Saturday, April 07, 2012

கவிதை எழுதலாம் வாங்கோ !

நிறைய நாளாச்சு படத்துக்குக் கவிதை எழுதி.வாங்கோ......வாங்கோ.
இந்த புகைப்படங்களிற்கான உணர்வுகளை எழுத முயற்சி செய்யவேணும் நீங்கள்.10-15 வரிகளுக்குள் அடங்கினால் நல்லது.உணர்வுகள் சிறு கட்டுரையாகவோ,காதல்-சமூக-இயற்கைக் கவிதையாகளாகவோ,சின்னக் கதையாகவோ,ஒரு உரையாடலாகவோ,நகைச்சுவையாகவோ இருக்கட்டும்.பார்ப்போம்...பலரின் பதிவை எதிர்பார்க்கிறேன்.எங்கே பார்க்கலாம்....தொடங்குங்கோ.எல்லோரது எண்ணங்களையும் பதிவில் பதிப்பேன்.நானும் உங்களோடு !

அனைத்துக் கவிஞர்களும் உங்கள் தளங்களில் உங்களது கவிதைகளை பதிவிட்டுக் கொள்ளுங்கள்.இணைந்திருப்பவர்கள் எல்லோருக்கும் என் மகிழச்சி !
பாதை

பாசம்


கணேஷ்...

நிலவைக் காட்டி
சோறூட்டினாள் தாய்...
அவள் முகம் பார்த்து
சாப்பிட்டது குழந்தை!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தனித்தனியே வந்து
ஒன்றி‌ணைந்த பாதைகள்
சேர்த்தன எங்கள் கரங்களை..!
கோர்த்த கரங்கள் பிரிந்தன
இன்னொரு பாதைச் சந்திப்பில்!

உன் வழி உனது என் வழி எனதென
பிரிந்து சென்றவள்
மீண்டும் வரவேயில்லை..
இன்னும் காத்திருப்பில்...
பனி படர்ந்த காலையும்,
சாலையும், தனிமரமாய் நானும்!

வஜீர்அலி(Vazeer Ali)...

மனித நேயம்
===========
வந்த பாதை
மறந்து போக
போகும் பாதை
குழப்பிவிட....
மார்க்கமில்லாத
பயணம் கண்டு
சற்று தயக்கம்...

துபாய் ராஜா...

பாதை !

பெரும்பாதை
பிரிந்திருபாதை
ஆனதோ...

இரு குறும்பாதை
இணைந்தொரு
பரும்பாதை
உருவானதோ...

பார்வைக்கு
புரியாத
ரகசியம்...

பாதைக்காவது
தெரிந்திருப்பது
அவசியம்.

----------------

கல்லும்
கள்ளியும்
காய்ந்த சருகும்
புல்லும்
புதரும்
பூச்சிகளும்
புரியாத மொழியில்
புலம்பித் தீர்த்தன
இணைந்தே வந்து
இடையில் பிரிந்த
இப்பாதை கதையை...


-------------------------

பாசம் !

பட்டினிக் குழந்தைக்கு
பால்நிலா காட்டி
பசியாற்ற முயன்றாள்
பரிதாபத் தாய்...

-----------------

முழுநிலவு
தேயலாம்
என் கண்ணே
பாசப்பசும் பொன்னே
முடிந்திடுமோ
ஆசை அன்னை
நான் உன்மேல்
கொண்ட பாசம்
கடும்நோயால்
கொடும்பாய் விழுந்து
சுடும்பாடை ஏறும்வரை....

மகேந்திரன்...

ஏ..நிலவே!
பால்போன்ற உன்னில்தான்
அழகின் அடைக்கலம் -என
இறுமாப்பு உனக்கு!
இதோ
அமுதூட்டும்
என் அன்னை இருக்கிறாள்!
அதோ ஒரு
கரிய மேகம் வருகிறது
ஒளிந்து கொள்!
பின்னர் ஒரு நாள்
என்னிலும் ஓர் அழகைக்
கண்டேன் என
புலம்பித் தவிக்காதே!!

-----------------------------------

கண்களை அகல விரித்தேன்
வந்த இடம் தெரியவில்லை!
செல்லும் இடம் புலப்படவில்லை!
கண்மூடி தியானித்தேன்
முன்னோக்கிப் பார்த்தால்
இருமுனைப் பாதைகள்
எம்மார்க்கம் சென்றிடினும்
அனுபவங்கள் பலவாகும்!
சற்றே பின்னோக்கினேன்!
எவ்வழியினின்று வந்தாலும்
சேரும் இடம் ஒன்றென!
ஆறுகளும் மதங்களும்
நமக்கு உரைப்பது
இதைத்தானோ?!!

ஹசீம் ஹாஃபி(haseem hafe)...

பாதை
------
உன் பாதை முடிந்ததென்று
முடங்கிக் கிடந்திடாதே - நீ
பலதிசையும் உற்றுநோக்கிப்பார்
பாதைகளங்கு திறந்திருக்கும்

எதிர்ப்பட்ட பாதைகளோடு - நீ
முனைப்புடன் முன்னேறிப்பார்
முட்களும் கற்களும் - உனக்காய்
வழிவிடக் காத்திருக்கும்

வீறுகொண்டு நடந்துபார்
இமயம் கூட உன் காலடியில்

பாசம்
-----
வானம் விட்டுப்பிரியாத -நிலவு
சூரியனிடம் தஞ்சம்
பாசம் விட்டுப்பிரியாத - தாய்
பிள்ளையிடம் தஞ்சம்

சூரியனாய் மாறும் பிள்ளைகளால்
சுட்டெரிக்கப்பட்ட தாய்களோ
சுடுகாட்டில் இருந்தாலும் - பிள்ளைப்
பாசம் விட்டுப் பிரிந்திடாள்

தனிமரம்(நேசன்)...

பாதை!
-------
விரிந்த தெருக்களில் ஊடே வந்து
விளையாடினாய் இதயத்தில்!
விருப்புடன் கவிதை சொல்ல
விளங்காத காட்டில் பயணித்தோம் !
விழித்த போது விரிந்து கிடக்குது
இருவழிப்பயணமாக நம் காதல்!
அதைச்சொல்லும் இடத்தில் பிரிந்து
நிற்கின்றது இரு மரம்
அதில் ஒரு தனிமரம்
வளர்ந்து குடும்பமாக
மறுபக்கத்தில்
சிறுமரம் உன்னைப்போல
வட்டத்துடன்
இரு பக்கமும் விம்மியழுகின்ற
வட்டக்கல்லாக யாரோ
நான் சொல்லமாட்டேன்
வாழ்க்கைபாதையில்
பிரிந்து விட்டோம் இரு கோடுகள்!

பாசம்!
--------
அதோ பார் வட்ட நிலவு
இதோ பார் என் குட்டி நிலவு
நீயும் சாப்பிடும் போது
அவளுக்கும் ஊட்டிவிடு.

அந்தநிலவு அன்று!
எங்கே அந்த நிலா என் வாழ்நிலா
வாழ்க்கையுலா பால்நிலா பார்க்கவேனும்
நொந்து பின் தொலைந்து தேடிவந்த நிலா
அம்மா சொல்லிய பெட்டைநிலா!
அருகில் இருந்து ஊட்டிய மாமியின்
கரங்களில் பாசத்துடன் ஊட்டுகின்றாள்
இதோ பார் மகளின்பேரன் அந்த நிலவும்
இந்தமாமா நிலவும் தேய்ந்து போவார்கள்
பாசம் தேயாது ஊட்டிவிடுகின்றாள் பாற்கலவை((fromages)!!
இருண்டது என் வானம் வெளிச்சது நிலவாக நீ!

பெட்டை (மகள் யாழ் வட்டாரச் சொல்)

பாதை!

இல்லறம் என்ற அடர்ந்த ஆலமரத்தில்
நல்லறம் கண்டு நடந்துவந்தோம்
நடுவில் குத்துக்கல்லாக குடைய வந்தாள்
முன்னம் இவன் காதலி என்று !
நடுவன் அரசிடம் கேட்கின்றாய்
நாம் பிரிந்து வாழ வேண்டும்
பிரித்துவிடுங்கள்
பாதை மாறிப்போக வேண்டும் என்று !
இடையில் தவிக்கின்றது
நம் உறவில் மலர்ந்த
இரு மழலைப்பூக்கள் எதிரே
மரங்களாக வா சேர்ந்து போவோம்
பாதை பிரியாமல்!
மன்றாடும் கணவன்!

பாதை!

பாலம் கடக்கும் போது
பல காடுகளில் என்னோடு பழகி வந்தாள்.
பாசம், அன்பு காதல் என்று
சொல்லிச் சென்றாள்
எந்த வழி போய் இருப்பாள்!
இந்தக்கல்லில் குந்தியிருக்கின்றேன்!
ஆவியாக
இடையில் ஆமிக்காரங்கள் போல
இரு மரங்கள் பச்சையாக
எதிரே புகை மூட்டம்
வெடிவைத்து பிரித்து விட்டார்கள்
நம் காதல்பாதையை!
கல்லாக கிடக்கின்றேன்
பாதை ஓரம் இதயம் துடிக்க!
உயிர் துறந்து!

பாசம்!

எங்கே அப்பா என்று கேட்கும் மழலைக்கு
எங்கே போனார் முள்ளிவாய்க்காலில்
முண்டியடித்து வந்து நின்றார் முழுநிலவாக
குண்டு வைத்திருக்கின்றான்
பிடித்துத் தள்ளிக் கொண்டு போனார்கள்
இன்னும் நிலவாக இருப்பார்
இருட்டறையில் இப்படித்தான் சொல்லி
சோறு ஊட்டுகின்றேன்
பாவி மகள் நான் பாசமாக
என் பிள்ளைக்கு வட்ட நிலவைக் காட்டி
வரும் தந்தை நிலா என்று.

பாதை!

பேராதனிய பாதை ஓரம் ஒரு குடைக்குள்
பேதம் மறந்து பலவிடயம் பேசி வந்தோம்
லூசு நீ என்றாய் என் தாய்மொழியில்
போடி மகே பொம்பர்த்தினி(என் காதலி)
போட்டுக் கொண்டோம் பல விலங்கு!
இருளாத புகையாக எதிரே
மதவாதம் மொழிவாதம் பிரித்துவிட்டு
இரு மரங்களாக இரண்டு பாதை காட்டியது.
கடல் கடந்தேன் அரபுலம் போனாய் நீ
வட்டக்கல்லால இருக்கின்றாய் நினைவில்!
கடந்து வா சேரலாம் என்கிறபோது
பாதைகள் மாற்றிவிட்டது
முகம் தொலைந்துவிட்டான் அவன் பாதையில்!
உருகின்ற பிரென்சுக் காதலி கைபிடித்து!
கல்லாக இருக்காதே காத்துக்கொண்டு
கைபிடியாரையும் கருணாவன் சமாவெண்ட மாவ !
கல்லாக்கிய நினைவுகளுடன்!

//குறிப்பு->பெம்பர்த்தினி-காதலி என்பார்கள் சகோதரமொழியில் உடரட்டை இனத்தினர்!கருணாவன் சமாவெண்ட மாவ.-தயவு செய்து மன்னித்துவிடு என்னை என்று சொல்வது தமிழில்!(இதுவும் ஒரு கற்பனைதான் கண்டுகொள்ளாதீங்கோ அம்பலத்தார்!

பாசம்!

அன்ன பலண்ட ஹந்த!(மேலே பார் நிலவை)
மகே புஞ்சி பானா.(என் சின்ன மருமகன்)
மே பலண்ட மகே தோனிய ( இங்கே பார் ..என் ராஜகுமாரி)
ஒயாகே கானிய.!(உன் மனைவி ஆவாள்)
என்று சொல்லி சீராட்டிய என் மாமி
ஒரு நிலவைப் பெற்றாள் ஒரு காலத்தில்!

அது வளர்ந்து வந்தது பெளர்ணமியில்.
போகும் பாதையில் பாசம் தடுத்தது.
விலக்கிவிட்ட உறவு.
அது வேண்டாம் பேரா வீட்டுக்கு.விட்டுவிடு காதலை !!
இதுவும் ஒரு பாசம் தான் உதறியது அவள் உறவை .
என்றாலும் அந்த நிலவு
தேயவில்லை நினைவலைகளில்!
இன்னும் வெளிச்சம் கொடுக்கின்றது
விடையில்லாத உறவாக!
மச்சாள் பாசமாக!

//குறிப்பு--2
சகோதரமொழியில் இப்படியும் ஒருவர் சொல்லலாம் என்ற கற்பனையே தவிர நான் றொம்ப நல்லவன் .

மகே தோனிய-இதுவும் உடரட்டையின் இன/சாதியின் சொல்லாடல் தனிமரம் தனியாக இதுக்கு பாட்டே போட்டு இருக்கு உன்னையே எப்போதும் நினைக்கின்றேன் என்ற பதிவில்!(இது ஒரு விளம்பரம் கட்டணம் செலுத்தவில்லை!)கற்பனைக்கு உருவம் தேடக்கூடாது இது வேப்பம் தோப்பில் சக்திவேல் சொன்னது அம்பலத்தார் வழி மொழிந்தது !அவ்வ்வ்வ்வ்வ்மிச்சத்துக்கு இரவு வாரன் படலை திறந்து இருக்கும் என்ற நம்பிக்கையில்!


பாதை!

இந்த மலைகளும் மடுக்களும் நிறைந்த தேசத்தில்
நடந்த களைப்பில் வட்டக்கல்லில் வாடியிருந்தேன்!
எதிரே வடக்கில் இருந்து அகதியாக ஓடிவந்தேன்
சாய்ந்து கொள்கின்றேன் என்று சொன்னாய்
தோள்கொடுத்தேன் தோழி என்றாய் !
பின்......
தாலி தந்தாய் தாரமாக்கினாய்
அன்பில் நீ தங்கம் தான் கணவனே!
அதோ இருமரங்கள் இடையில்!
ஒன்று சொல்லும் யாழ்ப்பாணத்தான்
மற்றமரம் சொல்லும் தோட்டச்சிறுக்கி
விட்டு விடுவம்
எதிரே மறுபாதையில் போவோம்
நாம் பிரதேசவாதம் கடக்கும் புகைகளாக
பாதை தெரிகின்றது தெளிவாக!

பாசம் !

நிலா வட்டமாக இருந்தது
நீ என் அருகில் இருந்த போது
அது நெற்றியில் குங்குமம் பொட்டாக!
இன்று மகனுக்கு சோறு ஊட்டுகின்றேன்
நிலாவாக உன்னைக்காட்டி
உன் தந்தை ஒரு துரோகி என்று
சுட்டவர்கள் முகம் காட்டி
நானும் ஈழத்து பெண்மனிதான் பாசத்துடன்!
வலிக்கின்றது என் வாழ்வு
மகனே நீ இருப்பாய் நெருப்பாக
எனக்கு கொள்ளி போட
ஊர் சொல்லும் உன் அப்பன் துரோகி என்று
நான் சொல்லுகின்றேன் அவன் நல்லவன்
உணர்ச்சிக்கு அடிமையாகாதே
தமிழக அரசியல் போல
நீயும் நாளை தீக்குளிப்பாய் என் அப்பன் துரோகி என்று!
அதுமட்டும் செய்யாதே
என் நிலவே பிள்ளை நிலவே
பார் வெளிச்சத்தை
பால் குடித்துக் கொண்டு
என் மார்பில் இருப்பதும் தமிழ்பால் தான்!

ஐடியாமணி(Ideamani - The Master of All)...

பாதை!

இத்தனை தூரம்
ஒன்றாக வந்துவிட்டு,
இதோ, இப்போது
பிரிந்து செல்கிறோம்
என, எதற்கு
எண்ண வேண்டும்?

இவ்வளவு தூரமும்,
தனித்தனியே வந்தோம்!
இதோ, இணைந்து
செல்லப் போகிறோம்
என, மாத்தியோசிக்கலாமே?

பாதை!

இதோ, எம்
பாதைகள் தனித்தனியே,
பிரியும் நேரம்
வந்தாகிவிட்டது!
உனது பாதையில்
நீ போ....!!

ஆனால்...!
என் பாதையில் நான்
போகப் போவதில்லை!
இங்கேயே மோதிக் கொள்கிறேன்
என் தலையை!

அதோ,
அந்தக் கல்லில்........!!

ஹேமா...

பாதை...
~~~~~~~~~
கிளைகள் உரசும்
காற்றும் கற்றுக்கொண்டது
காதலை அன்றுதான்.

மின்மினிப் பூச்சிகளின்
வெளிச்சத்தில்
அனுபவித்த
காதலின் உச்சத்தை
தம்முள்
ரகசியமாய் ரசித்தபடி
பாதைகளும் காத்திருக்க...

ஒற்றைக் கல்லும்
ஒளித்து வெட்கித்த
அந்த ஒற்றை நிமிடத்தை
ஈரமாய் வைத்திருக்க...

பாதை கடக்கும்
நத்தையொன்று
கீறிப்போகிறது
அவர்கள் காதலை!!!

பாசம்...
~~~~~~~~~~
தூரத்து நிலவிலும்
கால் பதிப்பேன்
நீ பக்கமிருந்தால்.

முடிவே தெரியாத
பாதைகளிலும்
பயணிக்க முடியும்
முடிவில்லா
உன் பாசமிருந்தால்.

கடலைவிட ஆழப்பதிவேன்
அம்மா நீ....
அடியில் தாங்குவாய்
தாங்கியாய்த் தாங்குவேனென
நம்பிக்கை வார்த்தையொன்றை
சொல்லிவிட்டால்!!!

இராஜராஜேஸ்வரி...

பாதைகள் எத்தனையானால் என்ன?

பயணம் என்பது ஒன்றுதானே !

பயணங்கள் அனைத்துமே

பதிக்கும் முதலடியிலேயே

பாங்காய் தானே ஆரம்பிக்கின்றன!

பாசமான உறவுகளாய்

படுத்தாமல் நிழல் தரும் மரங்கள்

பழ்மை மாறாத கனிகளை

பழங்களாய் தந்து

பசி போக்கி இனிமை தந்து

பார் முழுதும் அன்பாய்

பயன் தரும் மரத்தருவாய்

பயிற்றி வாழவேண்டும்

பாரினில் உயரவேண்டும்...!!

அம்பலத்தார்...

பாதை !

சேர்வதும் பிரிவதும்
பாதைகள் மட்டும்தானா
சேர்வதும் பிரிவதும் இயற்கையின் நியதி
விந்தாய் ஜனனித்ததும்
தந்தை உடல் பிரிந்து தாயின் கருவறை சேர்ந்து
தொப்புள்கொடி பிரிந்து வையகம் சேர்ந்து.
வீடு பிரிந்து போராளியாய் சேர்ந்து
போராட்டம் பிரிந்து மீண்டும் வீடு சேர்ந்து
களம் பிரிந்து புலம் சேர்ந்து
இளமை பிரிந்து முதுமை சேர்ந்து
ஆரோக்கியம் பிரிந்து நோய்கள் சேர்ந்து
என் பிரிதலும் சேர்தலும் தொடர்கிறது
ஒன்றுமட்டும் நிஜம்
உயிர் பிரிவதும் மயானம் சேர்வதுமே- என்
இறுதி சேர்தலும் பிரிதலும்!

யோகா அப்பா(Yoga.S.FR..)...
ஏதாவது எழுதுங்கோ என்று அன்பு மகளின் கட்டளைக்கு?அடிபணிந்து சிறிய ஒரு உரையாடல் (நகைச்சுவை?!).

"திருவிளையாடல்"படத்தை நினைவில் கொள்க:அரசனுக்குப் பதில்

அரசி(ஹேமா)அரியாசனத்தில்.
புலவர்கள்;காட்டான்,நேசன்,அம்பலத்தார்,நிரூபன்,மற்றும்பலர்.
புலவர் யோகா கவிதையுடன் (உரைநடை) வருகிறார்.


யோகா : வணக்கம்அரசியாரே!

அரசி : வணக்கம் புலவரே!

யோகா : (மனதுக்குள்......சும்மா கொஞ்சம் அங்க,இஞ்ச வார்த்தைகள திருடி வசன நடையில ஒரு தடவ எழுதின உடனே புலவர் போஸ்ட் குடுத்துட்டாங்க!)கவிதையைப் படிக்கண்டுக்களா?

அரசி(ஹேமா) : படிங்க புலவரே!

யோகா : கொங்கு தேர் வாழ்க்கை...............

காட்டான் : புலவரே,இது திருவிளையாடல் இல்ல!

நேசன் : அது வேற,இது வேற!

அம்பலத்தார் : பரவாயில்லை,அதையும் கேட்டுத்தான் பாப்பமே,கன நாளா கேக்கையில்ல!

நிரூபன் : அறளை பேந்துட்டிது!

அரசி(ஹேமா) : சரி,சரி ஆளாளுக்கு ஒவ்வொண்டு சொல்லாதயுங்கோ!அவரும் உங்கள மாதிரி ஒரு புலவர்! தானே?சரி,பிழை இருக்கத்தான் செய்யும்!நீங்க படியுங்க,சா.....பாடுங்க புலவரே!

யோகா : அப்பிடியெண்டா மருதடிப்புள்ளையார் கோயில் மண்டபத்தில"அவர்"குடுத்தத பாடட்டோ?

அரசி : என்னது "அவர்"குடுத்ததோ?

யோகா : இல்லையில்ல,வாய் தடுமாறிச் சொல்லிப் போட்டன்!

காட்டான்,நேசன்,அம்பலத்தார்,நிரூபன்:::: இது சரியா வராது!ஆரோ மண்டபத்தில எழுதிக் குடுத்ததை இங்க வந்து பாடவோ?அப்பிடியெண்டால் நாங்களும் பாடுவமே?யோகாப் புலவர் அளாப்பி விளையாடுறார்.இந்த விளையாட்டுக்கு நாங்கள் வரேல்லை!!!!!

(ஒட்டுமொத்தமாக புலவர்கள் வெளி நடப்பு செய்கிறார்கள்.சபை கலைந்தது.அரசியும் களைப்பு மேலிட நிரூபன் இண்டைக்கு உடம்பு மெலிய என்னவோ பத்தியம் சொன்னாரே?அதையாவது செய்து சாப்பிட்டுப் பார்ப்போம் என்று தனக்குள் கூறிக் கொண்டு "அன்னநடை"நடந்து குசினிக்குள் சென்றார்!)

யோகா : (புலம்புறார்)பாத்தியே,பாத்தியே?சொன்னாக் கேக்கிறியா?மண்டபத்தில ஆரோ எழுதிக் குடுத்தத வாங்காத,வாங்காத எண்டு தலை,தலையா அடிச்சனே,கேட்டியா?உனக்கு இதுகும் வேணும் இன்னமும் வேணும்!இப்ப நிக்க இருக்க ஏலாம குறுக்கை,நெடுக்கை நடக்கிறதில என்ன விடியப் போகுது?போ,போய் ஒழுங்கா சொந்தமா ஏதாச்சும் எழுதி, பரிசு கூடவோ,குறைச்சலோ வாங்கப் பார்!வீட்டில அடுப்பு எரிய வேணாமோ????

கவிதை(உரை நடை?)

ஒற்றை வழி ஆகாதென்று இரட்டை வழி ஆக்கினரோ?
இரட்டை வழி பிரிவதற்கும், இரட்டை மரம் காரணமோ?
தப்பித்தேன், ஒற்றைமரம் இருந்திருந்தால்,
நான் தான்!நானே தான் என்று, நேசனும் உரைத்திருப்பார்!

கலை(கருவாச்சி)...

நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடி வா
மலை மேல ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா!!!


நிலவைக் காட்டி
சோறு ஊட்டும்
தாயிடம் அடம்பிடிக்கிறது
குழந்தை!!
நிலவுக்கும் சோறு ஊட்டச் சொல்லி !!..


வறண்ட கால

முற்களும்,

வசந்த கால பூக்களாய்

மாறு கிறதே !!! ..

பேதை எந்தன் பாதையில் பவனியோ ??!!!

ஆர் அந்த பேதை ???

நேசன் & கலை(கருவாச்சி)...

நட்புப்பாதை என்ற போர்வையில் ஒன்றாக வந்தோம்
வட்டக்கல்லில் நிலாவைக் காட்டினாய்
தோள்மீது சாய்ந்து பாசமாக !
இரு மரங்கள் தெரிந்தது !
இந்தவடக்கு வழியால் போடா என்றது தமிழ்
மற்றது சகோதரமொழியில்
தெற்கு வழியாக போடி என்றது!
புகைமூட்டம் கண்டது நம் காதல் !
மொழிகடந்து தூரத்தில் சங்கமிக்கின்றோம் தீயில் !!
வேண்டாம் இனவாதம்
காணிக்கை என் காதல் என்று சொல்லும் இந்தப் பாதை!

தொலைந்த மொழிகளும்
மௌனமாய் வேடிக்கை காட்ட
வாதத்தில் பிறந்த இனவாதமும்
திசைகளாய் திரும்பி கொள்ள
காதல் பாதையில் சங்கமித்த உள்ளங்களும்
வெறுமையாய் வெற்று நடைப் போட
துணிந்தது உந்தன் இதயம் ...
பதில் இல்லாமல் மருகிய காலம்....
உனக்காய் காத்திருந்த பாதையில்
யாரோ ஒருத்தி எனக்காய் தவமிருக்க
நேசனிடம் கொண்ட நேசமும் நிஜமாக
எந்தன் பாதையில் என்றுமே
ஒரே மரம்
தனிமரம் என்னவளுக்காய் !!!

AROUNA SELVAME...
பாதை...

வாழ்வை நோக்கி
ஓடி வந்தேன்.
விதி காட்டியது
இரண்டு வழி!

பாசம்...

தாயே..
களங்கத்துடன்
தேய்கின்ற
அந்த நிலவினும்
உயர்ந்தவள் நீ!

விச்சு...

பாதை !

வாழ்க்கையில் இரு பாதைகள்
எப்போதும் உண்டு
இரண்டும் ஒன்றாய்த் தோன்றினாலும்
செல்லுமிடம் வெவ்வேறு
ஒன்று இன்பத்துடன் ஆரம்பித்து
துன்பத்தில் முடியும்
மற்றொன்று கஷ்டத்தில் ஆரம்பித்து
மகிழ்ச்சியில் முடியும்
உன் பாதை உன்கையில்...!

அப்பாதுரை...

பாதை!

பாதையோரம்
எந்த ராமனுக்காகக் காத்திருக்கிறாள்
இந்த அகலிகை?

பாசம் !

வளர்பிறை தேய்பிறையைப்
புரிந்து கொண்டது
நிலவு.

T.V.ராதாகிருஷ்ணன்...
பாசம் !

பாட்டி
வடை சுடவில்லை
ஆம்ஸ்ட்ராங்கின்
பாதச்சுவடுகள் அது
அறிவியல் ஊட்டப்படுகிறது
பிஞ்சு மனதிலேயே !

பாதை !

பாதை மாறாமல்
தனிமரமாய் இல்லாது..
வாழ்ந்து பார்
கண்முன் கொட்டிக்கிடக்கும்
ஆயிரம் பாதைகள் !

ஸ்ரீராம்(எங்கள் புளொக்)...

பாதை !

பயணங்களை
பாதைகள்
முடிவு செய்வதில்லை

பாதைகளை வைத்து
பயணங்கள்
முடிவு செய்யப்படுவதில்லை.

சேருமிடம் குறித்து
தெளிவிருந்தால்
பாதைகளின் தரம்
பார்க்கவேண்டியதில்லை

பாதைகளுக்கு
பயண முடிவும்
தெரிந்திருப்பதில்லை

வழியைக் காட்டி
வலிகளைச் சுமக்கும்
பாதைகளின்
தியாகத்தை
உணர்ந்தாரில்லை
பாதைகளைச் சீர் செய்தாருமில்லை.

கடினமான
பாதைகளே
கனவு இலக்குகளை
அடைய உதவுகின்றன !

பாசம் !

காதலுக்கும்
கவிதைக்கும்
களம் ஆகும்,
கனம் சேர்க்கும்
அந்த நிலவைப் பாரடி
என் கண்ணே...

கவிதை சொல்வது
அஞ்ஞானம்
உண்மை சொல்லுது
விஞ்ஞானம்
வெண்மை காட்டும்
நிலவுகள்
உண்மையில்லை
உயிர் வாழும் தன்மை
அதில் இல்லை,
தண்மையுமில்லை

கனவுகளை உடை
கடமையை நினை
காரியத்தில் நனை
வையம் போற்றும் உனை!

பாசம் !

நிலவின் நினைவுகள் போன்றே
பாதைகளில் பயணங்களும்
சுகமானவை.

படங்கள் அருகருகே இருந்தாலும்
அமைக்க முடிவதில்லை
நிலவுக்குப் பாதை!

பாதை !

எல்லா பாதைகளும்
வாழ்வின் ஏதோவொரு
சொல்லாத்
தனிமைச் சோகத்தைச்
சொல்லியே நகர்கின்றன!

மீண்டும் ஒரு
மழை வரலாம்
மரங்கள் துளிர்க்கலாம்
பாதைகள் பசுமையாகலாம்...

கனவிலும்
எதிர்பார்ப்பிலுமே
பாதைகளாய்
நகர்கிறது வாழ்க்கை.

பாதைகள் பல என்றாலும்
பயணம் என்னவோ
ஒன்றுதானே...

பாதைகளுக்குத் தெரிவதில்லை
பயணத்தின் வழியும், வலியும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒற்றை நிலாவும்
'ஒத்தையடிப் பாதை'யும்
கிளரும் உணர்வுகளை,
நட்சத்திரக் கூட்டமும்
நகரத்துச் சாலைகளும்
எழுப்புவதில்லைதான்!

(எனக்கு எப்போதுமே மனதுக்குள் ஒரு கிண்டல் கலந்த நினைப்பு உண்டு... 'ஏதோ ஒரு', 'தான்', வார்த்தைகளைக் கலந்தாலே கவிதையாகி விடுகின்றன...சாதாரண வார்த்தைகளுக்கு நடுவில் இவற்றைப் மடக்கிப் போட்டு கவிதையாக்கி விடலாம் என்று நினைப்பேன்!)


துரைடேனியல்...
பாதை
-----
வாழ்வுப் பாதையா
சாவுப் பாதையாவென
தெரியாமலே
தொடர்கிறேன்

இருத்தலை
நான் விரும்பவில்லை
பயணிக்கவே விரும்புகிறேன்
இருந்து சாவதைவிட
பயணித்து சாவது
கௌரவம்.

பாசம்
-----

பாலருந்த மறுப்பது
ஏனடா கண்ணா?
களங்கம்
நிலவில் மட்டுமில்லை
என் பாலிலும்
உண்டென்று
யாரேனும் உரைத்தனரோ?

உலகில்
கலப்படமில்லாத
ஒரே பொருள்
இதுதானடா
பருகு...
பாலை மட்டுமல்ல
பாசத்தையும்.

வேர்கள்...
பாசம் !

குழந்தையின்
வாயில் அம்மாவின்
அன்பு சோறு
ஏக்கத்துடன் நிலா !
தனக்கு ஒரு
பிடி வேண்டி....!

பாதைகள் !

இருவேறு பாதைகள்
இருவேறு பயணங்கள்
இருவேறு அனுபவங்கள்,படிப்பினைகள்....
ஒன்று அவளுக்கானது..
மற்றொன்று அவனுக்கானது.....
இனி...!
பாதை அவர்களுக்கானது
ஆனாலும்
அனுபவங்கள்,படிப்பினைகள்
வெவ்வேறானவையே....!!

கலா(என் சிங்கை(க)த் தோழி)...

பாதை
=======
பாதைக்கு,
பா..
தை க்க..
பாதையைக் காட்டினாள் சகி
பேதை என்விழியில் தைத்தவைகள்...

கால் தடங்களை வழியில் பதித்ததினால்...
பாதித்து,
பசுமைக்கற்பு களவாடப்பட...
இப்போ..
ஆள் அரவம்{மும்} இன்றி
கைவிட்ட வலியுடன்..
.வழிதெரியாமல் வழியும்!
இதனைக் கண்டு
உயிரிருந்த சிலையும் உணர்வற்று
கல்போல் தெரியும் காட்சியும்!!

பாசம்
======
அது
எவ்வளவு உண்மைப் பாசமுடன்
காடுமேடு பாராமல்,களனிகங்கையை ஒதுக்காமல்
ஏழை வசதி விருப்பொன்றாய்
குடிசை கோபுரம் தரம் ஒன்று என நினைத்துத்
தன் சேவையைப் பொழியும் நிலவுபோலும்....

கதிரவன் பக்கமிருந்தும்
“பட்டுக்” கொள்ளாமல்,
மதியும் கெடாமல்,
பாரம்பரியம் குலையாமல்
தனியொருத்தியாய்ப் பவனிவரும் அழகுபோலும்....

அழகுக்கும்,காதலுக்கும்
பாசத்துக்கும்,உயரத்துக்கும்_அவளை
உவமையென்று வம்புக்கிழுக்கும் கவிஞர்களிடம்
சரண்டையாமல்...சகஜமாய்ப் பழகும்
தாரகை அவள்போல்_என்
சின்னமகளே!
அந்த நிலவைப் பின்பற்று
பாசமுடன் கூட்டிச் செல்வாள் உன் கைபற்றி.

kg gouthaman கௌதம் (எங்கள் புளொக்)...

கடவுள் என் முன் தோன்றினார்.
'படங்களைப் பார்த்து
ஒரே வார்த்தை சொல்லவேண்டும்;
அது எல்லாவற்றிற்கும் பொருந்தவேண்டும்'
என்றார்.....
மண் என்றேன்.
மரம என்றேன்.
நிழல் என்றேன்.
பாதை என்றேன்.
கல் என்றேன்.
கனி என்றேன்.
இருள் என்றேன்.
நிலா என்றேன்.
வெளிச்சம் என்றேன்.
பாசம் என்றேன்.
எதுவும் சரியில்லை என்றார்.
மிகவும் யோசித்துச் சொன்னேன்.
'அம்மா'
'அதே!' என்றார், காணாமல் போனார் கடவுள்!

Seeni சீனி...
பாதை!
-----------
வந்த வழி-
ஒன்னு!

காட்டும் வழி-
இரண்டு!

எது நல் வழி!
அது உன் கையில்!
உனது முடிவில்!

நிலா!
---------
குழந்தைக்கு-
நிலவை காட்டி-
சோறா!?

குழந்தையை-
காண வந்தது-
நிலவா!?

ரெவரி...

பாசம்!

என்
துதி பாடாத
கவிஞன்
எவனும்
இல்லை
என்ற
இறுமாப்பு
எனக்கு..

இருந்தும்
ஒவ்வொரு
முறையும்
தோற்றுப்போகிறேன்
உங்களிருவரிடம்...

சற்றே
தேய்ந்தும்
போகிறேன்..
உங்கள்
பிணைப்புக்கு
முன்...

அடிக்கடி
மறைந்தும்
போகிறேன்
உங்கள்
பாசம்
கண்டு...

புலவர் சா இராமாநுசம்...

பனிமூட்டப் பாதையிலே நீண்டதூரம்
பார்வையிலே காணோமே ஒருவர்கூட
நனிவாட்டும் குளிரோ எதுவோ மேலும்
ஒன்றாக வந்துப்பின் இரண்டும் ஆக
ஊர்விட்டு ஊர்வருவோர் அறிந்து போக
நன்றாக படங்காண வாழ்க வாழ்க!
நடுவிலே மூன்றுமரம் வளமும் சூழ்க!

அமுதூட்ட அம்புலியை அன்னை காட்டி
அல்லி்ப்பூ மழலைக்கு உணவை ஊட்டி
பொழுதாகி அந்திவர மாலை நேரம்
பூக்கின்ற மலர்போன்ற இதழின் ஓரம்
எழுதாத ஓவியமே போன்ற அன்னை
இனிதாக காண்பது,மகிழ்வில் என்னை என்றுமே ஆழ்த்துமே!

கீதா...

பாதை !

கல்லானாலும் கணவனாம்,
புல்லானாலும் புருஷனாம்.
கல்லையும் புல்லையும்
கட்டிக்கொண்டு பட்டபாடு போதும்,
நடக்கப்போகிறேன் நானும் என்வழியில்!

என் தனிவழியில்!

நீளும் பாதையின் முடிவில்
நிறைந்திருக்கலாம் காடோ, மலையோ!
கவலையில்லை,
கல்லினும் மலை உன்னதம்.
புல்லினும் காடு பேரானந்தம்.

தொலைந்துபோகும் சுயத்தினும்
தொலைக்கவிருக்கும் ‘நான்’ சுகம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எந்தக்குதிரை மேலேறி
எந்தத் தேசத்து அரசக்குமாரன்
எந்தப்பாதை வழி வருவானோ?

காத்திருக்கிறேன் காலங்காலமாய்
குத்துக்கல்லென முக்கூடற்பாதையோரம்!

சற்று அமைதியாயிருங்கள்.
களைத்தப் பரியொன்று சாவதானமாய்க்
கால்மாற்றியிடும் குளம்படிச்சத்தம்,
தூரத்துப் பனிமூட்டம்விலக்கி
மெல்ல செவிசேர்வதைக் கவனியுங்கள்.

கும்பிட்டுக் கேட்கிறேன், போய்விடுங்கள்,

அபூர்வமாய் வரும் அரசகுமாரன் அவன்!

எவளுக்கு மாலையிடுவது என்னும் குழப்பத்தில்
ஆழ்த்திவிடாதீர்கள் அவனை!

பாசம் !

பாரம்மா, பார்!
அவள்தான் வெண்ணிலாவாம்!

கவிஞர்கள் பாடுகிறார்களாம்,
காதலர் தேடுகிறார்களாம்,

பாடநூல் அத்தனையிலும்
பள்ளிப்பிள்ளைகள் படிக்கிறார்களாம்.

வானியலில் வேடிக்கைகாட்டி
விஞ்ஞானிகள் வியக்கிறார்களாம்.

அடிக்கடி அலட்டிக்கொள்கிறாள்.

அடி போடி என் தோளில் தவழும்
என் பெண்ணிலாவுக்கு ஈடாவாயோ என்று
எள்ளி நகைத்தபடி
அள்ளிக்கொள்கிறேன்
அழகுநிலா உன்னை!

முகம் சிறுத்து கருமேக முகில் பொத்தி
மழையாய் அழுவாள் பார்,
இன்னும் சற்று நேரத்தில்!

செய்தாலி...
விழிகள்
இரண்டும் குருடல்ல
திசை மாறிய பயணம் விழித்திரையில்
ஆசைக் கருமை

சுய
அகந்தைகளை சுமந்து
மனதின் போக்கில் கால்கள்
குறுக்குப் பாதை அவசரப்பயணம்

பயண
வேகத்தின் கூர்மை
உயிர் துறக்கும் மனிதர்கள்
வழிகள் நெடுக குருதிக்கறைகள்

கோர
கூர்மையுள்ள முட்களற்ற
இளம்பஞ்சு வழித் தடம்
சேரும் இடம் நரகவாசல்

கடந்து
வந்த பாதைகளில்
இடையிடையே உதிர்ந்த பருவம்
முதுமையை உடுத்தியது காலம்

அனுபவம்
போதி மரம்
மதியின் வாசல்தட்டி சொன்னது
நீ பிழையில் நிற்கிறாய்

ஐயகோ
என்ன கோரம்
பிழையுணர்ந்து அழுகிறார்கள்
முன்னால் வந்த மனிதர்கள்

நன்மை
நல்வழிப் பயணம்
கரடு முரடான நீண்டபாதை
உதிர்ந்த பருவவுமாய் மறுபயணம்!

பாஹே...
பாதை !

ஒற்றைத் தனிமரம்
ஓரங்கட்டிக்கொண்ட வாழ்க்கை;
ஒரு காலத்தின் பழங்கனவாய்
சிறிதாகப் பசும்பொற்குவியல்
மறுபக்கம் பாதை நெளிந்து நீள்கிறது
இது -
இலக்கு அறியா மானுடத்தின்
கணக்குப் பிசகும் ஒரே விடை;
காலங் காலமாக இந்தச் சரித்திரமும்
திரும்பி கொண்டுதான் இருக்கிறது -

இருக்கும், வேறு பாதை இல்லை;
தனிமரம் தோப்பாகாததால்
தோப்புக்குள் வானப்ரஸ்தம்
ஒரு தொடர்கதை, முடியும் வரை!

நிலவு !

அரண்மனை உப்பரிகைப் பலகணியிலும்
அன்றாடங் காய்ச்சியின் ஓட்டுக் குடிசையிலும்
அம்மா குழந்தைக்குச் சோறூட்டுவாள் -
அங்கே வெள்ளிக் கிண்ணம்
அதில் பால் அன்னம்.

இங்கே அலுமினிய நெளிசல்
அமுதமாய்ப் பழஞ்சோறு

எதுவானாலும் பாசம், பரிவு
வலிமைச் சேர்க்கும் முலைப்பால் இதுவும் -
ஒளவை வருவாள், இளங்கோ கம்பனும்
பாரதி அதிகம், பசியாறிப் போகும் -
யுக யுகமாக இது ஓர் தொடர்கதை
தொட்டிற் பழக்கம், அகம்புறச் செழுமை.

சத்ரியன்...
நிலா
----
அம்மா,
நிலா பாப்பாவுக்கு
அம்மா இல்லையாம்.
நம்ம
வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போலாம்.

(இவர் இப்பத்தானாம் கவிதை எழுதிப் பழகுறாராம்.)


மோ.சி. பாலன்...

பாதை !

வருவோர் போவோரை வேடிக்கைப் பார்க்க
நின்றுவிட்ட மரங்கள்..

யார்வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது கல்?

இப்படிப்பார்த்தால் பிரிகின்ற (உ)பாதை
அப்படிப்பார்த்தால் சேர்கின்ற பாதை
எப்படிப்பார்த்தாலும் இரு தூரப்புள்ளிககளை
எப்போதுமே இணைத்திருக்கும் பாதை.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து...

பாதை!

பாதை தெளிவாகத்தான் இருக்கிறது.
பயணம்தான் கையகப்படவில்லை!

பாதையும் பயணமும் நேர்ப்பட்டாலும்
கோழையாய் மனம் மறுதலிக்கிறது.

வெறுமையாய் கிடக்கும் பாதையாயினும்
பொறுமையாய் காத்துக்கிடக்கிறது காலம்.

வெறுமையும் பொறுமையும் இருந்தாலும்
வறுமையும் சோகமுமாய் கழியுதுகாலம்.

முள்ளாய் கிடக்கும் மரமும் பூத்துக்குலுங்கும்
கல்லாய் கிடக்கும் பாதையும் பூவாய்நிறையும்

முள்ளும் கல்லும் பக்குவமாய் ஆக்கினாலும்
சுயமும் கனமும் இழந்தே கழியுதுகாலம்

நம்பிக்கை ஒளிவீசும் வான்மேகம்
தம்கைநம்பி வாழும் குதூகலம்

பாதையும் பாதையும் இணையும் காலம்
வான்மேகமாய் பொழியும் ஆனந்தகீதம்.

241 comments:

1 – 200 of 241   Newer›   Newest»
ராமலக்ஷ்மி said...

நானும் ஆவலாகக் காத்திருக்கிறேன்:)! அருமையான படங்கள்.

பால கணேஷ் said...

நிலவைக் காட்டி
சோறூட்டினாள் தாய்...
அவள் முகம் பார்த்து
சாப்பிட்டது குழந்தை!

-படத்தைப் பார்த்ததும் தோணினது இதான். கவிதையெண்டு எடுத்துக்கிட்டால் சரி... இல்லன்னா விட்றுங்கோ, கட்டையல்லாம் தூக்கக் கூடாது, சொல்லிப்புட்டேன். இன்னும் யோசிச்சுட்டு திரும்ப (உருப்படியான விஷயத்தோட) வாரன்.

Unknown said...

மனித நேயம்
===========
வந்த பாதை
மறந்து போக
போகும் பாதை
குழப்பிவிட....
மார்க்கமில்லாத
பயணம் கண்டு
சற்று தயக்கம்...

கூடல் பாலா said...

கவிதை எழுத தெரியாது....எந்த இன்ஸ்டிடியூட்டில் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பதைத் தெரிவித்தால் மகிழ்வேன்....

துபாய் ராஜா said...

பாதை

பெரும்பாதை
பிரிந்திருபாதை
ஆனதோ...

இரு குறும்பாதை
இணைந்தொரு
பரும்பாதை
உருவானதோ...

பார்வைக்கு
புரியாத
ரகசியம்...

பாதைக்காவது
தெரிந்திருப்பது
அவசியம்.

----------------

கல்லும்
கள்ளியும்
காய்ந்த சருகும்
புல்லும்
புதரும்
பூச்சிகளும்
புரியாத மொழியில்
புலம்பித் தீர்த்தன
இணைந்தே வந்து
இடையில் பிரிந்த
இப்பாதை கதையை...


-------------------------

பாசம்

பட்டினிக் குழந்தைக்கு
பால்நிலா காட்டி
பசியாற்ற முயன்றாள்
பரிதாபத் தாய்...

-----------------

முழுநிலவு
தேயலாம்
என் கண்ணே
பாசப்பசும் பொன்னே
முடிந்திடுமோ
ஆசை அன்னை
நான் உன்மேல்
கொண்ட பாசம்
கடும்நோயால்
கொடும்பாய் விழுந்து
சுடும்பாடை ஏறும்வரை....

------------------------

மகேந்திரன் said...

ஏ..நிலவே!
பால்போன்ற உன்னில்தான்
அழகின் அடைக்கலம் -என
இறுமாப்பு உனக்கு!
இதோ
அமுதூட்டும்
என் அன்னை இருக்கிறாள்!
அதோ ஒரு
கரிய மேகம் வருகிறது
ஒளிந்து கொள்!
பின்னர் ஒரு நாள்
என்னிலும் ஓர் அழகைக்
கண்டேன் என
புலம்பித் தவிக்காதே!!

மகேந்திரன் said...

கண்களை அகல விரித்தேன்
வந்த இடம் தெரியவில்லை!
செல்லும் இடம் புலப்படவில்லை!
கண்மூடி தியானித்தேன்
முன்னோக்கிப் பார்த்தால்
இருமுனைப் பாதைகள்
எம்மார்க்கம் சென்றிடினும்
அனுபவங்கள் பலவாகும்!
சற்றே பின்னோக்கினேன்!
எவ்வழியினின்று வந்தாலும்
சேரும் இடம் ஒன்றென!
ஆறுகளும் மதங்களும்
நமக்கு உரைப்பது
இதைத்தானோ?!!

மகேந்திரன் said...

படங்கள் பேசுகின்றன சகோதரி..
பதினைந்து வரிகள் மட்டுமென
எனை கட்டிப்போட்டு விட்டீர்கள்.....
ஆயினும் சிறுக இருந்தால்
பெருக இனிக்குமென
உணர்ந்தேன்!!

நன்றிகள் பல...

சிந்தையின் சிதறல்கள் said...

பாதை
------

உன் பாதை முடிந்ததென்று
முடங்கிக் கிடந்திடாதே - நீ
பலதிசையும் உற்றுநோக்கிப்பார்
பாதைகளங்கு திறந்திருக்கும்

எதிர்ப்பட்ட பாதைகளோடு - நீ
முனைப்புடன் முன்னேறிப்பார்
முட்களும் கற்களும் - உனக்காய்
வழிவிடக் காத்திருக்கும்

வீறுகொண்டு நடந்துபார்
இமயம் கூட உன் காலடியில்


பசம்
-----
வானம் விட்டுப்பிரியாத -நிலவு
சூரியனிடம் தஞ்சம்
பாசம் விட்டுப்பிரியாத - தாய்
பிள்ளையிடம் தஞ்சம்

சூரியனாய் மாறும் பிள்ளைகளால்
சுட்டெரிக்கப்பட்ட தாய்களோ
சுடுகாட்டில் இருந்தாலும் - பிள்ளைப்
பாசம் விட்டுப் பிரிந்திடாள்

சிந்தையின் சிதறல்கள் said...

தேர்ந்தெடுத்த படங்கள் வாவ்
கவிஞர்களின் வரிகள் அட்டகாசம்
உங்களின் முயற்சி அற்புதம்
நன்றி நன்றி
http://hafehaseem00.blogspot.com/2012/04/blog-post_07.html

தனிமரம் said...

பாதை!
விரிந்த தெரிக்களில் ஊடே வந்து விளையாடினாய் இதயத்தில்!
விருப்புடன் கவிதை சொல்லி
விளங்காத காட்டில் பயணித்தோம் !
விழித்த போது விரிந்து கிடக்குது இருவழிப்பயணமாக நம் காதல்!
அதைச்சொல்லும் இடத்தில் பிரிந்து நிற்கின்றது இரு மரம் அதில் ஒரு தனிமரம் வளர்ந்து குடும்பமாக
மறுபக்கத்தில் சிறுமரம் உன்னைப்போல 
வட்டத்துடன் இரு பக்கமும் விம்மியழுகின்ற 
வட்டக்கல்லாக யாரோ நான் சொல்லமாட்டேன் வாழ்க்கைபாதையில் 
பிரிந்து விட்டோம் இரு கோடுகள்!
(சத்தியமா இது கற்பனை என்று நம்புங்கோ அம்பலத்தார்,யோகா ஐயா)

தனிமரம் said...

அடுத்த கவிதைக்கு பிறகு வாரன் ஆடுப்பில் கொஞ்சம் அவசரம் அழைக்குது இதயத்தில் கவிதை கனகுது பல!!!வருவேன் இரவு என்றாலும் பாசத்துடன்!

K said...

பாதை!

இத்தனை தூரம்
ஒன்றாக வந்துவிட்டு,
இதோ, இப்போது
பிரிந்து செல்கிறோம்
என, எதற்கு
எண்ண வேண்டும்?

இவ்வளவு தூரமும்,
தனித்தனியே வந்தோம்!
இதோ, இணைந்து
செல்லப் போகிறோம்
என, மாத்தியோசிக்கலாமே?

K said...

பாதை!

இதோ, எம்
பாதைகள் தனித்தனியே,
பிரியும் நேரம்
வந்தாகிவிட்டது!
உனது பாதையில்
நீ போ....!!

ஆனால்...!
என் பாதையில் நான்
போகப் போவதில்லை!
இங்கேயே மோதிக் கொள்கிறேன்
என் தலையை!

அதோ,
அந்தக் கல்லில்........!!

தனிமரம் said...

பாசம்!
அதோ பார் வட்ட நிலவு 
இதோ பார் என் குட்டி நிலவு
நீயும் சாப்பிடும் போது அவளுக்கும் ஊட்டிவிடு.
  அந்தநிலவு அன்று!
எங்கே அந்த நிலா என் வாழ்நிலா
வாழ்க்கையுலா பால்நிலா பார்க்கவேனும்
நொந்து பின் தொலைந்து தேடிவந்த நிலா
அம்மா சொல்லிய பெட்டைநிலா!
அருகில் இருந்து ஊட்டிய மாமியின் 
கரங்களில் பாசத்துடன் ஊட்டுகின்றாள் இதோ பார்  மகளின்பேரன் அந்த நிலவும் 
இந்தமாமா நிலவும் தேய்ந்து போவார்கள் பாசம் தேயாது ஊட்டிவிடுகின்றாள் பாற்கலவை((fromages)!!இருண்டது என் வானம் வெளிச்சது நிலவாக நீ!
//
பெட்டை(மகள் யாழ் வட்டாரச் சொல்)

பால கணேஷ் said...

ஹய்யய்யோ... கவிஞர்கள் பேட்டையா இருக்குதே... பின்றாங்களே...தெரியாம வந்து மாட்டிக்கிட்டன் போல... மீ எஸ்கேப்...

Yoga.S. said...

கணேஷ் said...

ஹய்யய்யோ... கவிஞர்கள் பேட்டையா இருக்குதே... பின்றாங்களே...தெரியாம வந்து மாட்டிக்கிட்டன் போல... மீ எஸ்கேப்...////இன்றே சொன்னீர்,அதுவும் நன்றே சொன்னீர்!மீ எஸ்கேப் ஓல்சோ(ALSO)!!!!!!

Yoga.S. said...

பகல் வணக்கம் ஹேமா!என்ன பரிசு கொடுப்பீர்கள்?

ஹேமா said...

பாதை...
~~~~~~~~~
கிளைகள் உரசும்
காற்றும் கற்றுக்கொண்டது
காதலை அன்றுதான்.

மின்மினிப் பூச்சிகளின்
வெளிச்சத்தில்
அனுபவித்த
காதலின் உச்சத்தை
தம்முள்
ரகசியமாய் ரசித்தபடி
பாதைகளும் காத்திருக்க...

ஒற்றைக் கல்லும்
ஒளித்து வெட்கித்த
அந்த ஒற்றை நிமிடத்தை
ஈரமாய் வைத்திருக்க...

பாதை கடக்கும்
நத்தையொன்று
கீறிப்போகிறது
அவர்கள் காதலை!!!

பாசம்...
~~~~~~~~~~
தூரத்து நிலவிலும்
கால் பதிப்பேன்
நீ பக்கமிருந்தால்.

முடிவே தெரியாத
பாதைகளிலும்
பயணிக்க முடியும்
முடிவில்லா
உன் பாசமிருந்தால்.

கடலைவிட ஆழப்பதிவேன்
அம்மா நீ....
அடியில் தாங்குவாய்
என்று நம்பிக்கையோடு
வார்த்தையொன்று
சொல்லிவிட்டால்!!!

ஹேமா said...

இந்த ஓடிப்போற ஆக்களையெல்லாம் பிடியுங்கோ நேசன்.எங்க காணேல்ல என்ர காக்கா கருவாச்சியை.அவதான் சரி கலைச்சுக் கொத்த !

வணக்கம் அப்பா.எழுதுங்கோ கட்டாயம்.எதிர்பாக்கிறன்.ராத்திரி 4 மணிவரைக்கும் நித்திரை கொள்ளாம பொதுவான ஆனால் உணர்வான படம் தேடி எடுத்தன்.

அப்பா...அவரவர் கவிதைகளை தங்களது தளத்தில் பதிவாக்கலாம் எல்லாரும்.பிறகு ஆரின்ர கவிதை நல்லாயிருக்கெண்டு பாத்து பரிசோ கௌரவமோ குடுக்கலாம்.சரியோ.ஆலாசனை ஒத்துழைப்புத் தாங்கோ !

ஃப்ரெண்ட் இப்பிடிப் பதிவு போடுறதே கொஞ்சம் எழுதப் பழகலாம் எண்டுதானே.எழுதுங்கோ.ஓடினால் தண்டனை இருக்கு !

இராமலஷ்மி அக்கா எங்க கவிதை போடாம காத்திருக்கிறேன் சொல்லிட்டுப் போய்ட்டீங்க !

Yoga.S. said...

நிறைய நாளாச்சு படத்துக்குக் கவிதை எழுதி.வாங்கோ......வாங்கோ.
இந்த புகைப்படங்களிற்கான உணர்வுகளை எழுத முயற்சி செய்யவேணும் நீங்கள்./////அதுக்கு கொஞ்சம் "மூளை" யும் வேணும்,ஹ!ஹ!ஹா!!!!!!

Yoga.S. said...

ஆஹா!என்ன அழகான புகைப்படங்கள்????எடுத்தவரை விட அழகாக அதனைப் பிரதி செய்து கவிதைப் போட்டி வைத்தவருக்கு தங்கத்தில் காப்பு போட வேண்டும் என்று ஆசை தான்!என்ன செய்ய நிதி(காசு)இல்லையே?(கள்வர்கள் பயம் வேறு!)

Yoga.S. said...

நான் தீர்ப்புச் சொன்னால் அது பக்கம் சார்ந்ததாக இருக்கும்,வேண்டாம்!

Yoga.S. said...

"கண்கள் ஊடே!!!!" நேசன் பதிவு போட்டிருக்கிறார்!

ஹேமா said...

அப்பா...நடுநிலையாச் சொல்லலாம் அம்பலம் ஐயாவும் வருவார்.எங்க காட்டான் மாமா.வரச்சொல்லுங்கோ.

படம் தேடியவரும் பதிவில் போட்டவரும் நானே நானே.எனக்குத்தான் அந்த அன்பென்னும் பரிசு.எனக்கு எல்லாமே நிறைவாய் இருக்கு ஒன்றைத் தவிர.நான் நிறைய நகைகள் போடமாட்டேன்.எனக்குக் காப்புவேண்டாம்.உங்கட அன்பே போதும்.சந்தோஷமாயிருக்கு !

யோகா அப்பா...ஏற்கனவே 4 தரம் இப்பிடி படத்துக்குக் கவிதை எழுதியிருக்கிறோம்.முந்தி நிறையப் பேர் எழுதுவினம்.இப்ப உந்த ஃபேஸ் புக் அது இதெண்டு இருக்கிறதால புளொக்கர்ல ஆக்கள் மினக்கடுறது குறைவு.ஆனாலும் எங்களுக்கு இது சந்தோஷம்தானே !

தனிமரம் said...

பாதை!
இல்லறம் என்ற அடர்ந்த ஆலமரத்தில் 
நல்லறம் கண்டு நடந்துவந்தோம் 
நடுவில் குத்துக்கல்லாக குடைய வந்தாள் 
முன்னம் இவன் காதலி என்று !
நடுவன் அரசிடம் கேட்கின்றாய் நாம் பிரிந்து வாழ வேண்டும் பிரித்துவிடுங்கள் பாதை மாறிப்போக வேண்டும் என்று !
இடையில் தவிக்கின்றது நம் உறவில் மலர்ந்த இரு மழலைப்பூக்கள் எதிரே  மரங்களாக வா சேர்ந்து போவோம் 
பாதை பிரியாமல்!மன்றாடும் கணவன்!

தனிமரம் said...

பாதை!
பாலம் கடக்கும் போது பல காடுகளில் என்னோடு பழகி வந்தால் .பாசம், அன்பு
காதல் என்று சொல்லிச் சென்றாள்
எந்த வழி போய் இருப்பாள்!
 இந்தக்கல்லில் குந்தியிருக்கின்றேன்!ஆவியாக 
 இடையில் ஆமிக்காரங்கள் போல இரு மரங்கள்  பச்சையாக எதிரே புகை மூட்டம்
வெடிவைத்து பிரித்து விட்டார்கள் நம் காதல்பாதையை!கல்லாக கிடக்கின்றேன் 
பாதை ஓரம் இதயம் துடிக்க!உயிர் துறந்து.

தனிமரம் said...

பாசம்!
எங்கே அப்பா என்று கேட்கும் மழலைக்கு
எங்கே போனார் முள்ளிவாய்க்காலில் 
முண்டியடித்து வந்து நின்றார் முழுநிலவாக 
குண்டு வைத்திருக்கின்றான் பிடித்துத் தள்ளிக் கொண்டு போனார்கள்
இன்னும் நிலவாக இருப்பார் இருட்டறையில் இப்படித்தான் சொல்லி சோறு ஊட்டுகின்றேன் பாவி மகள் நான் பாசமாக என் 
பிள்ளைக்கு வட்ட நிலவைக் காட்டி வரும் தந்தை நிலா என்று.

இராஜராஜேஸ்வரி said...

பாதைகள் எத்தனையானால் என்ன?

பயணம் என்பது ஒன்றுதானே !

பயணங்கள் அனைத்துமே

பதிக்கும் முதலடியிலேயே

பாங்காய் தானே ஆரம்பிக்கின்றன!

பாசமான உறவுகளாய்

படுத்தாமல் நிழல் தரும் மரங்கள்

பழ்மை மாறாத கனிகளை

பழங்களாய் தந்து

பசி போக்கி இனிமை தந்து

பார் முழுதும் அன்பாய்

பயன் தரும் மரத்தருவாய்

பயிற்றி வாழவேண்டும்

பாரினில் உயரவேண்டும்...!!

Seeni said...

kavithai thokuppu!

ஹேமா said...

சீனி உங்களால படங்களுக்கு அழகா கவிதை எழுதமுடியும்.எழுதுங்கோ !

கணேஸ்....எங்க ஆளையே காணேல்ல.பாருங்கோ நேசன் சூப்பரா கலக்குறார்.

கூடல் பாலா உங்களைக் கவனிக்கேல்ல.படம் பார்த்து என்ன நினைக்கிறீங்களோ எழுதுங்கோ.அதுதான் மேலே சொல்லியிருக்கிறேனே.கவிதைதான் என்றில்லை.எதுவும் சொல்லலாம் !

தனிமரம் said...

பாதை!
பேராதனிய பாதை ஓரம் ஒரு குடைக்குள்
பேதம் மறந்து பலவிடயம் பேசி வந்தோம் 
லூசு நீ என்றாய் என் தாய்மொழியில்
போடி மகே பொம்பர்த்தினி(என் காதலி)
போட்டுக் கொண்டோம் பல விலங்கு!இருளாத புகையாக எதிரே மதவாதம் மொழிவாதம் பிரித்துவிட்டு இரு மரங்களாக இரண்டு பாதை காட்டியது.
.கடல் கடந்தேன் அரபுலம் போனாய் நீ
வட்டக்கல்லால இருக்கின்றாய் நினைவில்!
கடந்து வா சேரலாம் என்கிறபோது 
பாதைகள் மாற்றிவிட்டது முகம் தொலைந்துவிட்டான் அவன் பாதையில்!உருகின்ற பிரென்சுக் காதலி கைபிடித்து!
கல்லாக இருக்காதே காத்துக்கொண்டு கைபிடியாரையும் கருணாவன் சமாவெண்ட மாவ !கல்லாக்கிய நினைவுகளுடன்!
//குறிப்பு-/
பெம்பர்த்தினி-காதலி என்பார்கள் சகோதரமொழியில் உடரட்டை இனத்தினர்!
கருணாவன் சமாவெண்ட மாவ.-தயவு செய்து மன்னித்துவிடு என்னை என்று சொல்வது தமிழில்!
(இதுவும் ஒரு கற்பனைதான்  கண்டுகொள்ளாதீங்கோ அம்பலத்தார்!

காட்டான் said...

வணக்கம் ஹமா!
ஏனுங்க அம்மணி இந்த பிளாக்க என்னை போல ஆட்களுக்குதானே வைச்சிருக்கிறீங்க.? இதுவும் "வானம் வெளுத்த பின்னும்" போல இருந்தா என்னை போல ஆட்கள் என்ன செய்யுறது அம்மணி..!! 

காட்டான் said...

அட கவிஞர்கள் எல்லோரும் இந்த விளாசு விளாசுறாங்களே.? எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.!!

தனிமரம் said...

paasam-!
அன்ன பலண்ட ஹந்த!(மேலே பார் நிலவை)
மகே புஞ்சி பானா. (என் சின்ன மருமகன்)
மே பலண்ட மகே தோனிய  ( இங்கே பார் ..என் ராஜகுமாரி)
ஒயாகே கானிய.
 !(உன் மனைவி ஆவாள்)
என்று சொல்லி சீராட்டிய என் மாமி ஒரு நிலவைப் பெற்றாள் ஒரு காலத்தில்!

 அது வளர்ந்து வந்தது பெளர்ணமியில். போகும் பாதையில் பாசம் தடுத்தது. விலக்கிவிட்ட உறவு.
 அது வேண்டாம்  பேரா வீட்டுக்கு. விட்டுவிடு காதலை !!
இதுவும் ஒரு பாசம் தான் உதறியது அவள் உறவை .
என்றாலும் அந்த நிலவு தேயவில்லை நினைவலைகளில்!
 இன்னும் வெளிச்சம் கொடுக்கின்றது விடையில்லாத உறவாக! மச்சாள் பாசமாக!

//குறிப்பு--2
சகோதரமொழியில் இப்படியும் ஒருவர் சொல்லலாம் என்ற கற்பனையே தவிர நான் றொம்ப நல்லவன் .

மகே தோனிய-இதுவும் உடரட்டையின் இன/சாதியின் சொல்லாடல் தனிமரம் தனியாக இதுக்கு பாட்டே போட்டு இருக்கு உன்னையே எப்போதும் நினைக்கின்றேன் என்ற பதிவில்!(இது ஒரு விளம்பரம் கட்டணம் செலுத்தவில்லை!)கற்பனைக்கு உருவம் தேடக்கூடாது இது வேப்பம்தோப்பில் சக்திவேல் சொன்னது அம்பலத்தார் வழி மொழிந்தது !அவ்வ்வ்வ்வ்வ்மிச்சத்துக்கு இரவு வாரன் படலை திறந்து இருக்கும்  என்ற நம்பிக்கையில்!

தனிமரம் said...

பாசமாகப் பார்த்தான்!
நிலவு தெரிய நிலாச்சோறு ஊட்டும் தாயின் படம் பலநாட்கள் பார்த்துக்கொண்டே இருக்கலாம் படுக்கை அறையில்!
அழகான கோட்டோவியம் வாங்கி மாட்ட ஆசைதான் வீடு இல்லாத ஏதிலிக்கு!

ஹேமா said...

காட்டான் மாமா பாத்தீங்களே.எழுதிப்பழகுங்கோ எண்டால் ஓடிப்போறீங்கள்.உங்கட மகனை டைவேர்ஸ் பண்ணிடுவன்.சொல்லிப்போட்டன் !

நேசன்...சந்தோஷம் படத்தின் ரசனைக்கு.கிட்டத்தட்ட 2 மணித்தியாலம் கூகிளில் படம் தேடினது மட்டும்.ஏனென்றால் காதல்,கருணை,சமூகம்,இயற்கை எல்லாமே கலந்த ஒருபடம் வேணுமெண்டு.அப்பாவும் நீங்களும் படத்திற்காகச் சொன்ன வார்த்தைகள் நித்திரைக் களைப்பை போகச்செய்திட்டுது !

அம்பலத்தார் said...

அம்மா கவிதாயினி இந்த உப்புமட சந்தியை என்னைப்போல பாமரனும் வந்து மனந்திறக்கத்தானே வைத்திருக்கிறியள். ஏனம்மா உங்களுக்கு இந்தகொல வெறி கவிதை எழுதச்சொல்லி எங்களையெல்லாம் மிரட்டாதையுங்கோ.
கீழே நான் எழுதியிருக்கிற வரிகளை படிச்சதும் ஏன்டா இப்படி ஒரு கேள்வியை கேட்டேன் என்று தலையில் அடிச்சுகொள்ளுவிங்க அதுக்கு நான் கியாரண்டி.

குறையொன்றுமில்லை. said...

தேர்ந்தெடுத்த படங்கள் வாவ்
கவிஞர்களின் வரிகள் அட்டகாசம்
உங்களின் முயற்சி அற்புதம்
நன்றி நன்றி

அம்பலத்தார் said...

பாதை
சேர்வதும் பிரிவதும்
பாதைகள் மட்டும்தானா
சேர்வதும் பிரிவதும் இயற்கையின் நியதி
விந்தாய் ஜனனித்ததும்
தந்தை உடல் பிரிந்து தாயின் கருவறை சேர்ந்து
தொப்புள்கொடி பிரிந்து வையகம் சேர்ந்து.
வீடு பிரிந்து போராளியாய் சேர்ந்து
போராட்டம் பிரிந்து மீண்டும் வீடு சேர்ந்து
களம் பிரிந்து புலம் சேர்ந்து
இளமை பிரிந்து முதுமை சேர்ந்து
ஆரோக்கியம் பிரிந்து நோய்கள் சேர்ந்து
என் பிரிதலும் சேர்தலும் தொடர்கிறது
ஒன்றுமட்டும் நிஜம்
உயிர் பிரிவதும் மயானம் சேர்வதுமே- என்
இறுதி சேர்தலும் பிரிதலும்

உங்களை கை எடுத்து கும்பிடுகிறேன் தயவுசெய்து யாரும் இதை கவிதை என்று சொல்லி கவிதைக்கு களங்கம் விளைவித்துவிடாதீர்கள்.

அம்பலத்தார் said...

அடேங்கப்பா பல கவிஞரும் இஸ்டத்துக்கு புகுந்து விளையாடியிருக்கிறாங்க படிக்க சந்தோசமாக இருக்கு.

அம்பலத்தார் said...

உண்மையை கூறுவதானால் எனக்கு அந்த பாதைகள் படம் தான் மிகவும் ஈர்ப்பை தந்தது. ஏனோ தெரியவில்லை இதை பார்த்ததும் வேறு வேறு திசைகளிலிருந்து வந்த நானும் செல்லம்மாவும் சேர்ந்து பயணிக்கத்தொடங்கிய சந்திபோலவும்.
பிறந்தது முதல் அப்பா அப்பா என கைபிடித்து நடந்த என்மகன் என் கை விலக்கி தன் துணை கைபிடித்து புதிய பாதையில் போனதும்தான் ஞாபகத்துக்கு வருகிறது.
ஒரு பெரிய கவிதை தரும் உணர்வை உள்ளக்கிளர்ச்சியை அந்தப்படம் என்னுள் உண்டுபண்ணிவிட்டது ஹேமா. ஒரு படத்தினால் இவ்வளவுதூரம் உள்ளத்தில் கிளர்ச்சிகளை உண்டுபண்ண முடியும் என்பதை இன்றுதான் உணர்ந்துகொண்டேன்

அம்பலத்தார் said...

தனிமரம் said..
அன்ன பலண்ட ஹந்த!(மேலே பார் நிலவை)
மகே புஞ்சி பானா.(என் சின்ன மருமகன்)
மே பலண்ட மகே தோனிய ( இங்கே பார் ..என் ராஜகுமாரி)
ஒயாகே கானிய.!(உன் மனைவி ஆவாள்)//
நேசனிற்குள் ஒரு சிங்களமொழி கவிஞன் ஒழிந்துகொண்டிருந்ததை இன்றுதான் கண்டேன்

அம்பலத்தார் said...

ஹேமா said...

காட்டான் மாமா பாத்தீங்களே.எழுதிப்பழகுங்கோ எண்டால் ஓடிப்போறீங்கள்.உங்கட மகனை டைவேர்ஸ் பண்ணிடுவன்.சொல்லிப்போட்டன் !//
அட எனக்கு தெரியாமல் இப்படி ஒரு விடயமும் நடந்திருக்கே. மச்சான் அக்கா குடுமத்துக்கே அழைப்பு வைக்காமல் ஒரு கல்யாணம் நடத்தி வச்சிருக்கிறாரே. இதுக்கு மணியையும் பூசாரின் எசமானியம்மாவையும் கூப்பிட்டு ஒரு பஞ்சாயத்து நடத்தியே ஆகவேணும். எலே மணி கொஞ்சம் ஐடியாவோடா இங்க வா லே

Yoga.S. said...

ஏதாவது எழுதுங்கோ என்று அன்பு மகளின் கட்டளைக்கு?அடிபணிந்து சிறிய ஒரு உரையாடல்(நகைச்சுவை?!)."திருவிளையாடல்"படத்தை நினைவில் கொள்க:அரசனுக்குப் பதில் அரசி(ஹேமா)அரியாசனத்தில்.புலவர்கள்;காட்டான்,நேசன்,அம்பலத்தார்,நிரூபன்,மற்றும்பலர்.புலவர்?யோகா கவிதையுடன்(உரைநடை)வருகிறார்.யோகா!வணக்கம்அரசியாரே! அரசி:வணக்கம் புலவரே! யோகா:i(மனதுக்குள்......சும்மா கொஞ்சம் அங்க,இஞ்ச வார்த்தைகள திருடி வசன நடையில ஒரு தடவ எழுதின உடனே புலவர் போஸ்ட் குடுத்துட்டாங்க!)கவிதயப் படிக்கண்டுக்களா? அரசி(ஹேமா):படிங்க புலவரே! யோகா:கொங்கு தேர் வாழ்க்கை............... காட்டான்:புலவரே,இது திருவிளையாடல் இல்ல! நேசன்:அது வேற,இது வேற! அம்பலத்தார்:பரவாயில்லை,அதையும் கேட்டுத்தான் பாப்பமே,கன நாளா கேக்கையில்ல! நிரூபன்:அறளை பேந்துட்டிது! அரசி(ஹேமா)சரி,சரி ஆளாளுக்கு ஒவ்வொண்டு சொல்லாதயுங்கோ!அவரும் உங்கள மாதிரி ஒரு புலவர்! தானே?சரி,பிழை இருக்கத்தான் செய்யும்!நீங்க படியுங்க,சா.....பாடுங்க புலவரே! யோகா:அப்பிடியெண்டா மருதடிப்புள்ளையார் கோயில் மண்டபத்தில"அவர்"குடுத்தத பாடட்டோ? அரசி:என்னது "அவர்"குடுத்ததோ? யோகா:இல்லையில்ல,வாய் தடுமாறிச் சொல்லிப் போட்டன்! §§§காட்டான்,நேசன்,அம்பலத்தார்,நிரூபன்::::இது சரியா வராது!ஆரோ மண்டபத்தில எழுதிக் குடுத்ததை இங்க வந்து பாடவோ?அப்பிடியெண்டால் நாங்களும் பாடுவமே?யோகாப் புலவர் அளாப்பி விளையாடுறார்.இந்த விளையாட்டுக்கு நாங்கள் வரேல்லை!!!!!(ஒட்டுமொத்தமாக புலவர்கள் வெளி நடப்பு செய்கிறார்கள்.சபை கலைந்தது.அரசியும் களைப்பு மேலிட நிரூபன் இண்டைக்கு உடம்பு மெலிய என்னவோ பத்தியம் சொன்னாரே?அதையாவது செய்து சாப்பிட்டுப் பார்ப்போம் என்று தனக்குள் கூறிக் கொண்டு "அன்னநடை"நடந்து குசினிக்குள் சென்றார்!)

தனிமரம் said...

தனிமரம் said..
அன்ன பலண்ட ஹந்த!(மேலே பார் நிலவை)
மகே புஞ்சி பானா.(என் சின்ன மருமகன்)
மே பலண்ட மகே தோனிய ( இங்கே பார் ..என் ராஜகுமாரி)
ஒயாகே கானிய.!(உன் மனைவி ஆவாள்)//
நேசனிற்குள் ஒரு சிங்களமொழி கவிஞன் ஒழிந்துகொண்டிருந்ததை இன்றுதான் கண்டேன்
//நன்றி அம்பலத்தார் உங்கள் ஆசீர் வாத வார்த்தைக்கு.சகோதர மொழிக்கவிஞன்  அவன் தொலைந்து விட்டான் அந்த உணர்வில் இருந்து இங்கே வேற உலகம்(பதிவுலகம்) ஹீ இங்க தனிமரம் நேசன் இதுதான் இந்த பாமரனின் உலகம்!இருக்கும் கொஞ்ச ஆட்களும் ஓடிவிடுவாங்க புரளி கிளப்பினால் ஆகவே விட்டுறுங்கோ . ஹேமா அக்காள் போட்டிருக்கும் படம் மனதில் கிளர்ச்சியை உண்டு பண்ணுது. இரண்டும் இரண்டு உலகம் இங்கு யாரும் முகத்தை மூடிக்கொண்டு வந்து மூக்கில் குத்த முடியாது என்ற நம்பிக்கையில் நானும் கோதாவில் குதிக்கின்றேன் அவ்வளவுதான் நான் சின்னவன்.

தனிமரம் said...

பாதை!
இந்த மலைகளும் மடுக்களும் நிறைந்த தேசத்தில்
நடந்த களைப்பில் வட்டக்கல்லில் வாடியிருந்தேன்!
எதிரே வடக்கில் இருந்து அகதியாக ஓடிவந்தேன் 
சாய்ந்து கொள்கின்றேன் என்று சொன்னாய் தோள்கொடுத்தேன் தோழி என்றாய் !பின்
தாலி தந்தாய் தாரமாக்கினாய்
அன்பில் நீ தங்கம் தான் கணவனே!
அதோ இருமரங்கள் இடையில்!
ஒன்று சொல்லும் யாழ்ப்பாணத்தான்
மற்றமரம் சொல்லும் தோட்டச்சிறுக்கி 
விட்டு விடுவம் எதிரே மறுபாதையில் போவோம் நாம் பிரதேசவாதம் கடக்கும் புகைகளாக பாதை தெரிகின்றது தெளிவாக! 
//மன்னிக்கவும் வார்த்தையை அடக்கமுடியவில்லை!

ஹேமா said...

உண்மையில் நான் நினைக்கவே இல்லை.யோகா அப்பா....கலக்கிட்டீங்கள்.நகைச்சுவைப் பாணியில் எல்லோரையும் சேர்த்துகொண்டு அருமையான பதொவொண்டு !

நேசன்....மனசில் உள்லதெல்லாம் வெளில வருது.எங்க கருவாச்சிக்குட்டி.வந்தால் உங்களை அங்குலம் அங்குலமா பிச்சு எடுத்துப் பிடுங்கிப் போடுவா.காக்கா ஓடி வாங்கோ !

அம்பலம் ஐயா...இல்ல இல்ல எண்டு சொல்லி இருக்கெண்டு அருமையான வாழ்க்கைத் தத்துவம் சொன்ன கவிதை அருமையும் பாராட்டும் !

ஹேமா said...

காக்காவுக்குக் கேட்டிட்டுது......நான் கூப்பிட்டது.வாங்கோ வாங்கோ.காக்கா வந்தாச்சு.இப்ப என்னவெண்டா கவிதை எழுதவேணும் !

Anonymous said...

akkaa இண்டைக்கு கிட்னி ரொம்ப அறிவயலில் செலவு ஆகி விட்டது ...கிட்னி yaal இப்போது யோசிக்கவே முடியலை ...அதனால் எழுத முடியல ...அவ்வவ் எப்புடி லாம் எஸ்கேப் ஆகுரணன் ...


அவ்வவ் நானும் ட்ரை பண்ணுறேன் அக்கா ...

Yoga.S. said...

வணக்கம் கலை,வாங்கோ கலை!என்னோட மானத்த காப்பாத்துங்கோ கலை!கவிதை எழுதுங்கோ கலை!கவிதை எழுதாட்டி கலை என்னும் பேர் "ரிப்பேர்" ஆகிடும் கலை!Ha!Ha!Haa!!!!!maaddi vuddaachchu!

K said...

நிறைய கவிதைகள் இருக்கு எழுத நேரமில்லை! செம பிசி! என்ன செய்யலாம்???

Anonymous said...

நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடி வா
மலை மேல ஏறி வா
மல்லிகைப் பூ koNdu வா !!!



மாமா உங்கட மானத்தை காப்பற்றிடனல்லோ ...அவ்வவ்

Anonymous said...

அயய்யோயூ மாமாக்கு வணக்கம் சொல்ல மறந்துப் போட்டேனே நிலா நிலா ஓடி வா கவிதை எழுதுன அவசரத்தில் ...


வணக்கம் மாமா ,bell அண்ணா ,ரீ ரீ அண்ணா ,அம்பாஸ் uncle அண்ட் எவர்க்ரீன் அப்பத்தா

அம்பலத்தார் said...

யோகா பின்னியெடுத்திட்டிங்க. ஏன் இன்னும் இந்த எழுத்து துறவறம் மீண்டும் பதிவுகள் தொடங்குங்கள் தொடருங்கள் யோகா

அம்பலத்தார் said...

கலை said...

நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடி வா
மலை மேல ஏறி வா
மல்லிகைப் பூ koNdu வா !!!//
கலை எப்படிம்மா இவ்வளவு நல்லா சிந்திச்சு கவிதை எழுதினிங்க.

Yoga.S. said...

கலை said...

அயய்யோயூ மாமாக்கு வணக்கம் சொல்ல மறந்துப் போட்டேனே நிலா நிலா ஓடி வா கவிதை எழுதுன அவசரத்தில் ...
வணக்கம் மாமா ,bell அண்ணா ,ரீ ரீ அண்ணா ,அம்பாஸ் uncle அண்ட் எவர்க்ரீன் அப்பத்தா!////நல்ல வேள கொம்பாஸ் uncle என்று எழுதவில்லை.எல்லாம் சரி,யார் அது எவர்க்ரீன் அப்பத்தா?

Yoga.S. said...

கலை said...

நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடி வா
மலை மேல ஏறி வா
மல்லிகைப் பூ koNdu வா !!!

மாமா உங்கட மானத்தை காப்பற்றிடனல்லோ ...அவ்வவ்..////உஸ்..... அப்பாடா!!!!!!!

Yoga.S. said...

அம்பலத்தார் said...

யோகா பின்னியெடுத்திட்டிங்க. ஏன் இன்னும் இந்த எழுத்து துறவறம் மீண்டும் பதிவுகள் தொடங்குங்கள் தொடருங்கள் யோகா.///ஆள(நாட்டை இல்ல)விடுங்க சாமி,ஹ!ஹ!ஹா!!!!!!!

Yoga.S. said...

கந்த்சாமி சாரோட புண்ணியத்துல ஐ.பி.எல்(முடிந்த)மச்(match)பாத்துக் கொண்டிருக்கிறன்!

Anonymous said...

என் மேல எம்பஊட்டு நம்பிக்கை என்ற MAAMAAKKU

சாப்பிட்டு வந்து எழுத முயற்சிக்கிறேன் மாமா

Yoga.S. said...

கலை said...

என் மேல எம்பூட்டு நம்பிக்கை என்ற மாமாக்கு.

சாப்பிட்டு வந்து எழுத முயற்சிக்கிறேன் மாமா!////அது,நல்ல பொண்ணுக்கு அழகு!

நிரூபன் said...

எல்லோருக்கும் பிந்திய வணக்கம்.

மிகவும் அருமையான முயற்சியினைப் பதிவினூடே பகிர்ந்திருக்கிறீங்க.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
பங்குபற்றிய அத்தனை பேருக்கும் பாராட்டுக்கள்.

தனிமரம் நேசன்...சகோதர மொழியிலும் கலக்கியிருக்கிறார். சகோதர மொழியில் ரொம்பவே காதல் செய்து நிலாக் காட்டியிருப்பார் போல....

கணேஷ்...கருத்துக்கள் கொண்ட கவிதையினை சுருக்கென்று மனதில் ஒட்டும் படி சுருக்கமாக கொடுத்திருக்கிறார்.

வசீர் அலி வித்தியாசமான முயற்சியாக ஒவ்வோர் தலைப்புக்களை உட்புகுத்து கவிதை வடித்திருக்கிறார்.

மகேந்திரன் அண்ணரும் அழகுற வரிகளைக் கோர்த்து வழமையான தன் கவிதை வித்துவத்தை இங்கே காட்டியிருக்கிறார்.

ஹஷீம் ஹபீ அருமையான கவிதை கொடுத்திருக்கிறார்.

யோகா ஐயா...ஓர் காமெடி கலாட்டா செய்திருக்கிறார்.

இறுதியாக மாஸ்டர்ஸ் ஆப் மணி நறுக்கென்று ஓர் கவிதையினை கோணாவில் கவிதாவின் நினைவில் சுருக்கென்று எகிறும் வண்ணம் பிரிவின்னை மறந்தாலும் மறக்காதவராய் நடித்துப் பகிர்ந்திருக்கிறார்.

அனைவரும் அசத்தியிருக்கிறீங்க.


நான் மட்டும் பாவமுங்க. தனிச்சிட்டேன்!
அடுத்த போட்டியிலையாச்சும் கலந்துக்கிறேன்.

Anonymous said...

வறண்ட கால

முற்களும்,

வசந்த கால பூக்களாய்

மாறு கிறதே !!! ..

பேதை எந்தன் பாதையில் பவனியோ ??!!!



ஆர் அந்த பேதை ???


ஆறெண்டு ஆருக்கும் தெரியலையா ...நல்லா கிட்னி USE பண்ணி யோசியுங்கோ ..அறியலையூ ...ளூஏ தரேன் ,,,கவிதாயினி ,,,, சரியா சொன்னேள் நம்ம அப்பத்தா வே தான் ,

சரியாச் SONNA ELLARUKKUM VAAZTHTHUKKAL

Yoga.S. said...

நிரூபன் said...

எல்லோருக்கும் பிந்திய வணக்கம்.

யோகா ஐயா...ஓர் காமெடி கலாட்டா செய்திருக்கிறார்.///வாங்க பாஸ்!உங்களுக்கும் எங்கட சார்பில இரவு வணக்கம்.கவிதைப் படைப்பு இன்னமும் நிறைவடையவில்லை!ஸ்பொன்சர் சமையலில் மினக்கடுவதுபோல் தெரிகிறது!அதுவும் நீங்கள் காலையில் கொடுத்த மெனுவை பரீட்சித்துப் பார்ப்பதாக பட்சி சொல்லியது,ஹ!ஹ!ஹா!!!!!!!

Anonymous said...

நிலவைக் காட்டி
சோறு ஊட்டும்
தாயிடம் அடம்பிடிக்கிறது
குழந்தை!!

நிலவுக்கும் சோறு ஊட்டச் சொல்லி !!..

Yoga.S. said...

கலை said...

வரண்ட கால

முட்களும்,

வசந்த கால பூக்களாய்

மாறுகிறதே !!! ..

பேதை எந்தன் பாதையில் பவனியோ ??!!!



யார் அந்த பேதை ???


ஆரெண்டு ஆருக்கும் தெரியலையா? ...நல்லா கிட்னி USE பண்ணி யோசியுங்கோ ..அறியலையூ ...குளூ தரேன் ,,,கவிதாயினி ,,,, சரியா சொன்னேள், நம்ம அப்பத்தா வே தான்.

சரியாச் SONNA ELLARUKKUM வாழ்த்துக்கள்./////கேள்வியையும் கேட்டு பதிலையும் நீங்களே சொன்னா எப்புடி?

ஹேமா said...

நிரூ....நிறைய நன்றி.என்ர வேலையைக் கொஞ்சம் குறைச்சிருக்கிறீங்கள்.சந்தோஷம்.ஆனாலும் உங்கட பாணியில ஏதாச்சும் சொல்லியிருக்கலாமெல்லோ இந்தப் படங்களுக்கு.மணியத்தாரும் பிஸி எண்டிட்டார்.கொஞ்சம் கலகலப்பும் வேணுமெண்டு நினைக்கிறன்.அப்பா கலக்கிட்டார் !

ஹேமா said...

கலை கொஞ்சம் கலாய்க்....ச்ச....கதைக்கலாமெண்டால் வீட்ல ஒரு விருந்தாளி.சாப்பாடு குடுத்திட்டு பிறகுதான்....!

Anonymous said...

அவ்வவ் விருந்தாளியா ...நல்லக் கவனியுங்கோ அக்கா ....

நீங்க கவனிக்கிறது ல அடுத்த தரம் உங்கட வீட்டுப் பக்கமே வரக் கூடாது ஒகேயி (சும்மா சும்மா சொன்னான் ...)

Yoga.S. said...

ஹேமா said...

கலை கொஞ்சம் கலாய்க்....ச்ச....கதைக்கலாமெண்டால் வீட்ல ஒரு விருந்தாளி.சாப்பாடு குடுத்திட்டு பிறகுதான்....!///நிரூபன் குடுத்த "மெனு"வை குடித்திடாதயுங்கோ,அது உங்களுக்கு "மட்டும்" தான்,கெக்கெக்கே!!!!!!

தனிமரம் said...

நட்புப்பாதை என்ற போர்வையில் ஒன்றாக வந்தோம் வட்டக்கல்லில் நிலாவைக் காட்டினாய்  தோழ்மீது சாய்ந்து பாசமாக !இரு மரங்கள் தெரிந்தது !
இந்தவடக்கு வழியால் போடா என்றது தமிழ்
மற்றது சகோதரமொழியில் தெற்கு வழியாக போடி என்றது!
 புகைமூட்டம் கண்டது நம் காதல் !மொழிகடந்து தூரத்தில் சங்கமிக்கின்றோம் தீயில் !!
வேண்டாம் இனவாதம் காணிக்கை என் காதல் என்று சொல்லும் இந்தப் பாதை!

ஹேமா said...

ஐயோ....என்ர சாப்பாட்டைக் கலாய்க்கினம்.வந்திருக்கிறவ ஒரு ஒல்லிப்பாச்சான் கலை மாதிரி.ஒரு செத்த மனுசனை 3 கிழமையா கை,கால் எண்டு வெட்டிப் பிச்சுக்கொண்டிருக்கிறா.அவவுக்கு நிரூன்ர சாப்பாட்டைக் குடுத்தா அவவை அந்தாளுக்குப் பக்கத்தில படுக்க வச்சிடுவினம்.ஐயோ....ஆள் இருக்கு சொல்லிப்போடாதேங்கோ !

தனிமரம் said...

கலை மிச்சத்தை தொடரட்டும் வேலை முடியவில்லை. 
நிரூபனின் பாராட்டுக்கு நன்றி.யோகா ஐயா சபையை கலகலப்பாக்க ஆக்கிவிட்டார் புலவராக வந்து தொடர்ந்து எழுதுங்கோ யோகா ஐயா என் போன்ற சின்னவர்கள் உங்கள் எழுத்தைப்படிக்கனும்.

Yoga.S. said...

ஹேமா said...

ஐயோ....என்ர சாப்பாட்டைக் கலாய்க்கினம்.வந்திருக்கிறவ ஒரு ஒல்லிப்பாச்சான் கலை மாதிரி.ஒரு செத்த மனுசனை 3 கிழமையா கை,கால் எண்டு வெட்டிப் பிச்சுக்கொண்டிருக்கிறா.///???????

Anonymous said...

உண்மை தான் REE REE அண்ணா ...மாமா இன்னைக்கு சுப்பரா கலைய்த்து விட்டினம்....எப்புடி மாமா இப்ப்புடிலாம் ..ஹ ஹ ஹா ...

மாமா நீங்க சொன்னதுலயே ஹை லைட் காமெடி ஹேமா அக்கா VAI அரசி ன்னு சொன்னது தான் ....

ஹேமா said...

பொறமைக் காக்கா...அப்பா என்னை அரசி எண்டு சொன்னது பொறமை பொறாமை.அதைக் காமெடியாம்.பதிவு மட்டும்தான் காமெடி!

தனக்குத் தானே காக்கா பறந்துவான்னு ஆராம் கவிதை எழுதுனது.இதுதான் அப்பா எழுதினதைவிடப் பெரிய காமெடி.உண்மையா இரண்டாவது கவிதை சூப்பர் கலை !

அப்பா...வந்திருக்கிறவ 2 ம் வருசம் வைத்தியம் படிக்கும் மாணவி !

Yoga.S. said...

ஹேமா said...

பொறமைக் காக்கா...அப்பா என்னை அரசி எண்டு சொன்னது பொறமை பொறாமை.அதைக் காமெடியாம்.பதிவு மட்டும்தான் காமெடி!

தனக்குத் தானே காக்கா பறந்துவான்னு ஆராம் கவிதை எழுதுனது.இதுதான் அப்பா எழுதினதைவிடப் பெரிய காமெடி.உண்மையா இரண்டாவது கவிதை சூப்பர் கலை !

அப்பா...வந்திருக்கிறவ 2 ம் வருசம் வைத்தியம் படிக்கும் மாணவி !////நல்ல வேள சொன்னீங்கள்!நான் நினைச்சன் என்னடா இந்தப்பெட்ட "கொறனர்" றோட எல்லாம் சிநேகிதம் வச்சிருக்குதெண்டு;ஹோ!ஹோ!ஹோ!!!!!

Anonymous said...

நட்புப்பாதை என்ற போர்வையில் ஒன்றாக வந்தோம்
வட்டக்கல்லில் நிலாவைக் காட்டினாய் தோழ்மீது சாய்ந்து பாசமாக !
இரு மரங்கள் தெரிந்தது !
இந்தவடக்கு வழியால் போடா என்றது தமிழ்
மற்றது சகோதரமொழியில் தெற்கு வழியாக போடி என்றது!
புகைமூட்டம் கண்டது நம் காதல் !
மொழிகடந்து தூரத்தில் சங்கமிக்கின்றோம் தீயில் !!
வேண்டாம் இனவாதம் காணிக்கை என் காதல் என்று சொல்லும் இந்தப் பாதை!


தொலைந்த மொழிகளும் மௌனமாய் வேடிக்கை காட்ட
வாதத்தில் பிறந்த இனவாதமும்
திசைகளாயி திரும்பி கொள்ள
காதல் பாதையில் சங்கமித்த உள்ளங்களும்
வெறுமையாய் வெற்று நடைப் போட
துணிந்தது உந்தன் இதயம் ...
பதில் இல்லாமல் மருகிய காலம்....
உனக்காய் காத்திருந்த பாதையில்
யாரோ ஒருத்தி எனக்காய் தவமிருக்க
நேசனிடம் கொண்ட நேசமும் நிஜமாக
எந்தன் பாதையில் என்றுமே ஒரே மரம் தனிமரம் என்னவளுக்காய் !!!




REE REE அண்ணா மிச்சத்தை நானே முடிச்சிப் போட்டேன் ..உங்களுக்கு வேலை இருக்கு அல்லோ ..அதன் ...எப்புடி இருக்குது அன்ன ..ஹ ஹ ஹா

Anonymous said...

ஒமாம் அரசியாரே உங்களிடம் ரொம்ப பொராமைஈஈஈஈஈஇ அரசியேரே ..


அரசியாரே நான் எழுதியது முன்று கவிதை ரெண்டு மட்டும் தான் போட்டு இருக்கீர்கள் ,,,முன்றாவது சுப்பரா இருக்கு எண்டு நினைத்து சுட்டு வீட்டேர்களா அரசியாரே எந்தன் கவியை .... எனது முதல் கவிதை உலகப் புகழ் பெற்றதாக்கும்....அதுவும்முன்றவது உலகப் புகழ் பெற்று ஆசகார் மற்றும் பூஸ்கர்ர் அவார்ட் வாங்க பரீசிலனையில் உள்ளதாக்கும் ....

Yoga.S. said...

கலை said...

நட்புப்பாதை என்ற போர்வையில் ஒன்றாக வந்தோம்
வட்டக்கல்லில் நிலாவைக் காட்டினாய் தோழ்மீது சாய்ந்து பாசமாக !
இரு மரங்கள் தெரிந்தது !
இந்தவடக்கு வழியால் போடா என்றது தமிழ்
மற்றது சகோதரமொழியில் தெற்கு வழியாக போடி என்றது!
புகைமூட்டம் கண்டது நம் காதல் !
மொழிகடந்து தூரத்தில் சங்கமிக்கின்றோம் தீயில் !!
வேண்டாம் இனவாதம் காணிக்கை என் காதல் என்று சொல்லும் இந்தப் பாதை!


தொலைந்த மொழிகளும் மௌனமாய் வேடிக்கை காட்ட
வாதத்தில் பிறந்த இனவாதமும்
திசைகளாயி திரும்பி கொள்ள
காதல் பாதையில் சங்கமித்த உள்ளங்களும்
வெறுமையாய் வெற்று நடைப் போட
துணிந்தது உந்தன் இதயம் ...
பதில் இல்லாமல் மருகிய காலம்....
உனக்காய் காத்திருந்த பாதையில்
யாரோ ஒருத்தி எனக்காய் தவமிருக்க
நேசனிடம் கொண்ட நேசமும் நிஜமாக
எந்தன் பாதையில் என்றுமே ஒரே மரம் தனிமரம் என்னவளுக்காய் !!!




REE REE அண்ணா மிச்சத்தை நானே முடிச்சிப் போட்டேன் ..உங்களுக்கு வேலை இருக்கு அல்லோ ..அதன் ...எப்புடி இருக்குது அன்ன ..ஹ!ஹ!ஹா!!!!////suuuuuuuuuuuuper kalai!!!!!!!!!!!!!!

Anonymous said...

mikka நன்றிங்க அக்கா paarattukku

Anonymous said...

ஹைஈ jally jolly மாமா சுப்பரா இருக்கு எண்டு solli விட்டாங்களே லேஏஏஏஏஏஏஏஎ ...

நன்றிங்க மாமா

ஹேமா அக்கா அரசியாரே உங்கட அப்பா எனக்குத்தே ஸுப்பொர்தூஊ .

Yoga.S. said...

கலை said...

ஒமாம் அரசியாரே உங்களிடம் ரொம்ப பொராமைஈஈஈஈஈஇ அரசியேரே ..


அரசியாரே நான் எழுதியது மூன்று கவிதை ரெண்டு மட்டும் தான் போட்டு இருக்கீர்கள் ,,,முன்றாவது சுப்பரா இருக்கு எண்டு நினைத்து சுட்டு விட்டி ர்களா அரசியாரே எந்தன் கவியை .... எனது முதல் கவிதை உலகப் புகழ் பெற்றதாக்கும்....அதுவும் மூன்றாவது உலகப் புகழ் பெற்று ஆஸ்கார் மற்றும் பூஸ்கரர் அவார்ட் வாங்க பரீசிலனையில் உள்ளதாக்கும் ....///அதானே,அரசியாரே தவறு செய்தால்????

ஹேமா said...

அச்சோ அச்சோ கருவாச்சின்ர வாயுக்குள்ள....மன்னிச்சுக்கொள்ளுங்கோ கலை.இப்பவே குட்டிக்கவிதை சேர்க்கிறன்.அண்ணா தங்கச்சியின் கவிதையும் அருமை அருமை.அண்ணா சொல்றார் நான் ரீரீ சொல்லக்கூடாதாம்.நீங்கமட்டும்தான் சொல்லலாமாம்.எப்பிடி உரிமை !

அப்பா....பாத்தீங்களே தனக்குத்தானாம் நீங்க சப்போட் காக்கா சொல்றா.நீங்க அரசி சொன்னதுகூட ... !

அருணா செல்வம் said...

பாதை

வாழ்வை நோக்கி
ஓடி வந்தேன்.
விதி காட்டியது
இரண்டு வழி!

பாசம்

தாயே..
களங்கத்துடன்
தேய்கின்ற
அந்த நிலவினும்
உயர்ந்தவள் நீ!

தனிமரம் said...

ஹேமா அக்காள் எனக்கு ஒரு சந்தேகம் இப்படி கவிதை மட்டும் ஒழங்கா எழுத்துப்பிழைவிடாது எழுதும் கலை பின்னூட்டங்களில் மட்டும் என்னைவிட அதிகம் எழுத்துப்பிழை விடுவது ஏன் நான் தான் படிக்காத பாமரன் இவா படித்துக்கொண்டிருப்பது முதுகலைமாமனி அல்லவா(ma....&ph)  கேளுங்கோ இல்லை அரசியே நானே உள்குத்துப் போடுவேன் தங்கை நட்பு என்று பாராமல் நமக்கு ஹிட்ச் முக்கியம் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ப்ப்?

ஹேமா said...

நேசன்...கலை மட்டுமில்ல நீங்களும்தான்.எழுத்துப்பிழையே இல்லையே உங்கட எழுத்திலயும்.அதிசயமும்
சந்தோஷமும்.ஆனால் என்னைத் தள்ளி வைக்கிறதுதான் கஸ்டம்.என்னை ரீரீ எண்டு சொல்லவேணாம் சொல்லிப்போட்டீங்களெல்லோ !

Yoga.S. said...

ஹேமா said...

அச்சோ அச்சோ கருவாச்சின்ர வாயுக்குள்ள....மன்னிச்சுக்கொள்ளுங்கோ கலை.இப்பவே குட்டிக்கவிதை சேர்க்கிறன்.அண்ணா தங்கச்சியின் கவிதையும் அருமை அருமை.அண்ணா சொல்றார் நான் ரீரீ சொல்லக்கூடாதாம்.நீங்கமட்டும்தான் சொல்லலாமாம்.எப்பிடி உரிமை !

அப்பா....பாத்தீங்களே தனக்குத்தானாம் நீங்க சப்போட் காக்கா சொல்றா.நீங்க அரசி சொன்னதுகூட ... !////அரசின்னா அரசி தானே?இளவரசி கொஞ்சம்...........................!இதென்னடா வம்பாப் போச்சு?மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி எண்டிறது இது தானோ???

தனிமரம் said...

நேசன்...கலை மட்டுமில்ல நீங்களும்தான்.எழுத்துப்பிழையே இல்லையே உங்கட எழுத்திலயும்.அதிசயமும் 
சந்தோஷமும்.// இதுக்கு நாளைப்பதிவில் பதில் சில்லுறன்!
ஆனால் என்னைத் தள்ளி வைக்கிறதுதான் கஸ்டம்.என்னை ரீரீ எண்டு சொல்லவேணாம் சொல்லிப்போட்டீங்களெல்லோ !//ஹீ ஹீ அக்காள் தம்பியைக் குட்டிவைக்கலாம் தட்டிச் சொல்லலாம் தங்கை அப்படி செய்ய முடியாதே! ஏன்னா மூப்பு அடிப்படையில் பதிவுலகில் நீங்க மூத்த அக்காள் நான் இடையில் கலை கடைசியில் இப்படி சொல்வதில் என்ன தப்பு???!

07 April, 2012 23:32

தனிமரம் said...

அப்பா....பாத்தீங்களே தனக்குத்தானாம் நீங்க சப்போட் காக்கா சொல்றா.நீங்க அரசி சொன்னதுகூட ... !////அரசின்னா அரசி தானே?இளவரசி கொஞ்சம்...........................!இதென்னடா வம்பாப் போச்சு?மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி எண்டிறது இது தானோ???//ஹீ ஹீ இதுக்குத் தான் சொல்வது மகாராணி நான் தூதுவன் வந்திருக்கின்றேன் என்று சொல்லனும் புலவர் என்று வந்து நூடில்ஸ் ஆகிவிட்டார் யோகா ஐயா ஐய்ய்ய்ய்ய்யா!இந்த வாரம் எலாரும் யோகா ஐயாவை சந்தி சிரிக்கவைத்து வேட்டியை உருவினம் சிலர் கறுப்பு பட்டி போட்டு கட்டி அடிக்கினம் ம்ம்ம்ம் நாங்களும் கவனிப்பம் அல்ல அவ்வ்வ்வ்வ்வ் !

தனிமரம் said...

நிலா வட்டமாக இருந்தது நீ என் அருகில் இருந்த போது அது நெற்றியில் குங்குமம் பொட்டாக!
இன்று மகனுக்கு சோறு ஊட்டுகின்றேன் நிலாவாக உன்னைக்காட்டி உன் தந்தை ஒரு துரோகி என்று சுட்டவர்கள் முகம் காட்டி நானும் ஈழத்து பெண்மனிதான் பாசத்துடன்! வலிக்கின்றது என் வாழ்வு மகனே நீ இருப்பாய் நெருப்பாக எனக்கு கொல்லி போட ஊர் சொல்லும் உன் அப்பன் துரோகி என்று நான் சொல்லுகின்றேன் அவன் நல்லவன் உணர்ச்சிக்கு அடிமையாகாதே தமிழக அரசியல் போல நீயும் நாளை தீக்குளிப்பாய் என் அப்பன் துரோகி என்று! 
அதுமட்டும் செய்யாதே என் நிலவே பிள்ளை நிலவே பார் வெளிச்சத்தை பால் குடித்துக் கொண்டு என் மார்பில் இருப்பதும் தமிழ்பால் தான்!

ஹேமா said...

பதிவெழுதிறதிலதான் மூத்தவள் நான்.ஆளையும் மூத்தவள் எண்டோ நினைச்சிட்டீங்கள் நேசன்.சரிதான்.நானும் அண்ணா சொல்லட்டோ !

யோகா அப்பா....கலா கருப்புப்பட்டி...எனக்கு ஒரே சிரிப்புத்தான்.அப்பா பாவம் !

தனிமரம் said...

REE REE அண்ணா மிச்சத்தை நானே முடிச்சிப் போட்டேன் ..உங்களுக்கு வேலை இருக்கு அல்லோ ..அதன் ...எப்புடி இருக்குது அன்ன ..ஹ ஹ ஹா/:சனிக்கிழமையில் பல வேலை கோயில் இடையில் சமையல் மற்றும் பதிவுலக பின்னூட்டம் தாயக தொலைபேசி அழைப்பு என ஒடும் தனிமரம்  எப்படி கும்மியில் இருப்பது கலை அதுதான் முடிக்கச் சொன்னேன் முடிவு சிறப்பு!வாழ்த்துக்கள்!

தனிமரம் said...

நேசன்....மனசில் உள்லதெல்லாம் வெளில வருது.எங்க கருவாச்சிக்குட்டி.வந்தால் உங்களை அங்குலம் அங்குலமா பிச்சு எடுத்துப் பிடுங்கிப் போடுவா.காக்கா ஓடி வாங்கோ !/:என் மனசில் ஏதும் இல்லை ஹேமா அக்காள் தனிமரமாக சுதந்திரமாக அரசியல் பேசுகின்றேன் சிலரைச் சுடுகின்றேன் வார்த்தைகளால் வேண்டாம் இனவாதம் ,மொழி வாதம் ,மதவாதம்,இந்த பதிவுலகில்  என்று முடியவில்லை!!!!ஓட நினைத்தாலும் இலக்கிய ஆசை விடுகுது இல்லை !இன்னொரு தொடர் வந்த பின் ஓடிவிடுவேன்!

காட்டான் said...

எங்கட அண்ணனுக்கு தன்ர சொந்தங்கள விட்டுக்குடுக்க மனம் வராது.. இந்த தற்குறியையும் புலவராக்கி அழகு பாக்கிறாரே.. நன்றியண்ண..!!!! ;-)

காட்டான் said...

99

காட்டான் said...

100!!!!!!!!!!!!!!!!!!!!!

haa ஹா நேசன் இப்ப என்ன செய்யபோறீங்க..

தனிமரம் said...

பதிவெழுதிறதிலதான் மூத்தவள் நான்.ஆளையும் மூத்தவள் எண்டோ நினைச்சிட்டீங்கள் நேசன்.சரிதான்.நானும் அண்ணா சொல்லட்டோ !

யோகா அப்பா....கலா கருப்புப்பட்டி...எனக்கு ஒரே சிரிப்புத்தான்.அப்பா பாவம் !

08 April, 2012 00:36
:/ஹீ நீங்க அண்ணா சொல்லுங்கோ ரீரீ சொல்லுங்கோ எனக்கு பிர்ச்சனை இல்லை பதிவுலகில் சில விடயத்தில் நான் தனிமரம் தான் யார் கூடவும் உங்களைப்போல கூட்டனி இல்லை சுயேட்சைதான் காரணம் கருத்துக்கள் முக்கியமே தவிர ஒரு ஓட்டும் பின்னூட்டமும் எங்கள் திறமையை எந்த ஒளிவட்டமும் மறைக்க முடியாது இது நான் இந்த வாரம் கண்ட உண்மை!

தனிமரம் said...

ஹேமா இந்த காட்டான் என் விருப்பத்தில் பாட்டுத்தான் போடமாட்டார் பின்னூடமுமா ???
இனி வரமாட்டன் நாளைவாரன்!அவ்வ்வ்வ்

தனிமரம் said...

அக்காள் உரிமையுடன் ஒரு வார்த்தை!
உங்க தளத்தில் இன்னொரு கண்ணனின் பெயரில் ஒரு பதிவாளர் பெயர் பார்த்தேன் எனக்குப்புரியாது இந்த ஹிட்மேனியா??ஏன்னா நான் தனிமரம் அவர் என் முகநூலில் இருந்தார் நட்பாக குழல் ஊதிக்கொண்டு (மறுபெயர்) ஒரு நடிகரை விமர்ச்சித்தது பொறுக்காமல் ஓடிப்போனவர் என்னை அவருக்குப் பிடிக்காது அதுக்கு ராகுல் வளர்ந்த இடம் இவர் இருவரையும் ஒன்றாக நோக்குவதுஎனக்குத் தெரியும் இது வேண்டாம் நட்பு என்று ஒதுங்கி இருக்கின்றேன் பிழை என்னிடம் இல்லை உங்களுக்கு தெரியும் சரி என்றாள் அரசியல் பேசிவேன் யார் தடுத்தாலும் ஏன்னா எனக்கு ஒட்டும் பின்னூட்டமும் முக்கியம் இல்லை இது தெரிந்த அக்காள் என்பதால் பின்னிரவில் பேசுகின்றேன்!!

தனிமரம் said...

என் ஏழுத்துப்பிழையுடன் கூடிய கிறுக்கல்கள் பிழை என நினைத்தால் முகத்துடன் வாருங்கள்  உறவுகளே! 
பதில் தருவேன் தனிமரம்!

விச்சு said...

பாதை

வாழ்க்கையில் இரு பாதைகள்
எப்போதும் உண்டு
இரண்டும் ஒன்றாய்த் தோன்றினாலும்
செல்லுமிடம் வெவ்வேறு
ஒன்று இன்பத்துடன் ஆரம்பித்து
துன்பத்தில் முடியும்
மற்றொன்று கஷ்டத்தில் ஆரம்பித்து
மகிழ்ச்சியில் முடியும்
உன் பாதை உன்கையில்...

அப்பாதுரை said...

கணேஷ், யோகா அப்பா டாப்.

அப்பாதுரை said...

பாதையோரம்
எந்த ராமனுக்காகக் காத்திருக்கிறாள்
இந்த அகலிகை?

அப்பாதுரை said...

வளர்பிறை தேய்பிறையைப்
புரிந்து கொண்டது
நிலவு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பாட்டி
வடை சுடவில்லை
ஆம்ஸ்ட்ராங்கின்
பாதச்சுவடுகள் அது
அறிவியல் ஊட்டப்படுகிறது
பிஞ்சு மனதிலேயே

T.V.ராதாகிருஷ்ணன் said...

பாதை மாறாமல்
தனிமரமாய் இல்லாது..
வாழ்ந்து பார்
கண்முன் கொட்டிக்கிடக்கும்
ஆயிரம் பாதைகள்

Yoga.S. said...

எல்லோருக்கும் காலை வணக்கம்!குட் மோர்னிங்!பொன் ஜூர்!!!குட்டின் மோர்கன்!!!

Yoga.S. said...

அப்பாதுரை said...

கணேஷ், யோகா அப்பா டாப்.////போச்சுடா!அதை எழுதுவதற்கு உட்கார்ந்து யோசித்த இடத்தைச் சொன்னால்,"மூக்கை"ப் பொத்திக் கொண்டு ஓடி விடுவீர்கள்,அப்பாத்துரை சார்,ஹ!ஹ!ஹா!!!!!!!

Yoga.S. said...

என்னுடைய கவிதை(உரை நடை?): ஒற்றை வழி ஆகாதென்று இரட்டை வழி ஆக்கினரோ? இரட்டை வழி பிரிவதற்கும், இரட்டை மரம் காரணமோ? தப்பித்தேன், ஒற்றைமரம் இருந்திருந்தால், நான் தான்!நானே தான் என்று, நேசனும் உரைத்திருப்பார்!

Yoga.S. said...

ஹேமா said...

யோகா அப்பா....கலா கருப்புப்பட்டி...எனக்கு ஒரே சிரிப்புத்தான்.அப்பா பாவம் !////பாத்தியே,பாத்தியே?சொன்னாக் கேக்கிறியா?மண்டபத்தில ஆரோ எழுதிக் குடுத்தத வாங்காத,வாங்காத எண்டு தலை,தலையா அடிச்சனே,கேட்டியா?உனக்கு இதுகும் வேணும் இன்னமும் வேணும்!இப்ப நிக்க இருக்க ஏலாம குறுக்கை,நெடுக்கை நடக்கிறதில என்ன விடியப் போகுது?போ,போய் ஒழுங்கா சொந்தமா ஏதாச்சும் எழுதி, பரிசு கூடவோ,குறைச்சலோ வாங்கப் பார்!வீட்டில அடுப்பு எரிய வேணாமோ????

Yoga.S. said...

காட்டான் said...

எங்கட அண்ணனுக்கு தன்ர சொந்தங்கள விட்டுக்குடுக்க மனம் வராது.. இந்த தற்குறியையும் புலவராக்கி அழகு பாக்கிறாரே.. நன்றியண்ண..!!!! ;-)///வணக்கம் காட்டான்!உள்ளதச் சொன்னா,எல்லோருக்கையும் ஒரு புலவர் இருக்கத்தான் செய்கிறார்!வெளிப்படுத்துவதில் தான் ...................................!

Yoga.S. said...

எல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்,காலை வணக்கமும்!

தமிழ் உதயம் said...

தாமதமாக வந்ததால் எல்லோரது கவிதைகளையும் வாசிக்க முடிந்தது. அருமை.

ஸ்ரீராம். said...

இப்போதுதான் பார்க்கிறேன்... முயற்சி செய்கிறேன்...என்ன, மடக்கி மடக்கி எழுதறதுதானே என் போன்றவர்களுக்குக் கவிதை?!

ஸ்ரீராம். said...

பயணங்களை
பாதைகள்
முடிவு செய்வதில்லை

பாதைகளை வைத்து
பயணங்கள்
முடிவு செய்யப்படுவதில்லை.

சேருமிடம் குறித்து
தெளிவிருந்தால்
பாதைகளின் தரம்
பார்க்கவேண்டியதில்லை

பாதைகளுக்கு
பயண முடிவும்
தெரிந்திருப்பதில்லை

வழியைக் காட்டி
வலிகளைச் சுமக்கும்
பாதைகளின்
தியாகத்தை
உணர்ந்தாரில்லை
பாதைகளைச் சீர் செய்தாருமில்லை.

கடினமான
பாதைகளே
கனவு இலக்குகளை
அடைய உதவுகின்றன

ஸ்ரீராம். said...

காதலுக்கும்
கவிதைக்கும்
களம் ஆகும்,
கனம் சேர்க்கும்
அந்த நிலவைப் பாரடி
என் கண்ணே...

கவிதை சொல்வது
அஞ்ஞானம்
உண்மை சொல்லுது
விஞ்ஞானம்
வெண்மை காட்டும்
நிலவுகள்
உண்மையில்லை
உயிர் வாழும் தன்மை
அதில் இல்லை,
தண்மையுமில்லை

கனவுகளை உடை
கடமையை நினை
காரியத்தில் நனை
வையம் போற்றும் உனை!

ஸ்ரீராம். said...

இன்னும் கொஞ்சம் முயற்சிகள்...

நிலவின் நினைவுகள் போன்றே
பாதைகளில் பயணங்களும்
சுகமானவை.

படங்கள் அருகருகே இருந்தாலும்
அமைக்க முடிவதில்லை
நிலவுக்குப் பாதை!

=================

எல்லா பாதைகளும்
வாழ்வின் ஏதோவொரு
சொல்லாத்
தனிமைச் சோகத்தைச்
சொல்லியே நகர்கின்றன!

மீண்டும் ஒரு
மழை வரலாம்
மரங்கள் துளிர்க்கலாம்
பாதைகள் பசுமையாகலாம்...

கனவிலும்
எதிர்பார்ப்பிலுமே
பாதைகளாய்
நகர்கிறது வாழ்க்கை.

பாதைகள் பல என்றாலும்
பயணம் என்னவோ
ஒன்றுதானே...

பாதைகளுக்குத் தெரிவதில்லை
பயணத்தின் வழியும், வலியும்!

ராமலக்ஷ்மி said...

ஹேமா, என்னை விடுங்க. எத்தனை கவிதைகள்!!! அனைத்தும் அருமை. குறிப்பாக ஸ்ரீராம் இத்தனை அருமையாக கவிதை எழுதுவார் என்பதை உங்கள் அழைப்பே எங்களுக்கு அறியத் தந்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

கவிஞர்களின் ஒவ்வொரு வரிகளும் அட்டகாசம்! அனைவருக்கும் பாராட்டுக்கள் !

ஸ்ரீராம். said...

நன்றி ராமலக்ஷ்மி....உங்கள் பாராட்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. வாய்ப்பளித்த ஹேமாவுக்கு நன்றி.
இன்னும் நான்கு வரிகளோடு நிறுத்திக் கொள்கிறேன்....!! :)))

ஒற்றை நிலாவும்
'ஒத்தையடிப் பாதை'யும்
கிளரும் உணர்வுகளை,
நட்சத்திரக் கூட்டமும்
நகரத்துச் சாலைகளும்
எழுப்புவதில்லைதான்!

(எனக்கு எப்போதுமே மனதுக்குள் ஒரு கிண்டல் கலந்த நினைப்பு உண்டு... 'ஏதோ ஒரு', 'தான்', வார்த்தைகளைக் கலந்தாலே கவிதையாகி விடுகின்றன...சாதாரண வார்த்தைகளுக்கு நடுவில் இவற்றைப் மடக்கிப் போட்டு கவிதையாக்கி விடலாம் என்று நினைப்பேன்!)

அப்பாதுரை said...

ஸ்ரீராம் super star!

ஹேமா said...

உண்மையில் மிக மிக சந்தோஷமாக உணர்கிறேன்.இப்பிடி எல்லாரும் ஆர்வமா எழுதுவீங்கள் என்றால் 6 மாதமொருமுறையாவது ஊக்கம் கொடுக்கலாமே.பாருங்களேன் எழுதவராது எண்டு சொன்ன எல்லாரும் கலக்குறாங்கள்.முக்கியமா ஐடியா மணி,நேசன்,ஸ்ரீராம்.ஏனென்றால் இவர்கள் மூவரும் கவிதை சாதாரணமாக எழுதியதாக நான் காணவில்லை !

ஐடியா மணி அவர்களிடம் ஒரு நகைச்சுவை பதிவு எதிர்பார்க்கிறேன்.அவருக்கு நேரமில்லையாம் பாருங்கோ.அவர் முகப்புத்தகம்,வதனப்புத்தகத்துக்குள்தானாம் முகத்தை வச்சுக்கொண்டு கிடக்கிறார்.பதிவும் போடாமல் லீவு எடுத்துக்கொண்டெல்லோ கிடக்கிறார்.என்ன கொடுமையடாப்பா !

காட்டான் மாமா கவிதை எழுதாட்டியும் இரவோட இரவா வந்து 100 போட்டிருக்கிறீங்கள்.மச்சான் எப்பிடி இருக்கிறார் !

கணேஸ்,தமிழ் உதயம்,கூடல் பாலா எழுதமுடியும்.எதிர்பார்க்கிறேன் !

ஹேமா said...

துபாய் ராஜா....அதிசயம்.அப்போ என் பதிவுகள் பார்க்கிறீர்கள்.நான்கு கவிதைகளும் மிக மிக அருமையான கருக்கொண்ட கவிதை.உண்மையில் சந்தோஷமாயிருக்கு ராஜா !

வஸீர் அலி,ஹஸீம் ஹாஃபி,AROUNA SELVAME இவர்கள் மூவரும் என் தளத்திற்குப் புதியவர்கள்.என்றாலும் அழகான கவிதைகள் எத்தனை ஆர்வத்தோடு எழுதியிருக்கிறார்கள்.

ஹேமா said...

நேசன்தான் அதிசயம் எனக்கு.கலக்கோ கலக்கென்று கலக்கிட்டார்.மமசில உள்ளதெல்லாம் ள்ளி எழுத்தில் விட்டிருக்கிறார்.கலையோடு சேர்ந்து எழுதிய கவிதை அருமை அருமை !

கலை காக்கா காக்கா பறந்து வா எண்டு அவரது உலகப் புகழ் பெற்ற கவிதையும் மற்ற ஹைக்கூக் கவிதைபோல 2 கவிதைகளும் சூப்பர் கருவாச்சி !

ஹேமா said...

இராஜராஜேஸ்வரி...ஆன்மீகத்தோழி கவிதையும் எழுத வருகிறதே உங்களுக்கு.அதுவும் வாழ்வின் தத்துவத்தோடு மனதில் பதிகிறது வரிகள்!

விச்சு...மிக மிகச் சந்தோஷம்.உன் பாதை உன் கையில் என்று ஆர்வத்தோடு எழுதிய வரிகளுக்கு !

ஹேமா said...

அப்பாஜி...குட்டியாய் ஆனால் அற்புதம்.அந்தப் படங்களை 3 வரிகளுக்குள் அடக்கிவிட்டீர்களே.ஏன் இப்படியான கவிதைகளை உங்கள் பதிவுகளில் காணக்கிடைப்பதில்லை.பேய்,பூதம்,பொலிஸ்,கள்ளன் எண்டு ஆகாயமும் அடுத்த ஜென்மமும் என்று பயமுறுத்துறீங்களே எப்பவும் !


ராதா ஐயா...இரண்டு ஹைக்கூக்களுமே அற்புதம்.குட்டிக்கவிதை உங்களுக்குக் கைவந்த கலை.மூடத்தனம் தவிர்த்து அறிவியலைச் சொல்கிறது பாசம்.பாதை வாழ்வியல்.மிக்க மகிழ்ச்சி.உங்கள் பதிவில் பதிவிட்டுக்கொள்ளுங்கள் !


ஸ்ரீராம்...எங்கள் புளொக்கிற்கே பெருமை.//படங்கள் அருகருகே இருந்தாலும்
அமைக்க முடிவதில்லை
நிலவுக்குப் பாதை!//

//படங்கள் அருகருகே இருந்தாலும்
அமைக்க முடிவதில்லை
நிலவுக்குப் பாதை!//

எனக்கு நல்லாவே பிடிச்ச வரிகள்.கடைசியாய் இருப்பதில் ஒரு மாற்றம் நல்லாயிருக்குமே.//நட்சத்திரக் கூட்டமும்
நகரத்துச் சாலைகளும்
எழுப்புவதில்லைதான்!//

நட்சத்திரம் இயற்கை அழகானது.அதை விட்டு மின்சார விளக்கையும்,நகரத்துச் சாலையையும்
சேர்த்துப்பாருங்களேன் !

மடக்கி மடக்கி எழுதினால் கவிதை என்று சொல்லிட்டு கலக்கிட்டீங்களே.யோகா அப்பா,அம்பலம் ஐயா போல !

பால கணேஷ் said...

தனித்தனியே வந்து
ஒன்றி‌ணைந்த பாதைகள்
சேர்த்தன எங்கள் கரங்களை..!
கோர்த்த கரங்கள் பிரிந்தன
இன்னொரு பாதைச் சந்திப்பில்!

உன் வழி உனது என் வழி எனதென
பிரிந்து சென்றவள்
மீண்டும் வரவேயில்லை..
இன்னும் காத்திருப்பில்...
பனி படர்ந்த காலையும்,
சாலையும், தனிமரமாய் நானும்!

ஹேமா said...

அம்பலம் ஐயா...15 வரிகளுக்குள் வாழ்க்கைப் பயணத்தையே சொல்லிட்டீங்கள்.உண்மையா சொல்லுங்கோ செல்லம்மா மாமிதானே எழுதித் தந்தவ.

//போ,போய் ஒழுங்கா சொந்தமா ஏதாச்சும் எழுதி, பரிசு கூடவோ,குறைச்சலோ வாங்கப் பார்!வீட்டில அடுப்பு எரிய வேணாமோ???? //

அப்பா மாட்டிக்கொண்டு முழுசிறார் பாருங்கோ.இப்பிடிப் புலம்பவிட்டுக்கிடக்குத் தனிய.பதிவோட சேர்க்கப்போறன் இந்தப் புலம்பலையும் !

Yoga.S. said...

ஹேமா said...

அம்பலம் ஐயா...15 வரிகளுக்குள் வாழ்க்கைப் பயணத்தையே சொல்லிட்டீங்கள்.உண்மையா சொல்லுங்கோ செல்லம்மா மாமிதானே எழுதித் தந்தவ.

//போ,போய் ஒழுங்கா சொந்தமா ஏதாச்சும் எழுதி, பரிசு கூடவோ,குறைச்சலோ வாங்கப் பார்!வீட்டில அடுப்பு எரிய வேணாமோ???? //

அப்பா மாட்டிக்கொண்டு முழுசிறார் பாருங்கோ.இப்பிடிப் புலம்பவிட்டுக்கிடக்குத் தனிய.பதிவோட சேர்க்கப்போறன் இந்தப் புலம்பலையும் !///இந்தப் புலம்பலுக்கு முதல் ஒரு (வசன?!)கவிதையும் எழுதியிருக்கிறன்!எல்லாம் "அங்க" இருந்து யோசிச்சது தான்,ஹ!ஹ!ஹா!ஹோ!ஹோ!ஹூ!!!!!

ஹேமா said...

இவ்வளவு பேரைப்பற்றியும் கதைச்சிட்டு மகேந்திரன்,ஹேமா பற்றி மட்டும் கதைக்கேல்ல.

மகியைப் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை.அற்புதமான கவிஞர் அவர்.பாதையை மதத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்.சிந்தனை அற்புதம்.படங்களுக்கும் பாராட்டு.மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது மகி !


ஹேமா...என்னை நானே தட்டிக்கொடுத்துள்றன்.ஒருத்தரும் சொல்றீங்கள் இல்ல.அதுதான் நானே...!

துரைடேனியல் said...

நாலு நாளா ஊர்ல இல்லை. ஈரோட்டுக்கு போயிருந்தேன். இன்றுதான் வந்தேன். அதுக்குள்ள இவ்ளோ விஷயம். நடந்திருக்கா? சரி. கவிதைன்னு சொல்லிட்டீங்க. நானும் எழுதாட்டி எப்படி? இதோ வரேன்.

Yoga.S. said...

ஹேமா said...

இவ்வளவு பேரைப்பற்றியும் கதைச்சிட்டு மகேந்திரன்,ஹேமா பற்றி மட்டும் கதைக்கேல்ல.

மகியைப் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை.அற்புதமான கவிஞர் அவர்.பாதையை மதத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்.சிந்தனை அற்புதம்.படங்களுக்கும் பாராட்டு.மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது மகி !


ஹேமா...என்னை நானே தட்டிக்கொடுத்துள்றன்.ஒருத்தரும் சொல்றீங்கள் இல்ல.அதுதான் நானே...!///ஹய்யோ,ஹய்யோ!!!இது ஒரு பெரிய விசயமெண்டு?"கடேசி"யா வாழ்த்துவம்,பரிசு ஏதாச்சும் குடுப்பமெண்டு தான் ரூம் போட்டு யோசிச்சனாங்கள்!உங்களுக்கு நீங்களே அவார்ட் குடுத்ததால எல்லாம் போச்சு,போயே போச்சு!எல்லாரும் எஸ்கேப் ஆகீட்டினம்,காசு மிச்சமெண்டு!ஓ.கே!அது தான் முடிஞ்சுதே?நான் எண்டாலும் வாழ்த்துறன்,பிடியுங்கோ வாழ்த்தை!!!!

துரைடேனியல் said...

பாதை
-----

வாழ்வுப் பாதையா
சாவுப் பாதையாவென
தெரியாமலே
தொடர்கிறேன்

இருத்தலை
நான் விரும்பவில்லை
பயணிக்கவே விரும்புகிறேன்
இருந்து சாவதைவிட
பயணித்து சாவது
கௌரவம்.

ஹேமா said...

கருவாச்சி வந்தாச்சு.பசியும் போயாச்சு.வாடா செல்லம்.சந்தோஷம் வாழ்த்துக்கு.என்ன செய்ய கேட்டு வாங்கவேண்டிக்கிடக்கு !

அப்பா காப்புச் செய்து தாறன் எண்டு சொன்னவர்.நான்தான் வேணாம் சொல்லியிருக்கிறன்.பிறகு வாங்கிற நேரமொண்டு வருமெல்லோ.அப்ப கேட்டு வாங்குவன் !

Yoga.S. said...

கலை said...

hemaaaaaaa akkaa vai aaravathu paartheengalaaaaaaaaaaaaaaaaaaaaa......................////கலை,நேசன் வீட்டில தேடுது.

Anonymous said...

அக்கா நீங்களெல்லாம் கவிதாயினி ஆயிட்ரே ..

உங்கட கவிதை எப்போதுமே சுப்பெர்ரா இருக்கும் ...

Yoga.S. said...

ஹேமா said...

கருவாச்சி வந்தாச்சு.பசியும் போயாச்சு.வாடா செல்லம்.சந்தோஷம் வாழ்த்துக்கு.என்ன செய்ய கேட்டு வாங்கவேண்டிக்கிடக்கு !

அப்பா காப்புச் செய்து தாறன் எண்டு சொன்னவர்.நான்தான் வேணாம் சொல்லியிருக்கிறன்.பிறகு வாங்கிற நேரமொண்டு வருமெல்லோ.அப்ப கேட்டு வாங்குவன் !////(காப்பு)தங்கத்தில தான?ஹி!ஹி!ஹி!!!!!

துரைடேனியல் said...

பாசம்
-----

பாலருந்த மறுப்பது
ஏனடா கண்ணா?
களங்கம்
நிலவில் மட்டுமில்லை
என் பாலிலும்
உண்டென்று
யாரேனும் உரைத்தனரோ?

உலகில்
கலப்படமில்லாத
ஒரே பொருள்
இதுதானடா
பருகு...
பாலை மட்டுமல்ல
பாசத்தையும்.

Anonymous said...

ஓஒ மாமா அதுக்குத்தான் அந்த காத்த்துப் போன சைக்கிள் டயரை தேடிக் கொண்டு இருக்கினம் ..

காத்துப் போன டயரை வேஸ்ட் ஆக்காமல் காப்பு செய்து ஹேமா அக்காக்கு கொடுக்கிறாங்க யோகா மாமா ...கலகிட்டிங்க மாமா

Anonymous said...

மாமா தங்கத்துல காப்பு செய்து உங்கட மருமக க்கு கொடுங்கோ ...கடைசி காலஹ்தில் மருமக தான் நல்ல பார்த்துக் கொள்ளுவினம் ...

அந்த காத்துப் போன டயரை எடுத்து காப்பா போட்டுங்க சொல்லுங்க உங்க மகளை

ஹேமா said...

அப்பா.....அப்பா பிடியுங்கோ உந்தக் காக்காவை.சைக்கிள் டயரில எனக்குக் காப்பாம்.கருவாச்ச்சிசிசிசிசிசிசி !

இப்ப தங்கம் விலை கூடிப்போச்சு.வேணாம்.உங்கட எல்லாரின்ர அன்பை விட என்ன தங்கம் வேண்டிக்கிடக்கு !

நான் இப்ப அரசியெல்லோ !

ஹேமா said...

அப்பா....கருவாச்சி !

Yoga.S. said...

ஹேமா said...

அப்பா.....அப்பா பிடியுங்கோ உந்தக் காக்காவை.சைக்கிள் டயரில எனக்குக் காப்பாம்.கருவாச்ச்சிசிசிசிசிசிசி !

இப்ப தங்கம் விலை கூடிப்போச்சு.வேணாம்.உங்கட எல்லாரின்ர அன்பை விட என்ன தங்கம் வேண்டிக்கிடக்கு !

நான் இப்ப அரசியெல்லோ !////அதானே???இலவரசிங்க தான் பணிவா இருக்க வேணும்,ஆங்!!!!!!!!!

Anonymous said...

ரீ ரீ அண்ணா அன்னிக்கு எந்த ஊரு ...யாழ்ப்பாணமா அல்லது பிராஞ்சுக் காரங்களோ

Yoga.S. said...

ஹேமா said...

அப்பா....கருவாச்சி !//////கலை,அக்கா சொல்லுக் கேக்க வேணும்,ஆஆ........!

Yoga.S. said...

கலை said...

ரீ ரீ அண்ணா அன்னிக்கு எந்த ஊரு ...யாழ்ப்பாணமா அல்லது பிராஞ்சுக் காரங்களோ?////Good Question!

Anonymous said...

ஓமாம் அக்கா ..மறந்துப் போச்சி நீங்கள் இப்போ அரிசி தான் ..பொன்னி அரிசியா புளுங்கள் அரிசியா ....

ஹேமா said...

சத்தியமா எனக்கு முடியாது.அப்பா கருவாச்சி....பொன்னி அரிசியா புளுங்கள் அரிசியா ....!

Anonymous said...

மாமா அண்ணாவோட பதிவில் கீக்கணும் நினைச்சினம் ...அண்ணா ப்ளோகில் போடுரணன் நிணத்தி அக்கா blokkil மாத்தி போஸ்ட் பண்ணி போட்டு விட்டணம் மாமா ...

Anonymous said...

Yoga.S.FR said...
ஹேமா said...

அப்பா....கருவாச்சி !//////கலை,அக்கா சொல்லுக் கேக்க வேணும்,ஆஆ........!///


அதான் மாமாவே சொல்லி விட்டினம் ஹேமா அக்கா என்னோட பேச்சை தான் நீங்கள் கேக்கணும் எண்டு ...நான் என்ன சொன்னாலும் ஆ ஆ எண்டு தான் சொல்லணுமாம் ...அதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசக் குடாதாக்கும்

Yoga.S. said...

இரவு உணவின் பின் தொடரும்!

Anonymous said...

சத்தியமா எனக்கு முடியாது.அப்பா கருவாச்சி....பொன்னி அரிசியா புளுங்கள் அரிசியா ....!///


அப்புடி எல்லாம் சொல்லாதிர்கள் அறிசியாரே!!
உங்களால் முடியாதது ஒண்டுமே இல்லை ......

இளவரசி சொல்லுறேன் கேள்ளுங்கோ எம் அரிசி ஹேமா அக்கா ஒரு புளு(ந)கள் அரிசி தான் ...சரிதானே மாமா

Yoga.S. said...

முன்பெல்லாம் "பொன்னி" யில் பச்சை மட்டுமே வந்தது!இப்போது புளுங்கலும் வருகிறது!ஆமா,எப்போ சமைக்கப் போகிறீர்கள் இருவரும்?

Yoga.S. said...

கலை said...

சத்தியமா எனக்கு முடியாது.அப்பா கருவாச்சி....பொன்னி அரிசியா புளுங்கள் அரிசியா ....!///


அப்புடி எல்லாம் சொல்லாதிர்கள் அறிசியாரே!!
உங்களால் முடியாதது ஒண்டுமே இல்லை ......

இளவரசி சொல்லுறேன் கேளுங்கோ, எம் அரிசி ஹேமா அக்கா ஒரு புளு(ந)கல் அரிசி தான். ...சரிதானே மாமா?////அப்பா......!இந்த(அந்த) வாயாடிகிட்ட எவன் மாட்டப் போறானோ?

ஹேமா said...

அப்பா முதல் நீங்க சாப்பிட்டு வாங்கோ.நான் ஒரு கை பிடிக்கிறன் இந்தக் கருவாச்சியை !

ஆராச்சும் வந்து காப்பாத்துங்கோ.காக்கா கொத்துது !

Anonymous said...

மாமா ,ஹேமா அக்கா மாறி நான் bad கேர்ள் இல்லை .... நான் ரொம்ப சமத்துப் போனாக்கும் நானே சமத்து தான் சாப்பிடுறேன் ...

Anonymous said...

!இந்த(அந்த) வாயாடிகிட்ட எவன் மாட்டப் போறானோ?////


அயயோஒ எனக்கு ஒரே ஸ்இ ஷியா இக்குதே ,,,,ஹேமா அக்கா உங்கட பின்னாடி வந்து நான் மறைஞ்சி கொள்ளுவினம் ...

Yoga.S. said...

கலை said...

மாமா ,ஹேமா அக்கா மாறி நான் bad கேர்ள் இல்லை .... நான் ரொம்ப சமத்துப் போனாக்கும் நானே சமத்து தான் சாப்பிடுறேன் ...////அக்காவும் (GOOD GIRL)குட் கேள்!தங்கச்சியும் குட் கேள்(GOOD GIRL தான்!

ஹேமா said...

அப்பா...நான் மட்டுமென்னவாம்.நானும் சமைச்சுத்தான் சாப்பிடுறன்.

அச்சோ...கருவாச்சிக்கும் வெக்கமாம்.எனக்குப் பின்னால ஒளியிறாவம்.அப்ப பரவால்ல !

Anonymous said...

அவ்வவ் இது எண்ணக் கொடுமை யா இக்குது ....காக்கா போயி இன்னோர் kaakkavaஇ கொத்துமா என்னா

மாமா நீங்க தெம்பா சாப்பிட்டு வாங்கோ ....ஹேமா அக்காவை ஒரு கை பிடித்து தூக்கி விடுறான் ...

தனிமரம் said...

மாமா தங்கத்துல காப்பு செய்து உங்கட மருமக க்கு கொடுங்கோ ...கடைசி காலஹ்தில் மருமக தான் நல்ல பார்த்துக் கொள்ளுவினம் ...
//mmm உண்மைதான்!!!!

Anonymous said...

akkaa நீங்க சாப்பிட மட்டும் தன செய்வீங்க உங்களுக்கு சமையல் கட்டு எந்தப் பக்கம் இருக்கு எண்டுக் கூடத் தெரியாது எண்டு தானே அத்தான் சொல்லுறாங்க ...

தனிமரம் said...

இந்த(அந்த) வாயாடிகிட்ட எவன் மாட்டப் போறானோ?////
//ஹீ கருவாயன்!!!!யாரோ!!!!

தனிமரம் said...

akkaa நீங்க சாப்பிட மட்டும் தன செய்வீங்க உங்களுக்கு சமையல் கட்டு எந்தப் பக்கம் இருக்கு எண்டுக் கூடத் தெரியாது எண்டு தானே அத்தான் சொல்லுறாங்க ...

08 April, 2012 20:56//ஹீ ஹோட்டலில் சாப்பிடும் ஆட்கள் பலர்!கலை இங்கு!!

ஹேமா said...

வாங்கோ நேசன்.....உங்கட அத்தானை எங்கையெண்டாலும் கண்டீங்களோ.அவர்தானாம் எனக்குச் சமைச்சுத் தாறவர்.எனக்கே என்ர அத்தானைத் தெரியேல்ல.காண ஆசையாய்க்கிடக்கு !

மருமகளோ கடைசிக் காலத்தில பாப்பினம்.அப்பாவை நானும் பாத்துக்கொள்ளுவன் !

வேர்கள் said...

குழந்தையின்
வாயில் அம்மாவின்
அன்பு சோறு
ஏக்கத்துடன் நிலா !
தனக்கு ஒரு
பிடி வேண்டி....

ஆமா......
இது கவித தானே........
நாநா.... ஒன்னு காமடி கீமடி பண்ணலியே..... :) :)
(ஹேமா இதை கவிதையாக்கி தருவீர்களா?)

Anonymous said...

தனிமரம் said...
மாமா தங்கத்துல காப்பு செய்து உங்கட மருமக க்கு கொடுங்கோ ...கடைசி காலஹ்தில் மருமக தான் நல்ல பார்த்துக் கொள்ளுவினம் ...
//mmm உண்மைதான்!!!!////

அஹ்ஹா ஹா ஹா ...கொஞ்சம் சத்தமா சொல்லி போடுங்க அண்ணா உண்மையை...நிறைய பேர் கேட்டுக் கொள்ளட்டும் ...


அண்ணா பாருங்கோ இப்போம் ஒருவர் நம்டம் கருக்கு மட்டை கொண்டு சண்டை போடுவினம் ..நீங்கள் மாமா எனக்குத்தான் சப்போர்ட் எண்டு

தனிமரம் said...

அவ்வவ் இது எண்ணக் கொடுமை யா இக்குது ....காக்கா போயி இன்னோர் kaakkavaஇ கொத்துமா என்னா
//கவிதை எழுதச்சொன்னா இப்படி இருப்பது நிஜாமா!!!

தனிமரம் said...

அண்ணா பாருங்கோ இப்போம் ஒருவர் நம்டம் கருக்கு மட்டை கொண்டு சண்டை போடுவினம் ..நீங்கள் மாமா எனக்குத்தான் சப்போர்ட் எண்டு

08 April, 2012 21:00//நான் யாருக்கும் ஆதரவு இல்லை !ஹீ கருக்கு மட்டை அடி அப்பா!!!!

தனிமரம் said...

வாங்கோ நேசன்.....உங்கட அத்தானை எங்கையெண்டாலும் கண்டீங்களோ.அவர்தானாம் எனக்குச் சமைச்சுத் தாறவர்.எனக்கே என்ர அத்தானைத் தெரியேல்ல.காண ஆசையாய்க்கிடக்கு !//சத்தியமா இதுவரை காணவில்லை உப்புமடச்சந்தியில்!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

ஹேமா said...

//வேர்கள் said...

குழந்தையின்
வாயில் அம்மாவின்
அன்பு சோறு
ஏக்கத்துடன் நிலா !
தனக்கு ஒரு
பிடி வேண்டி....

ஆமா......
இது கவித தானே........
நாநா.... ஒன்னு காமடி கீமடி பண்ணலியே..... :) :)
(ஹேமா இதை கவிதையாக்கி தருவீர்களா?)//


வேர்கள் வாங்கோ சந்தோஷமாயிருக்கு.நீங்களும் இங்க.இதில திருத்த என்ன இருக்கு.ஒரு ஹைக்கூ.சூப்பர்.எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு !

Anonymous said...

அக்கா அத்தன் aarendeth theriyaathaa ....

avvvv ...unmaiyaavaaa

ஹேமா said...

சத்தியமா வேலை நாள்ல மட்டும்தான் வேலை இடத்தில சாப்பிடுவன்.நானே சமைச்சுத்தான் சாப்பிடுறன் நேசன்.

கருக்குமட்டை பிரயோசனமே இல்லை.கருவாச்சி எனக்கு முடியாது.அப்பாவும் அண்ணாவும் சின்னக்குட்டிக்குத்தான் செல்லம் !

தனிமரம் said...

ரீ ரீ அண்ணா அன்னிக்கு எந்த ஊரு ...யாழ்ப்பாணமா அல்லது பிராஞ்சுக் காரங்களோ?////Good Question!

08 April, 2012 20:30//ஹீ என் தளத்தில் பதில் சொல்லி விட்டேன்!

தனிமரம் said...

சத்தியமா வேலை நாள்ல மட்டும்தான் வேலை இடத்தில சாப்பிடுவன்.நானே சமைச்சுத்தான் சாப்பிடுறன் நேசன்.//நான் பகிடிக்கு சொன்னேன்!

தனிமரம் said...

கலையை கவிதை எழுதச்சொன்னால் ஆராட்சி செய்யுது ஹேமா! ஒரு கருக்கு மட்டை அடி கொடுக்கத்தான் வேனும்.

வேர்கள் said...

//குழந்தையின்
வாயில் //

இது சரியா?
நீங்க சொல்லித்தான் இது ஹைக்கூ கவிதை??.. என்று தெரியும் :)

தனிமரம் said...

கருக்குமட்டை பிரயோசனமே இல்லை.கருவாச்சி எனக்கு முடியாது.அப்பாவும் அண்ணாவும் சின்னக்குட்டிக்குத்தான் செல்லம் !//செல்லம் எல்லாம் இப்ப கொடுப்பது இல்லை முதலில் படிப்பு கலைக்கு முக்கியம்!

Anonymous said...

செல்லம் எல்லாம் இப்ப கொடுப்பது இல்லை முதலில் படிப்பு கலைக்கு முக்கியம்!////


ஓமாம் அக்கா ...அண்ணா சொல்லுவது எல்லாம் உண்மை தான் ..நம்புங்கோ ...இப்போது எல்லாம் அண்ணா வும் மாமாவும் எனக்கு செல்லம் கொடுப்பதே இல்லை ...எப்போதுமே கருக்கு மட்டை தான் ...அதான் அமைதியா இருகிரணன் ...

Anonymous said...

தனிமரம் said...
கலையை கவிதை எழுதச்சொன்னால் ஆராட்சி செய்யுது ஹேமா! ///

நான் எங்க அண்ணா ஆராட்ச்சி செய்திணன் ...நான் அமைதியா தான் இருக்கிறன் ..ஹேமா அக்காதான் ஆராய்ச்சி செய்யுறாங்க

Anonymous said...

ree ree அண்ணா உங்கட ப்லொக்கில் pooடுறதுக்கு பதிலா மாத்தி pottu விட்டினான் அண்ணா ..anagai pathil படிச்சி போட்டேநேல்லோ

Anonymous said...

இது சரியா?
நீங்க சொல்லித்தான் இது ஹைக்கூ கவிதை??.. என்று தெரியும் :)///


அதான் கவிதாயினியே சொல்லி வீட்டார்கள் அல்லோ கவிதை எண்டு ...இன்னுமா சந்தேகம் ...தைரியாமா காமியுங்கோ எல்லாரிடத்திலும் உங்கட ஹைக்கொவை ...
அது ஹைக்கோ maari தான் இருக்கு ...நம்புங்கோ ...நானும் பல ஆயிரம் ஹைக்கூகள் கடந்து ஒரு பெரிய கைக்கோவையே படைத்துள்ளேன்....ஜோ சாரி படித்துள்ளேன் .....

.உண்மையா சுப்பரா இருக்கு ..வாழ்த்துக்கள்

ஹேமா said...

கலை அமைதியா நல்ல பிள்ளையா இருக்கிறாவாம்.எல்லாரும் நம்புவம்.காக்கா காக்கா.கருவாச்சிக் காக்கா !

கலை அத்தானைத் தேடிப் பிடியுங்கோ.பாக்கலாம் !

ஹேமா said...

வேர்கள்...எங்கட கலை உங்களுக்கு ச் சான்றிதழ் தந்திட்டா.ஆனால் திருப்பி வாய் மட்டும் குடுக்காதேங்கோ.சொல்லிப்போட்டன்.பிறகு வரும் காயங்களுக்கு நான் பொறுப்பில்லை.காக்கா கொத்தும் !

தனிமரம் said...

ee ree அண்ணா உங்கட ப்லொக்கில் pooடுறதுக்கு பதிலா மாத்தி pottu விட்டினான் அண்ணா ..anagai pathil படிச்சி போட்டேநேல்லோ
08 April, 2012 21:20//ஓ அப்படியா! கலை!!

தனிமரம் said...

நான் எங்க அண்ணா ஆராட்ச்சி செய்திணன் ...நான் அமைதியா தான் இருக்கிறன் ..ஹேமா அக்காதான் ஆராய்ச்சி செய்யுறாங்க

08 April, 2012 21:19//ஹீ யார் நல்லகவிதை எழுதுறாங்க என்றுதானே ! என்னையும் சும்மா கிறுக்க விட்டு விட்டா !

Yoga.S. said...

என்னுடைய இடத்தை?!நிரப்பிய நேசனுக்கு நன்றி!இந்த(அந்த)ரெண்டு பேருக்கும் விலக்குப் பிடிப்பது,அப்பப்பா!முடியாது சாமி.

ஹேமா said...

அப்பா...நானோ கரைச்சல் தாறன்.வாய் காட்டுறன்.உண்மை சொல்லுங்கோ.பாருங்கோ வேர்களைக் கூட விட்டு வைக்கேல்ல கருவாச்சி !

Yoga.S. said...

கலை said... நான் எங்க அண்ணா ஆராட்ச்சி செய்திணன் ...நான் அமைதியா தான் இருக்கிறன் ..ஹேமா அக்காதான் ஆராய்ச்சி செய்யுறாங்க.////இல்லியே,நீங்க தானே ஆராய்ச்சி சம்பந்தமா....................!அப்புடி இல்லியா?சரி விடுங்க.மணி ஆவுது,தூங்கலாமா?குட் நைட்!

ஹேமா said...

இரவு வணக்கம் யோகா அப்பா.அமைதியான சுகமான நித்திரை கொள்ளுங்கோ !

கலை,நேசன் உங்களுக்கும் என் அன்பான நன்றி !

Anonymous said...

அவ்வவ் அத்தன் நை நீங்களே பார்க்கலையா ...சரி விடுங்கோ அக்கா...சிக்கிரமா கண்டு பிடிக்கலாம் அத்தானை...

Anonymous said...

அயயோஒ அக்கா நான் ரொம்ப குழம்பித் தான் போயினான் ....நீங்கள் நிலாக்கு எழுதிய கவிதை எல்லாம் படிச்சிப் போட்டேன் ....உங்களை 7வயது நிலா அம்மாவாய் தான் கற்பனை பண்ணி வைத்து இருந்தேன் ...அவ்வ்வ்வவ்

ஆத்தாடி ஹேமா அக்கா நீங்களும் நானும் ஒரே வயது தான் எண்டு நினைகிறேன் ..நோஒ நோஒ நோஒ நோஒ நோஒ என்னால நினைச்சிக் குட பார்க்க முடியலே ...

Yoga.S. said...

ஹேமா said...

அப்பா...நானோ கரைச்சல் தாறன்.வாய் காட்டுறன்.உண்மை சொல்லுங்கோ.பாருங்கோ வேர்களைக் கூட விட்டு வைக்கேல்ல கருவாச்சி !////அவவுக்கு வேரென்ன,மரமென்ன?சின்னப் பொண்ணு.அறியா வயசு!பெரியவர்கள்,நாம் தான் கொஞ்சம் புத்தி சொல்லி ......................

Anonymous said...

ஹேமா said...
அப்பா...நானோ கரைச்சல் தாறன்.வாய் காட்டுறன்.உண்மை சொல்லுங்கோ.பாருங்கோ வேர்களைக் கூட விட்டு வைக்கேல்ல கருவாச்சி !///

உங்கட மேல டவுட்டு வேர்கள் அவவுக்கு ... அதான் சந்தேகமாய் கேள்வி கேட்டுப் போட்டவை ....
நீங்கள் சொன்ன சரியா இருக்கும்னு சப்போர்ட் பண்ணினனாக்கும் ....

சாமி ஹேமா அக்காக்கு சப்போர்ட் பண்ணினக் குட தாப்பு தப்பா திந்க்பண்ணுதே அக்காவோட கிட்னி ....

Yoga.S. said...

கலை said...

அயயோஒ அக்கா நான் ரொம்ப குழம்பித் தான் போயினான் ....நீங்கள் நிலாக்கு எழுதிய கவிதை எல்லாம் படிச்சிப் போட்டேன் ....உங்களை 7வயது நிலா அம்மாவாய் தான் கற்பனை பண்ணி வைத்து இருந்தேன் ...அவ்வ்வ்வவ்

ஆத்தாடி ஹேமா அக்கா நீங்களும் நானும் ஒரே வயது தான் எண்டு நினைகிறேன் ..நோஒ நோஒ நோஒ நோஒ நோஒ என்னால நினைச்சிக் குட பார்க்க முடியலே ...////நோ,நோ!அப்புடீல்லாம் சொல்லப்பிடாது!"அரசி" ன்னா அரசி தான்."இளவரசி" ன்னா இளவரசி தான்,மாத்தல்லாம் முடியவே முடியாது,சொல்லிப்புட்டேன்,ஆ ....

Yoga.S. said...

கலை said...

ஹேமா said...
அப்பா...நானோ கரைச்சல் தாறன்.வாய் காட்டுறன்.உண்மை சொல்லுங்கோ.பாருங்கோ வேர்களைக் கூட விட்டு வைக்கேல்ல கருவாச்சி !///

உங்கட மேல டவுட்டு வேர்கள் அவவுக்கு ... அதான் சந்தேகமாய் கேள்வி கேட்டுப் போட்டவை ....
நீங்கள் சொன்ன சரியா இருக்கும்னு சப்போர்ட் பண்ணினனாக்கும் ....

சாமி ஹேமா அக்காக்கு சப்போர்ட் பண்ணினக் குட தாப்பு தப்பா திந்க்பண்ணுதே அக்காவோட கிட்னி.////உஷ்!!!!!!!இப்புடீல்லாம் பேசக்கூடாது.பாக்கிறவங்க தப்பா நெனைப்பாங்க,இல்ல?

Anonymous said...

லை said... நான் எங்க அண்ணா ஆராட்ச்சி செய்திணன் ...நான் அமைதியா தான் இருக்கிறன் ..ஹேமா அக்காதான் ஆராய்ச்சி செய்யுறாங்க.////இல்லியே,நீங்க தானே ஆராய்ச்சி சம்பந்தமா....................!அப்புடி இல்லியா?சரி விடுங்க.மணி ஆவுது,தூங்கலாமா?குட் நைட்!/////


ஆஹா ஹா ஹா ஹேமா அக்கா நல்லாக் கேளுங்கோ ,பாருங்கோ ,படியுங்க என்ற மாமா சொல்லுறதை .....ஜங்கு ஜக்கு ஜங்கு ஜக்கு ச சா ச்ஹா..

ஓகே மாமா ...குட் நைட்...

ஹேமா அக்கா நன்றிக்கு நன்றி டாடா குட் நைட் ..

ரீ ரீ அண்ணா டாடா குட் நைட் ..

Yoga.S. said...

சரி,மணியாவுது!இன்னிக்குப் போதும்,நாளைக்கிப் பாக்கலாமா?

«Oldest ‹Older   1 – 200 of 241   Newer› Newest»

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP