துகள் சொல்றேன்.

ஹி! ஹி!

Unknown said...

//நான் யாருக்கும் கரைச்சல் குடுக்க மாட்டேன் இதைத் தொடரச் சொல்லி.இந்தத் தொடர் அநேகமாக எல்லோருமே எழுதிட்டாங்க.//

இது நேர்மை...

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப நல்ல பதில்கள் ஹேமா.. நம்முடைய கருத்துக்களை மனம்விட்டு பகிர்ந்து கொள்ளும்போது ஒரு ஆத்மதிருப்தி இல்லையா ஹேமா..

நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க.. உங்கள் கவிதையை படித்து படித்துதான் எனக்கும் கவிதை எழுதணும் என்ற ஆவல் வந்தது. முதல்ல கவிதையா நம்மாலெல்லாம் எழுதமுடியுமா என்று நிறையதடவைகள் யோசிச்சிருக்கேன்.

கண்டிப்பாக நம்முடைய எழுத்துக்கள் எல்லோராலும் பாராட்டப்படும்.

நல்ல பகிர்வு ஹேமா.. வாழ்த்துகள்.

சத்ரியன் said...

//."என்னடி கண்ட நிண்ட இடமெல்லாம் கிறுக்கி வைக்கிறாய்" என்று மட்டும்தான்.....?//

பாவம் அம்மாவும், அப்பாவும்!

அவங்கள இப்பிடி உப்புமடச் ”சந்தி”யில மாட்டி விட்டுட்டியே? இப்போ சந்தோசந்தானே?

இன்னும் என்னென்னல்லாமோ எதிர்ப்பார்த்தேன். ஏமாத்திட்ட. ம்ம்ம்ம்...!

Ahamed irshad said...

Good Post Hema.. Thanks For Sharing..

Radhakrishnan said...

அருமையான பதில்கள் ஹேமா.சுவிஸ். நன்றி.

ஆதவா said...

ஹாஹா.. மீண்டும் தொடர் பதிவா...
சற்று உங்களைப் பற்றீ தெரிந்து கொள்ள முடிந்தது.
மனதில் மிச்சம் வைக்காமல் நீங்கள் சொன்னதும் பிடித்திருந்தது.

மேவி... said...

ஹேமா ...உங்க மேல எனக்கு கொஞ்சம் கோவம். இல்ல இல்ல நிறைய கொஞ்ச கோவம் ...

நல்ல நட்புக்கள் கிடைப்பதும் பதிவுகளால் தானே :)

நீங்க நிறைய எழுதுங்க இந்த தளத்தில்.....

கும்மி அடிக்க ...எழுத்து பிழை உடன் எழுத எல்லாம் தனி திறமை வேண்டும் .....தெரியுமா

sathishsangkavi.blogspot.com said...

//சந்தோஷமோ, கவலையோ அல்லது கோபமாய்த் திட்டவேணுமோ,செல்லமாய்க் கொஞ்சவேணுமோ எல்லாமே எழுத்துக்களில் அடக்கிக் கொள்வேன்.//

இது சரி........

மேவி... said...

என்னை யாருமே தொடர் பதிவுக்கு கூப்பிடல ...

நீங்களாவது கூபிடுங்க ஹேமா ......

Priya said...

ஹேமா வெளிபடையான உங்க பதில்கள் பிடிச்சிருக்கு. எனக்கு உங்களிடம் தனியாக பேச வேண்டும். முடிந்தால், விருப்பம் இருந்தால் எனக்கு மெயில் பண்ணுங்க.

நசரேயன் said...

//நிறையவே சம்பாதிச்சு
வச்சிருக்கிறேன்.//

நண்பர்களை ??

நசரேயன் said...

//என்னை ஒரு லூசுன்னு நினைச்சாலும்
பரவாயில்லை//

தனியா வேற சொல்லனுமா ?

நசரேயன் said...

//அனுபவம் நிறைந்த பெரியவர்களிடம்
கேட்டுக்கொள்கிறேன்.//

என் பேரை போட்டு இருக்கலாம்

ஜெயா said...

ஹேமா உங்களின் ஆர்வத்துக்கும் அறிவுக்கும் பாராட்டுக்கள்.உங்கள் இரண்டு வலைத்தளமும் மேலும் பிரபல்யம் அடைய வாழ்த்துக்கள் தோழி.....

நசரேயன் said...

//ஹேமா(சுவிஸ்)//

சுவிஸ்ல வேற யாரும் ஹேமா இருந்தா என்ன பேரு வைப்பீங்க?

கவுஜாய்னி ஹேமா(சுவிஸ்) ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகா எழுதி இருக்கீங்க

Unknown said...

Vanthutten. Padichitten. Pinniottam pottutten. Pothuma? :)))))

சௌந்தர் said...

உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு... வாழ்த்துக்கள்....

Unknown said...

ஒப்பனை இல்லாத பதில்கள். நன்று

சாந்தி மாரியப்பன் said...

அருமையான பதில்கள் ஹேமா..

Mahi_Granny said...

ஹேமா வெளிப்படையான பதில்கள். இன்று உங்கள் ப்லொக்கில் நிறையவே நேரம் செலவளித்திருக்கிறேன் . திருப்தியாய் இருக்கு. வாழ்த்துக்கள்

மணிநரேன் said...

நல்லா எழுதியிருக்கீங்க.

Karthick Chidambaram said...

அருமையான பதில்கள்.

//ஆனா அனுப்பினது கிடையாது.வீட்டில யாரும் ஊக்கப்படுத்தேல்ல."என்னடி கண்ட நிண்ட இடமெல்லாம் கிறுக்கி வைக்கிறாய்" என்று மட்டும்தான் கேட்டார்கள்.//

ஹ்ம்ம்

நேசமித்ரன் said...

அட தொடர் பதிவா ? ம்ம்

மிக வெளிப்படையான பதில்கள்

எனக்கும் பொறாமையா இருக்கும் சமயத்துல இப்படி காதல் சொட்ட சொட்ட ... துயரம் பெருக பெருக ...
இயலாமையில் மருகி கொதிக்க கொதிக்க எழுதக் கூடலியே என

வாழ்த்துகள் ஹேமா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒரு குழந்தையிடம் கேள்வி கேட்டுப் பெற்ற பதில்கள் போல அழகா இருக்கிறது ஹேமா..
பா ரா வின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.. :)

Paleo God said...

//ஏதாவது என் மீது தப்பிருக்கோ அல்லது தப்பான விஷயங்களை எழுதுகிறேனோ என்று கூட நான் நினைத்துக்கொள்வேன்.அவங்க வரணும் என்னைப் பாராட்டி வாழ்த்தணும்ன்னு எப்பவும் எதிர்பார்க்கிறேன்.//

நசரேயன் பாருங்க எப்படி வருத்தப் படறாங்க!

பெரிய மனசு பண்ணி அடிக்கடி வந்து வாழ்த்துங்க பாஸூ:)

அப்பாதுரை said...

அருமையான பதில்கள் (களுக்கு ஏற்ற கேள்விகள்?)

தீபசுதன் வாழ்க!

"மன அவஸ்தை எழுத்துக்குள் அடங்கிப் போகிறது" சரியாய்ச் சொன்னீங்க.

Anonymous said...

//என்னடி கண்ட நிண்ட இடமெல்லாம் கிறுக்கி வைக்கிறாய்" என்று மட்டும்தான் கேட்டார்கள்.
//

இவ்வளவு பெரிய கவிதாயினி ஆவீங்கன்னு அவங்களுக்கு தெரியாம போச்சே.

//அவங்க வரணும் என்னைப் பாராட்டி வாழ்த்தணும்ன்னு எப்பவும் எதிர்பார்க்கிறேன்//

எல்லாருக்குள்ளயும் அந்த ஒரு சின்ன எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கத்தான் செய்யும் ஹேமா

அழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றி

ஸ்ரீராம். said...

ஐந்தாவது கேள்விக்கான பதிலில் உண்மை இருக்கிறது. உணர்ந்த வரிகள். பொதுவாக எல்லா பதில்களுமே சிறந்த பதிலை வரவழைத்திருக்கின்றன. பாராட்டுக்கள் ஹேமா.

ஜெய்லானி said...

//என் குழந்தைநிலா பிரபல்யம் அடைந்திருக்கிறாளா.அப்படி நீங்கள் சொன்னால் சந்தோஷம்தான்//

எஸ் :-))
எஸ் :-))
எஸ் :-))
எஸ் :-))
எஸ் :-))

'பரிவை' சே.குமார் said...

தொடர் பதிவு தொய்வில்லாமல் விறுவிறுப்பாய் இருந்தது.

நல்ல பதில்கள்.

வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

நல்ல பகிர்வு ஹேமா... உங்களப்பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சிகிட்டேன்... பதிவெழுத தாங்கள் வந்த கதை சுவாரசியம்....

சிநேகிதன் அக்பர் said...

உங்களை பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி ஹேமா.

கலா said...

இந்தப் பதிவில் ஏதும் இருக்கா ?
! ....நீங்களே கண்டு பிடிங்க !\\\\\\

பாதிக்குப் பாதி ....ஓரளவு பகிர்ந்துகொண்டிருக்கிறேன்
.யாரிடமும் சொல்லி ஆறமுடியாத மன அவஸ்தை
எழுத்துக்குள் அடங்கிப் போகிறது.யாரிடமோ
சொல்லிவிட்டதுபோல ஒரு பெரிய பாரம் இறங்கினதுபோல
பெருமூச்சு ஒன்று வெளிவரும்.அது சந்தோஷமோ,
கவலையோ அல்லது கோபமாய்த் திட்டவேணுமோ,
செல்லமாய்க் கொஞ்சவேணுமோ எல்லாமே
எழுத்துக்களில் அடக்கிக் கொள்வேன்.\\\\\\\\\\

நான் கண்டுபிடித்து விட்டேன்
ஏதாவது பரிசு உண்டா? தலைவி!!

Anonymous said...

ரொம்ப நல்ல பதில்கள்

அண்ணாமலை..!! said...

உங்களுக்கென்னங்க தங்கத்துக்கு!!!!
சும்மா அடிச்சு தூள் கிளப்புறீங்க!
நிறைய பேசுவீங்க போலிருக்கு!
(எழுத்திலயும்!)
:)

ஜோதிஜி said...

சரியான நேரத்தில் தான் வந்துள்ளேன்.

நீங்கள் குறிப்பிட்டு சொல்லியுள்ள பல முக்கிய சம்பவங்கள் எவர் பின்னோட்டத்திலும் வரவில்லை.

எல்லோருமே தனிப்பட்ட ஹேமவதி என்பவரை தனிப்பட்ட முறையில் அவருடைய எழுத்தை கவிதையை பிடித்து உள்ளதை அப்படியே மேலோட்டமாக எடுத்துக் கொண்டு நகர்ந்து உள்ளார்கள்.

உங்களிடம் எல்லாத்திறமையும் உள்ளது. சில சமயம் ரௌத்தரம் கூட வருகிறது. ஏன் வம்பு என்று ஒதுங்கி விடுவதை பல முறை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.

நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன்.(?)

அ.முத்து பிரகாஷ் said...

//அவசர உதவியாளர் இருவரும் இலண்டனில்தான் இருக்கிறார்கள்.
உண்மையில் இருவருக்கும் மனம் நிறைந்த நன்றி. //

கூடவே எனது நன்றிகளும். சும்மா பேச்சுக்காய் சொல்லைல . காரணம் இருக்கு.

// எனக்கு வந்து என்னை ஊக்கப்படுத்தும் நண்பர்களை நானும் ஊக்கப்படுத்தத் தவறாமல் பின்னூட்டம் தருவேன் //

உண்மை தோழர் ! எனது சில பார்வைகள் உங்களுக்கு உவப்பானவை அல்ல என்பதை நானறிவேன்.இருந்தாலும் , வந்து பின்னூட்டி ஊக்குவித்து செல்லும் உங்களுக்கு எனது ப்ரியங்கள் ,இதயத்தின் ஆழத்திலிருந்து (தோழர் செந்திலுக்கும்!)

//இதில சம்பாதிக்கவும் முடியுமா அப்பிடியே இருந்தாலும் வேணாம். நிறையவே சம்பாதிச்சு வச்சிருக்கிறேன்.போதும்!//
என்னோட வங்கி கணக்கு எண்ணை குறிச்சுக்குங்க தோழர் ...

// பாரா அண்ணா மேல,நேசன் மேல பொறாமை //
எனக்கும் நேசன் மேல ...

//அவங்க வரணும் என்னைப் பாராட்டி வாழ்த்தணும்ன்னு எப்பவும் எதிர்பார்க்கிறேன். //

இவ்வளவு வெளிப்படையா பேசுறீங்களே ...

ஆ.ஞானசேகரன் said...

உங்களைப்பற்றி மேலும் அறிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி ஹேமா...

Unknown said...

நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க.. தீபசுதன் எனது நண்பர்

பித்தனின் வாக்கு said...

good and nalla open explanation.
Hamu you nalla manathudan irukkum nalla ponnu neenga.
thodarnthu ezuthunga,,, we are always with you...
nilla kutty eppadi irukka??
still she is in kanada???

சிங்கக்குட்டி said...

மனம் திறந்த தகவல்கள் மற்றும் எதார்த்தம் ...அருமை.

நன்றி.

Nathanjagk said...

பதில்கள் - யதார்த்தம்.. ஆத்மார்த்தம்!
குட்டிப்பெண் கைக்கட்டி பாடம் ஒப்பித்துவிட்டு மிட்டாய்க்காக நம்மை கண்கள் விரிய பார்ப்பது போலிருக்கிறது.
வாழ்த்துக்கள்..!

எல் கே said...

oru siru visyam , ungalukuth theroyuma endruth theroyavillai. please contact me in my mail. karthik.lv@gmail.com . please delete after reading

ராஜவம்சம் said...

ஹேமா உங்களது மெயில் ஐடி இல்லாததால் தான் பின்னூட்டமாக...

நலமா? வேழைப்பழுவா? தினமும் யாருடைய பதிவிலாவுது உங்களை சந்த்திப்பேன் கடந்த சில நாட்களாக எங்கையும் கானவில்லை.

அறிவிப்பு இன்றி தாயகம் சென்றுவிட்டீர்களா.

எதுவாக இருந்தாலும் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்தும் சகோதரன்.

thiyaa said...

நல்ல பதில்கள் ஹேமா
நான் காண நாளுக்குப் பின் வந்து பின்னூட்டமிடுகிறேன்

கமலேஷ் said...

திறந்த மனதோடு பேசக் கேட்பது பிடித்திருக்கிறது.

அதுவும் எதிரில் இருப்பவரின் கண்கள் பார்த்தபடியே பேசுவது மிகவும் பிடித்திருக்கிறது.

வாழ்த்துக்கள் சகோதரி..

தொடருங்கள் பயணங்களை...

ரிஷபன் said...

//எல்லோரது திறமைகளையும் ஒருவருக்கொருவர் பாரபட்சம் இல்லாமல் ஊக்கம் தாருங்கள் என்று இணையங்களில் இருக்கும் திறமை மிக்க...அனுபவம் நிறைந்த பெரியவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.//

பெரும்பாலும் அப்படித்தானே இருக்கிறார்கள்.. இல்லியா..

சுந்தர்ஜி said...

எப்படி இருக்கீங்க ஹேமா?தொடர் வேலைப்பளு.நிமிர முடியாத நாட்கள் ஓரளவு கடந்துவிட்டன.அடிக்கடி இனி சந்திப்போம் தோழி.நிதானமாக உங்களைப் படித்துவிட்டு எழுதுவேன்.வாழ்த்துக்கள்.

லெமூரியன்... said...

வணக்கம் ஹேமா...!
எங்கே போனீங்க??? மின்னஞ்சல் செய்யலாம்னா முகரி இல்ல என் கிட்ட..! :-(
சீக்கிரம் பதிவெளுதுங்க...!
:-)

அன்புடன் மலிக்கா said...

அன்புத்தோழியின் அழகான வெளிப்பாட்டைக்கண்டேன்.
மிகவும் அருமையாக தெளிவாக குழந்தைதனமாக எழுதும் எழுத்துக்கே வாசகர்கூட்டம் வந்துசேரும் தன்னால்.

வாழ்த்துக்கள்தோழி வலையில் விழுந்த கதை சுவாரஸ்யம்..

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP